Tuesday, February 3, 2026

 




துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் பன்னிரண்டு

 

நேற்றைய தொடர்ச்சி

  

சிவ பெருமானின் பெருமையைச் சொல்லிவிட்டு காசியைப் பற்றியும் துளசிதாசர் பாடினார். காசியைப் பற்றி வினய பத்ரிக என்ற நூலில் ஒன்பது சுலோகங்களில் விரிவாகப் பாடியுள்ளார்.

 

 सइअ सहित सनेेह देह भरि,कामधेनु कलि कासी।

समनि सोक संताप पाप रूज, सकल-सुमंगल-रासी।1।

मरजादा चहुँ ओर चरनबर, सेवत सुरपुर-बासी।

तीरथ सब सुभ अंग रोम सिवलिंग अमित अविनासी।2।

अंतरऐन ऐन भल, थन फल, बच्छ बेद-बिस्वासी।

गलकंबल बरूना बिभा िजनु, लूम लसति, सरिताऽसि।3।

दंड पानि भैरव बिषान,तलरूचि-खलगन-भयदा-सी।

लोलदिनेस त्रिलोचन लोचन, करनघंट घंटा-सी।4।

मनिकर्निका बदन-ससि सुंदर, सुसरि-सुख सुखमा-सी।

स्वारथ परमारथ परिपूरन,पंचकोसि महिमा-सी।5।

बिस्वनाथ पालक कृपालुचित7 लालति नित गिरजा-सी।

सिद्धि, सची, सारद पूजहिं मन जोगवति रहति रमा-सी।

पंचााच्छरी प्रान7 मुद माधव7 गब्य सुपंचनदा-सी।

ब्रह्म-जीव-सम रामनाम जुग, आखर बिस्व बिकासी।7।

चारितु चरिति करम कुकरम करि, मरत जीवगन घासी।

लहत परम पद प्य पावन, जेहि चहत प्रपंच- उदासी।8।

कहत पुरान रची केसव निज कर-करतूति कला -सी।

तुलसी बसि हरपुरी राम जपु, जो भयो चहै सुपासी।9।


காசி (வராணசி) என்பது ஞானமும்) அன்பும் (ஸ்நேஹம்) நிறைந்த உடலாக உள்ளது. கலியுகத்தில் காமதேனு (எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும் பசு) போன்றது. இது துன்பம், வேதனை, பாபம், நோய் ஆகியவற்றை அழித்து, அனைத்து நன்மைகளின் குவியலாக உள்ளது.. காசியின் எல்லைகள் நான்கு திசைகளிலும் புனித எல்லைகளால் சூழப்பட்டுள்ளன. தேவர்கள் இதை வணங்குகின்றனர். காமதேனுவின் ஒவ்வொரு ரோமமும் சிறந்த தீர்த்தமாகவும், உடலின் அங்கங்கள் அளவில்லாத அழியாத சிவலிங்கங்களாகவும் உள்ளன.

 

காசி நகரம் — கலியின் காமதேனு!

பாவம் பறந்தது, புனிதம் பரந்தது,

சிவனும், பக்தனும் ஒன்றாய் வாழும்

தர்மத்தின் தீபம் — காசி!

-----------

மணிகர்ணிகா — மோட்ச வாசல்,

விஸ்வநாதர் — பரம் பாதுகாவலர்,

பைரவர் — பயம் நீக்கும் வீரன்,

பஞ்சகோசி — பரமார்த்த யாத்திரை!

-------------

வேதம் பேசும் ஒலி — ராம நாமம்,

பிரம்மம் வாழும் ஒளி — காசி நாமம்,

சந்திர முகம் போல சாந்தம்,

அக்‌னி போல சுத்தி — காசி!

---------

துளசி சொன்னான் — “இங்கே வாழ்ந்தால்

மாயை நீங்கும், பரம் பதம் கிடைக்கும்!”

அந்த நகரம் — நாமத்தின் நிழல்,

அழிவற்ற ஆனந்தத்தின் நிலம்!


தொடரும்

No comments: