Sunday, May 17, 2026

    

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 111

 

நேற்றைய தொடர்ச்சி

 

சுக்ரீவன் சொல்வதின் தொடர்ச்சி..............

 

வாலியின் கோபம் 

 

बाली ताहि मारि गृह आवा। देखि मोहि जियँ भेद बढ़ावा॥5

रिपु सम मोहि मारेसि अति भारी। हरि लीन्हसि सर्बसु अरु नारी॥

ताकें भय रघुबीर कृपाला सकल भुवन मैं फिरेउँ बिहाला॥6

 

“வாலி மாயாவியைக் கொன்று விட்டு திரும்பி வந்தான்.  நான் அரியணையில் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவனுக்கு வெகுவாகக் கோபம் வந்தது. நாட்டை அடைய வேண்டும் என்ற ஆசையால்  குகையை விட்டு அவன் வெளியே வர இயலாத வகையில் குகை வாயிலை அடைத்து விட்டு வந்து நான் அரசனாகி விட்டதாக அவன் கருதினான் அவன் என்னை ஒரு விரோதியைப் போல் அடித்து நொறுக்கினான். என்னுடைய சொத்துக்களைப் பிடுங்கிக் கொண்டதுடன்  என் மனைவியையும் அபகரித்துக் கொண்டான்; நான் அவனுக்கு அஞ்சி செய்வதறியாமல்  உலகெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்.

 

வாலிக்கு சுக்ரீவனின் மீது கோபத்திற்கு முக்கிய காரணம் சுக்ரீவன் குகையின் வாசலை மலைபோன்ற ஒரு பாறையை வைத்து அடைத்துவிட்டது தான். அதனால் வாலியால் எளிதில் வெளிவரமுடியவில்லை.. வாலி தான் வெளியே வரக்கூடாது என்று சுக்ரீவன் தான் இந்த நாட்டை ஆளவேண்டும் என்ற தீய எண்ணத்தில் தான் குகையிலிருந்து தான் வெளியே வராதபடி குகையின் வாயிலை அடைத்துவிட்டான் என்று வாலி கருதியதாக வால்மீகி இராமாயணத்தில் வால்மீகி சொல்கிறார், இதைத்தான் வாலி தனது அரச சபையில் சொல்கிறான்

 

तत्र अनेन अस्मि सम्रुद्धः राज्यम् मृगयत आत्मनः |

सुग्रीवेण नृशंसेन विस्मृत्य भ्रातृ सौहृदम् || -१०-२५

 

“உடன்பிறந்த அன்பை மறந்து, தனக்கு ராஜ்ஜியத்தை விரும்பி, கற்பனையில் ஆழ்ந்தக் கொடியவனான இந்த சுக்ரீவனால் நான் அங்கே அடைக்கப்பட்டிருந்தேன்" என்றான் வாலி. இரண்டாவது அரசவாரீசான அங்கதன் இருக்கும்போது சுக்ரீவன் எப்படி அரசை ஏற்றுக் கொண்டா,ன்? மூன்றாவது வாலியின் மனைவியான தாரையுடன் சுகமாக வாழ்கிறான் என்று நினைத்தான் வாலி.

 

 

'हारि लीनहेसि सर्बसु अरु नारी என்னை எதிரியாக நினைத்து என்னிடமிருந்து அரசு மற்றும் எனது மனைவியையும் அபஹரித்துக்  கொண்டான்  வாலி.  அவர் மீது இருந்த பயத்தால் तद्धयाच्च महीं सर्वा क्रान्तवान्सवनार्णवाम्' உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து இந்த ரிஷ்முக மலையில் வந்து தங்கிவிட்டேன்

 

इहाँ साप बस आवत नाहीं। तदपि सभीत रहउँ मन माहीं॥

 

அவன் ஒரு சாபத்தின் காரணமாக இங்கு வருவதில்லை. இருப்பினும் மனதில் ஒரு பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றான் சுக்ரீவன்.

 

தொடரும்

Saturday, May 16, 2026

 

தொடரும்

 

காலை வணக்கம்

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 110

 

நேற்றைய தொடர்ச்சி

 

"(வாலி இறந்த அந்த உண்மையை) நான் எவ்வளவுதான் மறைக்க முயன்றபோதிலும் (गूहमानस्य मे - குஹமானஸ்ய மே), அமைச்சர்கள் எனது செய்கைகளை ஆராய்ந்து அந்த உண்மையை (तत्त्वं - தத்வம்) எப்படியோ அறிந்து கொண்டனர். அதன் பிறகு, அந்த மந்திரிகள் அனைவரும் ஒன்று கூடி வந்து, என்னை வற்புறுத்தி அரசனாக்கினர் (அபிஷேகம் செய்தனர்)." என்று சுக்ரீவன் சொல்வதாக வால்மீகி எழுதி உள்ளார். அதன் காரணம் அரசன் இல்லா தேசத்தின் மீது பகைவர்கள் படை எடுப்பர் என்று கருதியே தான் சொல்லவில்லை என்ற காரணத்திற்க்காக என்று உரையாசிரியர்கள் சொல்வதாக முந்தைய பதிவில் படித்தோம்.

.

.அதே நேரத்தில் ஆத்யாத்ம இராமாயணத்தில் சுக்ரீவன் तोडब्रवं॑ मृतो वाली गुहायां रक्षता हतः எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிட்டான்  என்று சொல்லபடுகிறது.

 

मंत्रिनह् पुर देखा बिनु साईं கிஷ்கிந்தையில் அரசன் இல்லை. இதைத் தெரிந்து பகைவர்கள் நாட்டின் மீது படை எடுத்து வரலாம் என்று கருதி அமைச்சர்கள் என்னை அரசனாக்கி விட்டனர் இப்படித்தான் வால்மீகி இராமாயணத்தில் வாலியிடம் बलात् अस्मिन् समागम्य मंत्रिभिः पुर वासिभिः || -१०-१० சுக்ரீவன் சொல்கிறான் ஆனால் துளசிதாசர் அதைப் பற்றி விரிவாக ஒன்றும் எழுதவில்லை. துளசிதாசர் இங்கு बरिआई॥ என்ற பதப் பிரயோகம் போடுகிறார். இதன் பொருள் அதாவது சுக்ரீவன் ‘எனக்கு அரசனாக வேண்டும் என்ற எண்ணம்/ஆசை இல்லை. ஆனால் அமைச்சர்கள் கட்டாயப்படுத்தி அரசனக்கிவிட்டனர்’ என்று சொல்லவருவதாகச் சொல்லப்படுகிறது.. ஆனால் ஆத்யாத்ம இராமாயணத்தில் இதையே मामनिच्छन्तमप्युत। राज्येडभिषेचनं चक्रु: सर्वे वानरमन्त्रिण:' என்று சொல்லப்படுகிறது.

 

சுக்ரீவனுக்கு அரசனாக வேண்டும் என்ற ஆசை வராததற்கு காரணம் என்ன? சகோதரன் இறந்து போன வருத்தம் மற்றும் அவனது மகன் அங்கதன் தானே அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம், ஆனால் அங்கதன் வயதில் மிகச் சிறியவன் . அவனுக்கு அனுபவம் இல்லை. ஆதலால் அவர்கள் அங்கதனை அரசனாக்கச் சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

இங்கு உரையாசிரியர்கள் சில கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். உண்மையில் அங்கதன் கிஷ்கிந்தையின் அரசனாகிவிட்டால் சுக்ரீவன் காட்டிற்குச் சென்று இருக்கமாட்டான். இராமனைச் சந்தித்து இருக்கமாட்டான். இராவண வதமும் நிகழ்ந்து இருக்காது. இராவணன் பிரம்மாவிடம் என்ன வரம் வாங்கினான்? काहू के मरहिं मारें। बानर मनुज जाति दुइ बारें॥  எனது மரணம் மனிதன், வானரம் இவர்களைத் தவிர வேறு யாராலும் நிகழக் கூடாது என்று தானே வாங்கினான். ஆக  இராவண வதம் நிகழக் காரணம் இராமன் என்ற மனிதனும் சுக்ரீவன் என்ற வானரமும்.. அதற்காக இராமன் வனம் செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம்.

 

தொடரும்

 


Friday, May 15, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 109

 

நேற்றைய தொடர்ச்சி

 

குகைக்குள்ளிலிருந்து மாயாவியின் அலறல் சத்தம் பெரிதாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் வாலியிடமிருந்து எந்த விதச் சத்தமும் வரவில்லை..அதனால் எனது அண்ணன் இறந்துவிட்டதாகக் கருதி. மாயாவி குகையை விட்டு வெளி வந்துவிடக்கூடாது என்று நினைத்துக் குகையில் வாயிலை பெரிய பாறையைக் கொண்டு மூடிவிட்டு அண்ணணுக்கு வேண்டிய நீர்க்கடன்கள் செய்து முடித்தேன்.” என்றான் சுக்ரீவன்

 

 

இங்கு இரண்டு விதமான நிலைகள் உள்ளன. சுக்ரீவன் இராமனிடம் गूहमानस्यमे तत्त्वं यलततो मन्सत्रिभि: श्रुतम्' நான் உள்ளே இதுதான் நடந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து அதை மந்திரிகளிடம் தெரித்தேன் என்கிறான்.

 

गूहमानस्य मे तत्त्वं यत्नतो मन्त्रिभिः श्रुतम् ।
ततो ऽहं तैः समागम्य समेतैरभिषेचितः ॥ २० ॥

 

வாலியின் மரணத்தின் உண்மையை மறைக்க விரும்பினேன். ஆனால் அமைச்சர்கள் தங்கள் முயற்சியால் உண்மையை அறிந்து கொண்டனர்.. அமைச்சர்கள் தங்கள் முயற்சியால் தெரிந்து கொண்டனர் என்று சொல்லும்போது, சுக்ரீவன் மறைத்ததாகத் தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

உண்மையில்  வாலி மரணிக்க வில்லை.. அது சுக்ரீவனுக்கு தெரியாது. ஆனால் எந்தவிதமான மனநிலையில் சுக்ரீவன் அவ்வாறு சொன்னான் என்று தெரியவில்லை. இங்கு சிரோன்மணி என்ற உரையாசிரியர் சொல்லி இருக்கும் கருத்தாவது

 

गूहमानस्येति । तत्त्वं वालिवधं यत्नतो ऽनेकविधोपायैर्गूहमानस्य शत्र्वाक्रमणादिशङ्कया गोप्यमानस्य मे मन्त्रिभिरमात्यैः श्रुतं तेषां संनिधौ मया कथितमित्यर्थः ।

ततस्तस्माद्धेतोः समेतैः तैः मन्त्रिभिः अहमभिषेचितः ।

 

1. "गूहमानस्येति । तत्त्वं वालिवधं यत्नतो ऽनेकविधोपायैर्गूहमानस्य..."

 

பொருள்:

"மறைப்பவன்" என்று பொருள். வாலி இறந்த செய்தியை (மாயாவியுடனான போரில் வாலி இறந்துவிட்டதாகக் கருதி), சுக்ரீவன் பலவிதமான முயற்சிகளாலும் உபாயங்களாலும் மிகக் கவனமாக மறைத்து வைத்திருந்தான்.

 

விளக்கம்:



 வாலி ஒருவேளை இறக்காமல் இருந்து, சுக்ரீவன் நாட்டைப் பிடித்துக்கொண்டான் என்று தெரிந்தால் சினம் கொள்வான் என்ற பயத்தினாலும், அல்லது பகைவர்கள் இந்தச் செய்தியை அறிந்து நாட்டைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தினாலும் வாலி வதையைச் சுக்ரீவன் ரகசியமாக வைத்திருந்தான்.

 

2. "...शत्र्वाक्रमणादिशङ्कया गोप्यमानस्य मे मन्त्रिभिरमात्यैः श्रुतं तेषां संनिधौ मया कथितमित्यर्थः ।"

 

பொருள்:


 பகைவர்கள் நாட்டின் மீது படையெடுத்து வருவார்களோ என்ற அச்சத்தினால், அந்தச் செய்தியைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தான் சுக்ரீவன். இருப்பினும், அவனது அமைச்சர்கள் (மந்திரிகள்) அந்தச் செய்தியை எப்படியோ அறிந்து கொண்டனர்; அல்லது அந்த அமைச்சர்களிடம் மட்டும் சுக்ரீவன் தனிமையில் உண்மையை விளக்கிச் சொன்னான் என்று பொருள்.

 

3. "ततस्तस्माद्धेतोः समेतैः तैः मन्त्रिभिः अहमभिषेचितः ।"

 

பொருள்: 

அந்த காரணத்தினாலேயே (நாடு அரசன் இல்லாமல் அநாதையாக இருக்கக் கூடாது என்பதாலும், அமைச்சர்களின் வற்புறுத்தலாலும்), அந்த மந்திரிகள் அனைவரும் ஒன்று கூடி எனக்கு (சுக்ரீவனுக்கு) முடிசூட்டி வைத்தனர் (அபிஷேகம் செய்தனர்).

 

சுக்ரீவன் இராமனிடம் கூறுகிறான்: "நான் வாலி இறந்த செய்தியைத் தானாகத் தேடிப் போய் ஊர் முழுவதும் சொல்லவில்லை. பகைவர்களின் தாக்குதலுக்குப் பயந்து அதை மறைக்கவே முயன்றேன். ஆனால், என் அமைச்சர்கள் நாட்டு நலன் கருதி, என்னிடம் உண்மையைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவர்கள் வற்புறுத்தியதால்தான் நான் அரியணையில் அமர்ந்தேன். நான் வாலியின் பதவியைத் திருடவில்லை" என்பதே இந்த வடமொழிப் பகுதியின் சாரம்.

 

சுக்ரீவனின் இந்த விளக்கத்தின் மூலம்தான், அவன் வாலிக்குத் துரோகம் செய்யவில்லை, சூழ்நிலையால் மன்னனாக வேண்டியிருந்தது என்பதை இராமன் உணர்கிறான்.

 

தொடரும்