Tuesday, January 27, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்

===================

ஐந்தாம் நாள் பதிவு எண் ஐந்து

யாழ்ப்பாணம் பொது நூலகம் Jaffna Public Library

=======================================

பொதுவாக எனக்கு நூலகங்கள் செல்வது மிகவும் பிடித்தமான விஷயம். அண்ணா நூல் நிலையம், கன்னிமாரா நூல் நிலையங்கள் எனது இல்லத்திலிருந்து தொலைவில் இருந்தாலும் நான் தவறாமல் சென்று புத்தங்கங்கள் எடுத்து வருகிறேன். இந்த முறை இலங்கை செல்லும்போது யாழ்ப்பாணம் நூல் நிலையம் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்ற ஆசை. நேரமின்மை காரணமாக உள்ளே செல்ல முடியவில்லை. ஆனால் வெளியில் இருந்து மிகவும் ரசித்தேன்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண நகரின் மையத்தில் உள்ள ஒரு பழமையான நூலகம். இது தமிழ் இலக்கியம், வரலாறு, கலாச்சாரத்தின் மிக முக்கியமான சாட்சியம் – ஆசியாவின் பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்தது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் முதல் தேதி எரிக்கப்பட்டுச் சாம்பலானது.] இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.

இந்த நிறுவனத்துக்கான கரு யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த கே. எம். செல்லப்பா (கனகசபை முதலித்தம்பி செல்லப்பா,( 24 பெப்ரவரி 1896 – 14 ஏப்ரல் 1958) என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன. (சமீபத்தில் கார்நாடகாவைச் சேர்ந்த அங்கெ கௌடாவுக்கு கடுமையான உழைப்பின் மூலம் பெரிய நூல் நிலையம் உருவாக்கியதற்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கி தன்னைக் கௌரவப்ப் படுத்திக் கொண்டது,


பிறகு யாழ் நகர சபையிடம் 1935 ல் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் புதியதாகக் கட்டப்பட்டது.. கட்டிடத்தை வடிவமைத்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த நரசிம்மன் என்பவர். 97,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், அரிய தமிழ் கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள், இலக்கியங்கள், வரலாற்று ஆவணங்கள் ஆகியவை இருந்தன.இது தமிழ் சமூகத்தின் அறிவு, கலாச்சாரம், கல்வி ஆகியவற்றின் மையமாக விளங்கியது. அந்தக் காலத்திலேயே இந்திய அரசு நூல் நிலையம் அமைய பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவியது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

1981-இல் நடந்த அரசியல் கலவரத்தில் சிங்களர்களால் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது எனக்கு இந்த நிகழ்வு நினைவில் உள்ளது. அப்போது இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன்.

ஆயிரக்கணக்கான அரிய தமிழ் கையெழுத்துப் பிரதிகள், நூல்கள், பழங்காலச் சுவடிகள் ஆவணங்கள் அழிந்தன.

இது உலகளாவிய அளவில் கலாச்சாரப் பேரழிவாக கருதப்பட்டது

200l ல் மீண்டும் நூலகம் புனரமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நூல் நிலையம், அழிவையும் மீட்பையும் சந்தித்த தமிழ் கலாச்சாரத்தின் உயிர்ப்புச் சின்னம். இதைப் புனரமைத்ததில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. இந்தக் கட்டிடத்தின் அருகே இலங்கையின் பண்பாட்டுக் கலாச்சார மையத்த்தின் கட்டிடத்தை நமது பிரதமர் சமீபத்தில் திறந்து வைத்தார். இது இந்திய அரசின் நன்கொடை.


யாழின் நூலகம், யுகம் தாங்கும் —

அறிவின் கோவில், கலாச்சாரச் சின்னம்;

எரிந்தாலும் எழுந்து நிற்கும் —

தமிழின் ஒளி, உலகின் பெருமை!



பயணம் தொடரும்




No comments: