துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 168
நேற்றைய
தொடர்ச்சி
இராமன் சொல்கிறான் ‘உன்னைத் தண்டித்தால் எனக்கு
பாவம் கிடைக்கும் என்கிறாய். தவறான
உன்னைத் தண்டித்ததால் எனக்கு பாவம் கிடையாது. உன்னைத் தண்டிக்காமல் விட்டிருந்தால்
தான் எனக்கு பாவம்” என்கிறார். மனுஸ்ம்ருதியில் இது சொல்லப்பட்டுள்ளது
दण्ड्यान्
दण्डयन् राजा दण्ड्यांश्चैवाप्यदण्डयनू।
अयशो महदाप्नोति नरकं॑ चेव गच्छति।'
“அதாவது எந்த அரசன் நிரபராதிகளைத் தண்டித்துக் குற்றம் புரிந்தவர்களைத்
தண்டிப்பதில்லையோ அந்த அரசன் நரகத்திற்குச் செல்வான்” ஆத்யாத்ம இராமாயணத்திலும்
धर्मस्य गोप्ता लोके5स्मिंश्चरामि सशरासन: ॥
अधर्मकारिणं हत्वा सद्धर्म पालयाम्यहम्'
வால்மீகியும்
சொல்கிறார்
न हि लोक विरुद्धस्य लोक वृत्तात् अपेयुषः |
दण्डात् अन्यत्र पश्यामि निग्रहम् हरि यूथप || ४-१८-२१
न च ते मर्षये पापम् क्ष्त्रियो अहम् कुलोद्गतः |
औरसीम् भगिनीम् वा अपि भार्याम् वा अपि अनुजस्य
यः || ४-१८-२२
प्रचरेत नरः कामात् तस्य दण्डो वधः स्मृतः |
“தர்ம
மார்க்கத்திலிருந்து நழுவி நடக்கும் மூர்க்கனைத் தண்டிப்பதற்கு மரண தண்டனையைத் தவிர வேறு தண்டிக்கும் வழி
ஒன்றும் இல்லை. க்ஷத்ரியனாயும் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனான நான் உன்னுடைய
பாவத்தை எப்படிச் சகித்துக் கொள்ளமுடியும்? தன்னுடைய பெண், சகோதரி, தம்பியின்
மனைவி இவர்களிடம் காம எண்ணத்துடன் அணுகியவனைக் கொல்லவேண்டும் என்று புனித நூல்கள்
சொல்கின்றன.. ஆகையால் ஒரு அரசனின் இராஜ்ஜியத்தில் தர்ம மார்க்கங்களுக்கு
உடன்பாடில்லாத கோரமான பாவங்களை ஒருவன் செய்தால். அவனை அந்த அரசன் தண்டிக்கவேண்டும்
என்ற நீதி நூல்களின் கோட்பாட்டின்படி அந்த நீதி நூல்களுக்கு கொடுக்கப்படவேண்டிய
மரியாதையை உத்தேசித்தும் நான் உன்னைத் தண்டித்தேன்” என்கிறான் இராமன்..
தொடரும்
No comments:
Post a Comment