Friday, February 6, 2026

 




 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 15

 

நேற்றைய தொடர்ச்சி

 

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த சுக்ரீவனினிடம் ஹனுமான் கூறியதாவது:

 

=============

பயம் வேண்டாம் சுக்ரீவா! பதறாதே வானரா!

மலைய மலையில் வாலிக்கு மரண பயம் உண்டடா!

 

அவன் கால் இங்கு வைக்கவே அஞ்சுவான் அஞ்சுவான்

அவன் முகம் இங்கு தெரியவே முடியாது முடியாது!

 ---------

சின்ன மனசு வேண்டாம் சிங்கக் குஞ்சே!

சீறி எழு! சிம்மாசனம் உனக்கே உரியதடா!

 -----------

அறிவு உண்டு, ஆற்றல் உண்டு, அடக்கம் உண்டு

அரசன் நீ! அசைவிலா மனம் வேண்டும்!

 -------------

ராமன் வந்தான், லட்சுமணன் வந்தான்

ரிஷ்யமூகம் இன்று வெற்றி முகம் கொண்டான்!

 ------------

எழு சுக்ரீவா! எழு கிஷ்கிந்தா குமாரா!

இன்று முதல் உன் பயம் எல்லாம் மடியட்டும் மடியட்டும்!

 =============

 

இதன் மூலம் ஹனுமன் எப்படிப்பட்டவர் என்பது முதலிலேயே நமக்குத் தெரிய வருகிறது. மேலும் நாற்பத்தி நாலாவது சர்கத்தின் கீழ்க்கண்ட சுலோகங்களின் மூலம் அதை வால்மீகி உறுதிப்படுத்துகிறார். அதாவது சுக்ரீவன் ஹனுமானைப் புகழ்ந்து சொல்வது போல வால்மீகி எழுதுகிறார்.

 

============ 

विशेषेण तु सुग्रीवो हनूमति अर्थम् उक्तवान् |

स हि तस्मिन् हरि श्रेष्ठे निश्चितार्थो अर्थ साधने || ४-४४-१

तेजसा वापि ते भूतं समं भुवि न विद्यते ।

तद्यथा लभ्यते सीता तत्त्वमेवोपपादय ॥ ६ ॥

त्वय्येव हनुमन्नस्ति बलं बुद्धिः पराक्रमः ।

देशकालानुवृत्तिश्च नयश्च नयपण्डित ॥ ७ ॥

ततः कार्यसमासङ्गमवगम्य हनूमति ।

विदित्वा हनुमन्तं च चिन्तयामास राघवः ॥ ८ ॥

=============

 

“வானர ஸ்ரேஷ்டனே! பூமி அந்தரிக்ஷத்திலும், சித்தர்கள், வித்தியாதரர்கள் சஞ்சரிக்கும்  ஆகாயத்திலும், நீரிலும் உனக்குத் தடையில்லை.  உன் தந்தையான வாயு தேவனைக் காட்டிலும் உனக்கு அதிக ப்ராக்ரமங்கள் உண்டு. உனக்குள்ள பிரதாபம் இந்தப் பூலோகத்தில் ஒருவருக்கும் இல்லை. ஆகையால் எந்த விதத்திலாவது சீதையைக் கண்டறியும் கடமை உன்னுடையதே. நியாயம் அறிந்தவேனே,  பலமும், அறிவும், பராக்ரமும்  தேச காலங்களுக்கேற்றபடி நடந்து கொள்வதும்  வினயமும் உன்னிடத்திலே இருக்கின்றன. ஆகவே நீயே இந்தக் காரியத்தை முடிக்கவேண்டும்” என்று சுக்ரீவன் ஹனுமனிடம் கூறினான்.


  =============

வலிமை அறிவு வீரமுடன் 

வானரன் ஹனுமன் மேன்மை பெரிது 

சுக்ரீவன் நம்பினான் சீதைத் தேடல் 

தருமம் நிறைவேற்றும் தெய்வம் அவனே.

============



தொடரும்

No comments: