Saturday, January 3, 2026

 


இலங்கையில் 

ஏழு நாட்கள் 


முதல் நாள்


 பயணத்தின் முதல் நாளை முருகன் தரிசனத்துடன் இனிது துவங்கினோம். அந்தக் கோவிலின் பெயர் மாதம்பே முருகன் கோவில்.

 

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே நகருக்கு அருகில் அமைந்துள்ள மாதம்பே முருகன் கோவில் "குட்டி கதிர்காமம்" என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஒரு இந்து ஆலயமாகும். சிற்பக் கலையின் மேன்மைக்கு இந்தக் கோவில் உதாரணம்

 

இக்கோவில் பற்றிய முக்கிய தகவல்கள்:

 

அமைவிடம்: கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில், சிலாபம்) நகரிலிருந்து சுமார் 9 கி.மீ தெற்கிலும், மரவில) நகரிலிருந்து 10 கி.மீ வடக்கிலும் இது அமைந்துள்ளது.

 

சிறப்பம்சங்கள்:

 

இக்கோவிலின் முகப்பில் 20 அடிக்கும் உயரமான பிரம்மாண்டமான முருகன், சிவன் மற்றும் அனுமன் சிலைகள் காணப்படுகின்றன.

 

நவீன திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இக்கோவில், வண்ணமயமான சிற்பங்களாலும் வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

வரலாறு: இது ஒரு தனியார் கோவிலாகும். 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு உள்ளூர் தொழிலதிபரின் பங்களிப்புடன் இந்த ஆலய வளாகம் திறந்து வைக்கப்பட்டது.

 

வழிபாடு: இங்கு கதிர்காமம் கோவில் பாணியிலான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. இங்கு கோவில்களில் நாம் அர்ச்சனை வைக்க வெற்றிலை, பாக்கு தேங்காய் பழம் ஆகியவை எடுத்துச் செல்வோம். அங்கு அவர்கள் வெற்றிலை தேங்காய் எடுத்துச் செல்வதில்லை. பதிலாக பப்பாயா, தர்பூஷனி,  வாழைபழம் ஆகியவைகளை நறுக்கி ஒரு தட்டில் வைத்து மேலே மறைத்து அர்ச்சனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

 

இது ஆகாமக் கோவில் அல்ல.  கோவில் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது,

 



பயணம் தொடரும்

No comments: