Wednesday, January 21, 2026

 






வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

 இராமன் வாலி உரையாடல்

 பதிவு எண் 416

 

நேற்றைய தொடர்ச்சி...........

  

================

अतः श्रीकृष्णनामादि न भवेत् ग्राह्यं इन्द्रियैः ।

सेवोन्मुखे हि जिह्वादौ स्वयं एव स्पुरत्यतः ॥

=================


“பௌதிகமாக களங்கமடைந்த புலன்களின் மூலமாக பகவானின் உன்னதமான நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகளை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. பகவானின் தொண்டில் ஒருவர் ஈடுபடும்போது, அதனால் அவரிடம் திருப்தியடையும் பகவான், தானே முன்வந்து தன்னை வெளிப்படுத்துவார். அப்போது மட்டுமே அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.” (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.234)

 

அதாவது, பகவானிடம் சரணடைந்து அவருக்கு சேவை செய்யாத வரை, அவரது லீலைகளின் உன்னதமான தன்மைகள் மர்மமாகவே இருக்கும். பகவான் எதையும் செய்ய வல்லவர், அவரது செயல்களை அதிகாரபூர்வமான பக்தர்களிடமிருந்து கேட்டால் மட்டுமே உணர முடியும், சவாலான கேள்விகளாலோ பௌதிகமான தர்க்கத்தினாலோ அறநெறிகளாலோ இயலாது.

 

கேள்வி எழுப்புவோரின் நிலை

 

இராமரைப் பற்றி சவால் விடுவதற்கு முன்பாக சற்று சிந்திக்க வேண்டும். அவர் குற்றவாளி என்றால், “ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்கள் அவரை வழிபட்டது ஏன்? பிரம்மாண்டமான கோவில்களை எழுப்பி அவரது புகழையும் போதனைகளையும் பரப்பியது ஏன்? அவர்கள் அனைவரும் மூடர்களா?” நிச்சயமாக இல்லை. அவர்கள் இராமாயணத்தை முழு நம்பிக்கையுடன் படித்தனர், முறையாகக் கேட்டனர், ஒழுங்காகப் புரிந்து கொண்டனர், இராமரை இதயப்பூர்வமாக வழிபட்டனர்.

 

ஆனால் இன்றைய மக்களோ, மாமிசம், மது, மாது, சூது போன்ற எல்லாவித பாவச் செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, சாஸ்திரங்களைப் படிப்பதில்லை, பக்தர்களிடமிருந்து கேட்பதில்லை, கோவிலுக்குச் செல்வதில்லை, எந்தவொரு புண்ணியத்தையும் செய்வதில்லை. ஆயினும், பகவான் இராமரிடத்தில் திறமையாக குறை காண்கின்றனர். என்ன ஒரு மூடத்தனம்! மேலும், அவர்கள் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் இழிவாகப் பேசுகின்றனர். நமது முன்னோர்கள், இராமாயணம், மஹாபாரதம் போன்ற “கற்பனை” கதைகளைக் கேட்டு நேரத்தை வீணடித்தார்கள் என்றும், அவர்களைக் காட்டிலும் தாங்கள் புத்திசாலிகள் என்றும் நினைக்கின்றனர். கற்றறிந்த பண்டிதர்களைக் காட்டிலும் “உண்மையான அர்த்தங்களை” தாங்கள் கிரகிப்பதாகவும், தங்களின் தர்க்கங்கள் வேதகால ரிஷிகளைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் எண்ணுகின்றனர். இவர்கள் இராமாயணம், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற எந்த சாஸ்திரத்தையும் படித்ததில்லை; ஆனால் எல்லா வேதங்களையும் தொகுத்த வியாஸதேவரைவிட அதிகம் அறிந்தவராக தம்மை எண்ணிக் கொள்கின்றனர்.

 

தொடரும்

No comments: