துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 170
நேற்றைய
தொடர்ச்சி
இங்கு வாசகர்களுக்கு ஒரு செய்தியைச்
சொல்லவிரும்புகிறேன். அதாவது தர்மத்திற்கு எதிரானவனைத் தண்டிப்பது. தாயையும், சகோதரியையும், சகோதர மனைவியையும், மகளையும். "இவர்களை
அறிவுள்ளவர்கள் தவறான பார்வையால் (காமக் கண்ணால்) எப்போதும்
பார்க்கக் கூடாது." இவர்களோடு குருவின் மனைவியையும் சேர்த்துக்
கொள்ளவேண்டும். அப்படி குருவின் மனைவியையிடம் தவறாக நடக்க முயற்சித்தவனின்
அங்கங்களை சிவபெருமான் வெட்டிய நிகழ்வு திருவிளையாடல் புராணத்தில் அங்கம் வெட்டு
படலத்தில் சொல்லப்பட்டுள்ளது.
திருவிளையாடல் புராணத்தின் கூடல்காண்டத்தில் இருபத்தி ஏழாவது படலமாக
அமைந்துள்ளது இந்தப் படலம். திக்கற்ற தனது
அடியவர்களை இறைவனார் காப்பாற்றுவார் என்பதை இப்படலம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வாளாசிரியனும், சித்தனும்
குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அப்போது
மதுரையில் வெளியூரினைச் சேர்ந்த வயதான வாளாசிரியன் ஒருவன் வசித்து வந்தான்.
அவனது மனைவியின் பெயர் மாணிக்க மாலை என்பதாகும். அவ்விருவரும் இறைவனான
சோமசுந்தரரிடம் பேரன்பு கொண்டிருந்தனர்.
வாளாசிரியன் மதுரை நகரின் வெளிப்புறத்தில் வாட்பயிற்சி கூடம் ஒன்றினை
அமைத்து வாட்பயிற்சியினைக் கற்பித்து வந்தான். அவனிடம் சித்தன் என்பவன்
வாட்பயிற்சி பெற்றான்.
நாளடைவில் அவன் வாட்பயிற்சியில் குருவினை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினான்.
திறமைசாலியாக விளங்கிய சித்தன் கெட்ட எண்ணங்கள் மற்றும் துர்நடத்தைகள் கொண்டவனாக
விளங்கினான்.
சிறிது காலம் கழித்து தனது குருவுக்கு போட்டியாக வாட்பயிற்சி கூடம் ஒன்றைத்
தொடங்கினான். வாட்பயிற்சி கற்பிக்க அதிக ஊதியம் பெற்றான்.
தனது குருவினை மதுரையை விட்டு விரட்ட தீர்மானித்த சித்தன், தனது குருவிடம் பயின்று
வரும் மாணவர்களை தன்னிடம் பயிற்சி பெற கட்டாயப்படுத்தினான். ஆனால் அவனது குருவோ
சித்தனின் இத்தகைய செயல்களால் அவனிடம் வெறுப்பு கொள்ளவில்லை.
தொடரும்
No comments:
Post a Comment