துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் எட்டு
நேற்றைய தொடர்ச்சி..........................
கிஷ்கிந்தாக் காண்டத் தொடக்கம்
சர்கம் 1
कुन्देन्दीवरसुन्दरावतिबलौ विज्ञानधामावुभौ
शोभाढ्यौ वरधन्विनौ श्रुतिनुतौ गोविप्रवृन्दप्रियौ।
मायामानुषरूपिणौ रघुवरौ सद्धर्मवर्मौ हितौ
सीतान्वेषणतत्परौ पथिगतौ भक्तिप्रदौ तौ हि नः ॥1
இங்கு இராம இலக்ஷ்மணர்களை துளசிதாசர் வணங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஆரம்பத்திலேயே நமக்கு வேலை கொடுத்துவிட்டார் துளசிதாசர். ஸ்லோகத்தின் பொருள் என்ன?
இறைவன் இராமன் மல்லிகைப் பூ போலவும் தாமரை மலரைப் பூ போலவும் அழகானவர் வசீகரமானவர் விதிவிலக்காக வலிமையானவனவர் சக்திவாய்ந்தவர். உயர்ந்த ஞானம் . மற்றும் புலமையின் களஞ்சியம். மகத்துவம் மற்றும் கருணை ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர். சிறந்த வில்லாளி. வேதங்களால் பாராட்டுப் பெற்றவர். பிராம்மணர்களால் (சமுகத்தின் முதியவர்கள் மற்றும் கற்றவர்களால்) நேசிக்கப்படுபவர் தனது உண்மை அடையாளத்தை மறைக்க மானுட வடிவம் எடுத்தவர, ரகு வம்சத்தின் மன்னர்களில் சிறந்தவர், உயர்ந்தவர், தர்மத்திற்கு ஒரே கேடயம் போன்றவர், அனைவரின் நலவிரும்பி, வனத்தில் பயணித்து விடாமுயற்சியுடன் சீதையைத் தேடி வருபவர், அந்த இறைவன் நமக்கு பக்தியின் வரத்தை வழங்குவானாக ................ஒரு சில உரையாசிரியர்கள் இவ்வாறு இந்த காண்டத்தை ஆரம்பிக்கின்றனர்.
ஒரு சிலர் இவ்வாறு சொல்கின்றனர்.....முல்லை மலர் போலவும், நீல ஆம்பல் போலவும், மஞ்சள் நீல நிறமுடையவர்கள், மிக்க வலிமையானவர்கள், விஞ்ஞானத்தின் உறைவிடங்கள், பொலிவு உள்ளவர்கள், சிறந்த வில்லாளிகள், வேதங்களால் கொண்டாடப்படுபவர்கள், பசுக்கள் அந்தணர்கள் கூட்டத்திற்கு பிரியமானவர்கள், மாயையாக மனித வடிவெடுத்தவர்கள், அனைவருக்கும் நன்மை புரிபவர்கள். சீதையைத் தேடுவதில் முனைந்து வழிநடப்பவர்கள், அத்தகைய ரகுகுலத்தின் சிறந்த சகோதரர்களான இருவர் நமக்கு பக்தியை அளிக்கட்டும்.
முதல் சுலோகம் இராமனை மட்டும் குறிக்கிறது.
இரண்டாவது சுலோகம் இராம இலக்ஷ்மணர்களைக் குறிக்கிறது.
அதாவது சீதையைத் தேடி இராமனும் இலக்ஷ்மணனும் காட்டில் சென்றதால் இந்த சுலோகம் இருவரையும் குறிக்கும் என்று ஒரு சில அறிஞர்கள் சொல்லுகின்றனர். ஒரு சில அறிஞர்கள் ரகு குலத்தின் புகழ் பெற்றவர,
மூத்தவர் என்று பொருள்படும் रघुवरौ raghuvarau என்ற சொல் இருவரை அல்ல ஒரு தனி நபரைக் குறிக்கும் என்பதால் ஸ்லோகத்தை இராமன் மீதே மையப் படுத்த விரும்புகிறார் துளசிதாசர் என்று சொல்கின்றனர். இராம சரித மானஸில் இந்த வார்த்தை அல்லது அதன் வெவ்வேறு மாறுபாடுகள் எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்கிறதோ அவை அனைத்தும் இராமனை மட்டும் குறிக்கின்றன. வேறு யாரையும் அல்ல. இலக்ஷ்மணன் உட்பட அவரது சொந்த சகோதரர்களைக் கூட அல்ல என்று ஒரு சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.
தானமுற்ற சீலர் தவத்தாற் பெருமை கொண்டோர்
ஞானமுற்ற மேலோர் நலம் பெறவாம் கானமுற்றும்
என்னலிரா வானவர்கட் கேற்ற பதமளிக்கும்
வள்ளலிரா மன்றாண் மலர்
(வித்வான் சுப்ரமணிய ஐயரின்
இராமாயண வெண்பா)
தொடரும்............
No comments:
Post a Comment