வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஹனுமனின் எழுச்சி
பதிவு எண் 398
நேற்றைய தொடர்ச்சி
திகைத்து நிற்கும் ஹனுமனுக்கு உற்சாகமூட்டுகிறான் ஜாம்பவான்.
======================
बलम् बुद्धिः च तेजः च सत्त्वम् च हरि सत्तम |
विशिष्टम् सर्व भूतेषु किम् आत्मानम् न सज्जसे || ४-६६-७
==============
உன் தோள்வலியும் அவன்(கருடன்) சிறகின் வேகமும் சமானமென்பதையும் எல்லாரும அறிவர். அவனது ஆண்மையும் உனதேயாகுமல்லவா? உனது ஆற்றலை அறிந்தல்லவா ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தனது கணையாழியை உன்னிடம் அளித்திருக்கிறார். அதன் சக்தி உன்னிடத்தில் பிரதிபலித்து பரிணமிக்குமன்றோ? இதில் சிந்தனைக்கு இடமுண்டோ? வானரோத்தமா! பலமும் புத்தியும், தேஜசும் சத்வ குணமும் மற்ற எல்லோரையும் விட உன்னிடத்தில் அதிகம் திகழ்வதை நீ மறந்தனை போலும். ஒப்புவமை இல்லாத அழகும், நினைத்த உருவமெடுக்கும் அஞ்சனா தேவி என்ற அப்சரஸ் மாதிடம் வாயு பகவானால் ஆக்கவைத்த உன் பிறவியின் மகிமையையும் நீ மறந்ததின் காரணமென்ன? வாயு பகவானான உனது தந்தையின் வேகம் உனதன்றி வேறு யாருக்குண்டு?
====================
அசையா கரை! நம் உள்ளம் அசையட்டுமே!
அஞ்சாதே வீரா! அருளே நம் ஆயுதமே!
சமுத்திரம் பாயும், சத்ரு பலம் மாயும்,
சத்ரு முன் மௌனமா? சூரியனை வலம் வந்தாய்!
----
அங்கதன் நின்றான், நீலன் மயங்கினான்,
ஜாம்பவன் சிந்தைத் தீயால் சுடர்த்தினான்!
“ஹனுமனே! எழு! பொங்கி எழு!
உன் பாய்ச்சலால் இலங்கை நடுங்கட்டுமே!”
வானர வீர! வானின் கனலே!
----
வாழும் அருளின் வாகை மலரே!
நீ பாயும் தருணம், நதி நடுங்கும் தருணம்,
நீ நினைக்கும் தருணம், உலகம் நிமிரும் தருணம்!
அசையா கரை! நம் உள்ளம் அசையட்டுமே!
அஞ்சாதே வீரா! அருளே நம் ஆயுதமே!
தொடரும்.
No comments:
Post a Comment