Friday, January 23, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்

=================

 

நான்காம் நாள் பதிவு எண் ஏழு

 

அடுத்து நாம் சென்ற இடம் மாத்தளை முத்து மாரியம்மன் கோவில்/ முத்துமாரியம்மன் கோயில்) அல்லது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் இலங்கையின் மாத்தளையில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும் .

 

"முத்து" என்ற முன்னொட்டுக்கு முத்து என்று பொருள் . "மாரி" என்றால் மழை என்றும், "அம்மன்" என்றால் தமிழ் மொழியில் தாய் என்றும் பொருள். [இந்தக் கோயில் மழை மற்றும் கருவுறுதலுக்கான தெய்வமான மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

 

கி.பி. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிழைப்பு தேடிய இந்தியத் தமிழர்கள், தலைமன்னார், அரிப்பு துறைமுகம் வழியே இலங்கை வந்தனர். காட்டுவழியில் பெரும் துன்பப்பட்டு, கால்நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் மாத்தளையில் இருந்து சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து மலையகத் தோட்டங்களுக்குச் சென்றனர். இவர்களின் கடினஉழைப்பே இன்றைய மலையகத்தின் செழிப்பாக காட்சி தருகின்றது.

 

அவர்களது, தாய்நாடான இந்தியாவையும், வழிபடும் தெய்வங்களையும் பிரிந்து வந்த ஏக்கம் இவர்களை வாட்டியது. இந்நிலையில், இவர்களில் ஒரு அடியாரின் கனவில் அன்னை முத்துமாரி தோன்றினாள். உங்களின் குறை தீர்க்க நான் ஊரில் உள்ள வில்வ மரத்தடியில் தோன்றியுள்ளேன். எனக்கு கோவில் எழுப்பி வழிபட்டு வாருங்கள். நான் உங்களை காவல் தெய்வமாகக் காத்தருள்வேன்என்று கூறி மறைந்தாள்.

 

இதை அனைவரிடமும் கூறி மகிழ்ந்த அடியார், அன்னை அடையாளம் காட்டிய இடத்திற்குச் சென்றனர். அங்கே சிறிய வடிவில் அன்னையின் சிலை வில்வ மரத்தடியில் இருந்தது. மகிழ்ச்சி அடைந்த அனைவரும் அன்னைக்கு சிறுகுடில் அமைத்து வழிபட்டு வந்தனர். இவளே முத்துமாரி அம்மனாகப் போற்றப்படுகின்றாள்.ஆரம்பத்தில் ஒரு நெல் வயலாக இருந்த இந்தக் கோவில் நிலம், அதன் உரிமையாளரால் 1852-ல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தற்போதைய கோயில் 1874 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, இதற்கு நாட்டுக்கோட்டை செட்டியார் நிதியளித்தார் இந்த கோயில் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் இருவரும் பயன்படுத்துகின்றனர் . இந்த கோயில் முதலில் ஒரு மரத்தின் கீழ் இந்து மக்களால் வணங்கப்பட்ட  ஒரு மரத்தின் கீழ் ஒரு சிறிய சிலையாக இருந்தது, ஆனால் மாத்தளை மக்களால் இது மேம்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 1960 இல் நடைபெற்றது.

 

இவ்வாலயம் 1983-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கலைநயம் மிக்க ஐந்து தேர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. என்றாலும், அனைவரும் பெரும் முயற்சியின் காரணமாக, ஐந்து சித்திரத் தேர்கள் 1993-ல் மீண்டும் உருவாகி தேரோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்தக் கோயிலின் பார்வைக்கு மேலாதிக்க அம்சங்களில் ஒன்று அதன் 32.9 மீ (108 அடி) உயரமான கோபுரம் ('ராஜா கோபூரம்'), கோயிலின் பிரதான வடக்கு நுழைவாயிலுக்கு ('வடக்கு வாயில்') மேலே அமைந்துள்ள ஒரு பெரிய அலங்கரிக்கப்பட்ட கோபுரம். ராஜ கோபூரம் இலங்கையின் மிகப்பெரிய கோபுரங்களில் ஒன்றாகும். இந்து தெய்வங்களின் 1008 சிலைகள் தென்னிந்திய சிற்பி நாகலிங்கம் மற்றும் அவரது மகன் ராமநாதன் ஆகியோரால் தமிழ்நாடு மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 100 வடிவமைப்பாளர்கள், ஓவியர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டன . ராஜ கோபூரம் 2007 இல் தோராயமாக

ரூ150 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்டது .

 

நாளை ஐந்தாம் நாள் பயணம் தொடரும்.

 





No comments: