துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 16
நேற்றைய தொடர்ச்சி
சுக்ரீவனின் அச்சம்
நிகரில்லா வலிமை கொண்ட இராமன் வருவதைப் பார்த்ததும் சுக்ரீவன் மிகுந்த அச்சமுற்றான் . சுக்ரீவன் பயந்த விதத்தை வால்மீகி விரிவாகக் கூறியிருந்தார்.
===============
तौ तु दृष्ट्वा महात्मानौ भ्रातरौ राम लक्ष्मणौ |
वर आयुध धरौ वीरौ सुग्रीवः श्ङ्कितोऽभवत् || ४-२-१
उद्विग्न हृदयः सर्वा दिशः समवलोकयन् |
न व्यतिष्ठत कस्मिन् चित् देशे वानर पुङ्गवः || ४-२-२
नैव चक्रे मनः स्थातुम् वीक्षमाणो महाबलौ |
कपेः परम भीतस्य चित्तम् व्यवससाद ह || ४-२-३
तौ ऋष्यमूकस्य समीप चारी चरन् ददर्श अद्भुत दर्शनीयौ |
शाखा मृगाणाम् अधिपः तरस्वी वितत्रसे नैव चिचेष्ट चेष्टाम् || ४-१-१२८
स तौ महात्मा गज मन्द गामि शखा मृगः तत्र चिरन् चरन्तौ |
दृष्ट्वा विषादम् परमम् जगाम चिन्ता परीतो भय भार मग्नः || ४-१-१२९
=============
அந்த இரு மகாத்மாக்களான இராம–லட்சுமணரை, சிறந்த ஆயுதங்களைத் தாங்கிய வீரர்களாகக் கண்டவுடன், சுக்ரீவன் சந்தேகத்துடன், அச்சமடைந்தான்.அவனது மனம் கலங்கிப் போய், எல்லாத் திசைகளையும் கவலையுடன் நோக்கினான். எந்த இடத்திலும் அமைதியாக நிற்க முடியாமல், வானரர்களில் சிறந்தவனான சுக்ரீவன் அலைந்தான்.அந்த இரு பெரும் வீரர்களை நோக்கிக் கொண்டிருந்தபோது, சுக்ரீவனின் மனம் நிலைபெறவில்லை. மிகுந்த பயத்தால் அவனது சிந்தனை சிதறிப் போனது.
=============
இராமன் லட்சுமணன் வீரர் இருவரை
சுக்ரீவன் கண்டனன் அஞ்சிக் கலங்கினன்
திசை திசை நோக்கினன் திடமின்றி நின்றிடா
மனமெல்லாம் பயமுற்று மயங்கினன் தானே.
=============
வால்மீகி இத்தனை சுலோகங்களில் சொன்ன விஷயத்தை துளசி தாசர் अति सभीत என்ற இரண்டு வார்த்தைகளில் சொல்லி விட்டார்.
இராம இலக்ஷ்மணர்கள் இருவரையும் பார்த்துப் பயந்த சுக்ரீவன் ஹனுமனிடம் கூறுகிறான். “ஏ! ஹனுமனே! வருகின்ற இந்த இரண்டு மனிதர்களும் வலிமைக்கும் அழகிய வடிவத்திற்கும் இருப்பிடமாகக் காணப்படுகின்றனர். நீ ஒரு பிரம்மச்சாரியாக வடிவெடுத்து அங்கு சென்று கவனி. அவர்கள் யார் என்று அறிந்து அங்கிருந்தே சைகை செய்து எனக்கு அறிவிப்பாயாக.. இதையே வால்மீகியும் கூறுகிறார்.
=============
इङ्गितानाम् प्रकारैः च रूपव्या भाषणेन च
लक्षयस्व तयोः भावम्
शुद्ध आत्मानौ यदि एतौ जानीहि त्वम् प्लवंगम |
व्याभाषितैः वा रूपैः वा विज्ञेया दुष्टता अनयोः || ४-२-२७
==============
தொடரும்
No comments:
Post a Comment