Tuesday, June 9, 2026

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 121

 

நேற்றைய தொடர்ச்சி

  

 

சுக்ரீவனின் சந்தேகம்

  

-'सखा सोच तोरे' என்று சொல்வதன் மூலம் இராமன் சுக்ரீவனிடம் எனது புஜபலத்தின் மீது நம்பிக்கை வைத்து உனது கவலையை விடு. நான் உனக்கு எல்லா வகைகளிலும் உதவி  செய்வேன் என்று ஆறுதலளித்தான்.  இங்குதான் சுக்ரீவனுக்குச் சந்தேகம் வருகிறது. இவர் வாலியின் பலத்தை அறியாமல் அவனைக் கொல்வேன் என்று வாக்களித்துள்ளாரே? இவரை எப்படி நம்புவது என்று குழப்பத்தில் ஆழ்ந்தான்.

 

* कह सुग्रीव सुनहु रघुबीरा। बालि महाबल अति रनधीरा॥

दुंदुभि अस्थि ताल देखराए। बिनु प्रयास रघुनाथ ढहाए॥6

 

அதைக் கேட்ட சுக்ரீவன் “இரகுநாதரே! வாலியைச் சாதரணமாக எண்ணி விடாதீர்கள் அவன் மிகவும் வலிமை உடையவன்; களத்தில் நிலைத்து நிற்க்கக் கூடிய போர் வீரன்; “ என்றான். பிறகு அவன்  துந்துபி அரக்கனின் எலும்பு மலையையும், ஏழு மராமரங்களையும் இராமனுக்குக் காண்பித்து “இந்த மலையை ஒரே உதையால் சாய்த்துத் தள்ளக் கூடியவரும், இந்த ஏழு மராமரங்களையும் ஒரே அம்பால்  துளைக்க வல்லவரும் தான் வாலியை வெல்ல முடியும்” என்று கூறினான்.

 

வால்மீகி இராமாயணத்தில் வாலி துந்துபியின் உடலை ஒரு யோசனை தூரம் தூக்கி எறிந்தான் चिक्षेप वेगवान्वाली वेगेनैकेन योजनम्  என்றும் ஆனால் இப்போது அவனது எலும்புக் கூட்டைக் கூட யாராலும் தூக்க முடியாது என்றும் அதுபோல அங்கிருந்த ஏழு மரங்களை உலுக்கி அவைகளை இலைகள் அற்றவையாக ஆக்கிவிடுவான் என்றும் அந்த எலும்புக் கூட்டை அசைத்தாலோ அந்த மரங்களில் ஏதாவது ஒன்றையாவது பாணத்தினால் துளைத்தால் தங்களால் வாலியைக் கொல்ல முடியும் என்று நான் நம்புவேன் என்றான்,

 

தொடரும்


Monday, June 8, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 120

 

நேற்றைய தொடர்ச்சி

 

இராமன் சுக்ரீவனிடம் சொல்வதின் தொடர்ச்சி.  

 

आगें कह मृदु बचन बनाई। पाछें अनहित मन कुटिलाई॥

जाकरिचत अहि गति सम भाई। अस कुमित्र परिहरेहिं भलाई॥4

परोक्षे कार्यहन्तारं प्रत्यक्षे प्रियवादिनम् ।

वर्जयेत् तादृशं मित्रं विषकुम्भं पयोमुखम् ॥

 

“எவன் நேரில் இனிக்க இனிக்க சிரித்துப் பேசிவிட்டு முதுகுக்குப் பின்னால் தீமை செய்கிறானோ, எவன் மனதில் கபடம் உடையவனாய் இருக்கிறானோ, அப்படிப்பட்டவனுடைய மனமானது பாம்பின் நடையைப் போல கோணல் மானலானது ஆகும் . எனவே சகோதரா! அப்படிப்பட்டவருடைய நட்பை விட்டு விலகுவதே நமக்கு நன்மை பயக்கும். எவன் நமக்கு முன் இனிக்கப் பேசிவிட்டு பின்னால்  கெடுதல் நினைக்கிறானோ அவன் ஒரு விஷம் நிறைந்த குடத்தைப் போல எது மேற்புறம் பாலாகத் தெரிகிறதோ அத்தகைய நண்பனை விக்கி வைக்கவேண்டும்.

 

 

முகமொடு இனிமை மொழியினும்  

உள்ளினில் தீங்கு மறைந்திடும்! 

விஷக் குடம் பால் முகம் போல  

அத்தகைய நட்பு அகற்றிடல் நன்று.

 

* सेवक सठ नृप कृपन कुनारी। कपटी मित्र सूल सम चारी॥

 

முட்டாளான வேலைக்காரன், கருமியான அரசன், நடத்தை கெட்ட பெண்மணி, கபடம் நிறைந்த நண்பன், ஆகிய இந்நால்வரும் சூலத்தைப் போல வேதனை தரக்கூடியவர்கள்.

 

இதே கருத்து பிரச்தாவ் ரத்னாகர் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.

 

अविधेया भृत्यजना: शठानि

मित्राण्यदयायक: स्वामी। अविनयवती भार्या मस्तकशूलानि चत्वारि॥' (

 

சாணக்ய நீதியிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது

 

दुष्टा भार्या शठं मित्रं भृत्यश्चोत्तरदायकः ।

ससर्पे च गृहे वासो मृत्युरेव न संशयः ॥5ll

 

தீய மனைவி, தவறான தோழன், கீழ்ப்படியாத வேலைக்காரன் மற்றும் பாம்புடன் தங்கி இருப்பது மரணத்திற்குச் சமம்..இப்படி எல்லா நூல்களிலும் இந்தக் கருத்து வலியுறுத்தப் படுவதால், இதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

 

सखा सोच त्यागहु बल मोरें। सब बिधि घटब काज मैं तोरें॥5

 

“எனவே தோழனே! என் வலிமையின் மீது நம்பிக்கை வைத்து உன் கவலையை விட்டு விடு. நான் எல்லாவிதத்திலும் உனக்கு உதவியாக இருப்பேன்” என்றான் இராமன்.

 

தொடரும்


Friday, June 5, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 120

 

நேற்றைய தொடர்ச்சி

 

தீய வழியில் செல்லும் நண்பனைத் திருத்தி அவனை நல்வழிக்கு அழைத்து வருவது, நண்பனின் குறைகளை மிகப்படுத்தாமால் நிறைகளை மட்டும் வெளியே சொல்வது நண்பனுக்கு நூறு சதவீத உதவி செய்வது நல்ல நண்பனின் இலக்கணமாகும்.

  

இதையே பர்த்ருஹரி தன்னுடைய நீதி சதகம் என்னும் நூலில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

 

पापान्निवारयति योजयते हिताय

गुह्यं च गूहति गुणान्प्रकटीकरोति।

आपद्गतं च न जहाति ददाति काले

सन्मित्रलक्षणमिदं प्रवदन्ति सन्तः॥७३॥

 

Saints describe these as the attributes of a true friend:

A true friend prevents his friend from committing sins, and induces him to act in good interest, conceals the secrets of a friend which ought to be hidden, projecting only his good qualities and does not forsake his friend in adversities, but gives timely assistance.

 

இங்கு சீதை அனுசூயையைப் பற்றிச் சொல்ல வேண்டியது அவசியம். அனுசூயை சீதையிடம் சொல்கிறாள்

 

धीरज धर्म मित्र अरु नारी। आपद काल परिखिअहिं चारी।।

 

தைரியம், தர்மம், நண்பன். மனைவி இவர்களின் உண்மையான குணம் ஆபத்து/ மற்றும் கஷ்ட காலத்தில் தான் தெரியும். மிகக் கஷ்ட காலத்தில் நல்ல நிலையில் உள்ள நண்பன் சிரமமான நிலையில் இருக்கும் நண்பனுக்கு கை கொடுக்க வேண்டும். அதுபோல நல்ல மனைவி எப்போதும் கணவனுக்குத் துணை நிற்கவேண்டும்

 

தொடரும்

 


Thursday, June 4, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 119

 

நேற்றைய தொடர்ச்சி

 

நட்பைப்  பற்றியும் ஒரு நல்ல நண்பன் யார் என்பது பற்றியும் இதுவரை விரிவாகப் பார்த்தோம்.

 

கிஷ்கிந்தா காண்டம் எட்டாவது சர்கத்தில் சுக்ரீவன் இராமனிடம் சொல்கிறான்.

 

रजतम् वा सुवर्णम् वा शुभानि आभरणानि च |

अविभक्तानि साधूनाम् अवगच्छन्ति साधवः || ४-८-७

आढ्यो वा अपि दरिद्रो वा दुःखितः सुखितोऽपि वा |

निर्दोषः च सदोषः च वयस्यः परमा गतिः

धन त्यागः सुख त्यागो देश त्यागोऽपि वा अनघः |

वयस्यार्थे प्रवर्तन्ते स्नेहम् दृष्ट्वा तथा विधम् || ४-८-९

 

“வெள்ளியோ}, தங்கமோ, சுபமான ஆபரணங்களோ, அவற்றை நண்பர்கள்   தங்களுக்குள் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். செல்வமுள்ளவனோ, ஏழையோ, துக்கமடைந்தவனோ, சுகித்திருப்பவனோ, தோஷமற்றவனோ {குற்றமற்றவனோ}, தோஷமுள்ளவனோ ஒரு நண்பனே மற்றொரு நண்பனுக்கு உற்ற துணை.  இராகவா! அந்தவித நட்பைக் கண்டால், அவன்  பொருட்டு, செல்வத்தைக் கைவிடுவதும், சுகத்தைக் கைவிடுவதும், தேசத்தை {இடத்தைக்} கைவிடுவதுங்கூட செய்யத்தக்கதே" இந்தக் கடைசி வாக்கியம் துளசிதாசரின் बल अनुमान सदा हित कर्ई என்பதற்கான பொருளாகும்.  கஷ்ட காலத்தில் தான் நண்பனின் உண்மையான குணம் தெரியும் बिपति कालकर सत गुन नेहा என்று சொல்கிறார் துளசிதாசர்.

 

कुपथ निवारि सुपंथ चलावा। गुन प्रगटै अवगुनन्हि दुरावा

* देत लेत मन संक धरई। बल अनुमान सदा हित करई॥

बिपति काल कर सतगुन नेहा। श्रुति कह संत मित्र गुन एहा॥3

 

ஆக தீய வழியில் செல்லும் நண்பனைத் திருத்தி அவனை நல்வழிக்கு அழைத்து வருவது, நண்பனின் குறைகளை மிகப்படுத்தாமால் நிறைகளை மட்டும் வெளியே சொல்வது நண்பனுக்கு நூறு சதவீத உதவி செய்வது நல்ல நண்பனின் இலக்கணமாகும்.

 

தொடரும்