Friday, January 2, 2026

 





 


வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

ஹனுமனின் எழுச்சி

பதிவு எண் 397

நேற்றைய தொடர்ச்சி

ஸ்கந்த புராணத்தில் இருந்து ஒரு சுலோகம்,


=======================

“निइलो अ~नगादो हनुमानं च जाम्बवान् अथ केसरी | समुद्र तीरं आगम्य न शेकुः स्पन्दितुम पदम् | रावणस्य बलं ज्ञानत्व तीरे नाद नदी पतेः

======================

இந்த சுலோகத்தின் பொருள்: “நீலன், அங்கதன், ஹனுமன், ஜாம்பவான், கேசரி ஆகியோர் கடற்கரையை அடைந்ததும், அவர்கள் பயத்தால் கால்களை எடுத்து வைக்க முடியாமல் நிற்கின்றனர்.. இராவணனின் வலிமையை அறிந்த அவர்கள், அநத, நதிக்கரையில் வீழ்ந்தனர் என்று கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது” என்பதாகும்.


=========================

சமுத்திரம் பாய்ந்தது, சலனமின்றி நின்றோம்,

சத்ரு பலம் தெரிந்ததும், சிந்தை மயங்கியது!

அங்கதன், ஹனுமான், ஜாம்பவன், நீலன்,

அடிக்கொரு அசைவும் செய்யாது நின்றனர்!

“ராவணன் வீரமோ? நம் உள்ளம் வீணோ?”

என்றே கேள்விகள் எழுந்தன உள்ளத்தில்!

அந்தக் கரை நமக்குக் கற்பனைக் கோட்டை,

அதைத் தாண்டும் துணிவே தெய்வத்தின் அருள்!

==========================


அனுமனின் நிலையைக் கவனித்த ஜாம்பவான் மனம் தெளிந்தான். ஸ்ரீ இராம காரியம் கைகூடுவதில் ஆற்றல் குன்றியதாகத் தெரியவில்லை. இவ்வொரு வானரத் தலைவனால் தான் அக்காரியம் நிறைவேறப்பெறும் என்று நன்கறிந்த ஜாம்பவான் ஹனுமனை நோக்கிப் பேசுகிறான்.

“வானர இனத்து தலைச்சிறந்த தனிப்பெரும் வீரனே! எல்லா சாஸ்திரங்களையும் கற்றறிந்து கருத்துணர்ந்த கலைஞனே!


======= ============

वीर वानर लोकस्य सर्व शास्त्र विदाम् वर |

तूष्णीम् एकांतम् आश्रित्य हनुमन् किम् न जल्पसि || ४-६६-२

===================

“என்ன இது? ஒரு தனி இடத்தை அடைந்து மௌனம் சாதிப்பது என்ன காரணமோ?


==================

हनुमन् हरि राजस्य सुग्रीवस्य समो हि असि |

राम लक्ष्मणयोः च अपि तेजसा च बलेन च || ४-६६-३

====================

இராமலக்ஷ்மனர்கள், சுக்ரீவன் முதலிய பெரியோர்களுக்கு வலிமையிலும் பராக்கிரமத்திலும் சமமானவன் நீ என்பதை நினைக்கவில்லை போலும். என்ன சிந்தனை செய்கிறாய்? அப்பனே! கருடனின் வேகம் உனக்குண்டு என்பதனை நான் அறிவேன்.

தொடரும்

No comments: