துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 166
நேற்றைய
தொடர்ச்சி.
சென்ற பதிவிலேயே
சொல்லியிருந்தேன். வால்மீகி இராமாயணத்தில் வாலியின் கேள்விகளுக்கு இராமன் மூலம்
வால்மீகி விரிவான பதில் அளித்திருந்தார். அதன் மூலம் வாலியையை அழித்ததுடன் அவனது அகங்காரத்தையும்
அழித்தார். முதலில் வால்மீகியிலிருந்து ஆரம்பிப்போம்
வாலிக்கு இராமனின் பதில்
தன்னை அம்பு
எய்து சாய்த்த இராமனிடம் வாலி பல கேள்விகள் கேட்கிறான். அந்தக் கேள்விகளுக்கு
இராமன் பதிலளிக்க முற்படுகிறான்.
இங்கு ஒரு
கேள்வி எழுகிறது. இராமன் ஏன் வாலிக்குப் பதிலளிக்க வேண்டும்? தனது நண்பனான
சுக்ரீவனை நாட்டைவிட்டு அடித்துத் துரத்தியது மட்டுமல்லாமல் அவன் மனைவியான
ரூமையை வாலி அபகரித்துக் கொண்டான் என்ற
ஒரு விஷயமே இராமன் வாலியைக் கொன்ற காரணமாகும்.
அப்படிக் கொல்வதற்கு இராமனுக்கு என்ன உரிமை உளது என்பதை வாலி மட்டுமல்ல
நாமும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இராமன் சொல்வது போல வால்மீகி நமக்குச்
சொல்கிறார்.
புண்பட்டு
பூமியில் விழுந்து ஒளியிழந்த சூரியன் போலவும், நீரைப் பொழிந்த
மேகம் போலவும் நீறு பூத்த நெருப்பைப் போலவும் தோன்றிய வானரங்களின் தலைவனுமாகிய
வாலி கடிந்து கேட்ட கேள்விகளுக்கு இராமன் பதில் கூறலானான்.
तम् निष्प्रभम् इव आदित्यम् मुक्त तोयम् इव
अंबुदम् |
उक्त वाक्यम् हरि श्रेष्ठम् उपशांतम् इव अनलम् || ४-१८-२
धर्म अर्थ गुण संपन्नम् हरि ईश्वरम् अनुत्तमम् |
अधिक्षिप्तः तदा रामः पश्चात् वालिनम् अब्रवीत् || ४-१८-३
“அறம், பொருள், இன்பம் எனும் வைதீகமான புருஷார்த்தங்களையும் உலக
நியாயத்தையும் அறியாது குழந்தை புத்தியினால் ஏன் என்னை இழுக்கிறாய்.? நீ ஒரு
விவேகியாகத் தோன்றவில்லை. ஏனெனில் வைதீகமான அறம், பொருல், இன்பம் என்னும்
பலன்களையும் அறியவில்லை. உலக நீதியையும் அறியவில்லை
अपृष्ट्वा बुद्धि संपन्नान् वृद्धान् आचार्य
संमतान् |
सौम्य वानर चापल्यात् त्वम् माम् वक्तुम् इह
इच्छसि || ४-१८-५
விவரமறிந்த
பெரியோர்களிடம் கேட்டறிந்து கற்றால்தான் தெளிவு பெற முடியும். உனது ஆசிரியன் யார்? அவ்வாறில்லாமல்
நீயே உன்னைச் சிறந்த உயர் அறிவாளி என்று நினைத்துக் கொள்வது குரங்கு புத்தியின்
சுவாபமாகும்.
தொடரும்
No comments:
Post a Comment