துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 32
நேற்றைய தொடர்ச்சி
பஞ்சமுக அனுமனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
பில்லி சூனியம், தீய சக்திகள் அச்சம் அல்லது கெட்ட கனவுகள், கடுமையான உடல்நலக் கவலைகள், மன உளைச்சல், நிதி உறுதியற்ற தன்மை, வாழ்க்கையில் நம்பிக்கை இழத்தல் போன்ற அனைத்து கவலைகளில் இருந்தும் பஞ்சமுக அனுமன் காக்கிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதன் காரணமாகவே அவரது சிலைகள் அல்லது படங்களை அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர்.
பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:
ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
-----------
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
-------------
தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாயட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம!
---
இந்த மந்திரத்தை தினமும் 8 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கி விடும். துன்பங்கள், நோய்கள் விலக நீண்ட ஆயுள் ஏற்படும்.
வாருங்கள் மீண்டும் துளசிதாசரிடம் செல்வோம்.
தொடரும்
No comments:
Post a Comment