Sunday, February 8, 2026

 


 

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 17

 

நேற்றைய தொடர்ச்சி

   

ஹனுமனின் பிராமண வேடம்

  

 இங்கு ஒரு கேள்வி எழலாம். சுக்ரீவன் ஹனுமனை ஒரு பிராம்மண பிரம்மச்சாரியாக அனுப்புவதன் காரணம் என்ன? இராமன் மற்றும் இலக்ஷ்மணன் இருவரும் வில் மற்றும் ஆயுதங்கள் ஏந்தி இருந்தனர். இடுப்பில் அம்புறாத்தூணி கட்டப்பட்டிருந்தது. அவர்களின் உறுதியான நடை அவர்களை கண்ணியமான அரச வீரர்களாகக் காட்டியது. உன்னதமான போர் வீரரர்கள் போல் தெரிந்தனர். எந்த நோக்கத்துடன் அவர்கள் வந்துள்ளனர் என்று தெரியாத நிலையில் சுக்ரீவன் ஆபத்தை எதிர்கொள்ள விரும்பாததால்  மிக்கக் கவனமாக இருந்தான்.

 

பொதுவாக மனிதர்கள் வானரங்களுடன் நட்புடன் இருப்பதில்லை. அதனால் ஹனுமனை ஒரு பிராம்மண பிரமச்சாரி வேடம் அணிந்து செல்லச் சொன்னான். காரணம் அரச குடும்பத்தினர் பிராமணர்களை மதிப்பவர்கள் . அவர்களை நம்புவபர்கள். ஆகவே ஹனுமனை ஒரு பிராம்மண மாணவனாக அனுப்பினால் அந்த அன்னியர்கள் தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் குறைவு..

 

மீண்டும் ஒரு கேள்வி. சுக்ரீவன் ஹனுமனை ஏன் வயதான் பிராம்மணனாக அனுப்பாமல் இளம் பிரம்மச்சாரி மாணவனாக அனுப்புகிறான்? இராமனும் இலக்ஷ்மணனும் இருந்த பகுதி கொடிய மிருகங்கள் இருக்கும் அடர்த்தியான காடு. நகரத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளது. அங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்கள் வாழ்வதற்க்கான அறிகுறி ஏதும் இல்லை. பொதுவாக வயதான் பிராமணர்கள் எதற்காக வருவர்? தான தருமம் மற்றும் உணவு கேட்டு வருவர். யாருமே இல்லாத இடத்தில், வயதான பிராமணர் வந்தால் இராம இலக்ஷ்மணர்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பு உண்டு.

 

ஆனால் இளம் பிராமண மாணவன் வந்தால் அவர்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பில்லை.   காரணம் அந்தக் காலக் கட்டத்தில் கல்வி கற்பதற்காகவும், நல்ல குருவைத் தேடியும் மாணவர்கள் காடு, மலை இவற்றை எல்லாம் பொருட் படுத்தாமல் சென்று கல்வி கற்றனர். ஆதலால் ஹனுமன் இளம் பிராமண மாணவனாகச் சென்றால் அவர்களுக்குச் சந்தேகம் வராது என்று முடிவு செய்து அவ்வாறு செய்தான் சுக்ரீவன்.  மேலும் ஒரு இளம் மாணாக்கன் தவறு செய்தால் பெரியவர்கள் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். மேலும் இளம் மாணாக்கன் தன்னைவிட வயது கூடியவர்களிடம் வணங்கி மரியாதை செய்தால், அவர்களும் மாணாக்கனது நல்ல குணத்தைப் பார்த்து பதிலுக்கு மரியாதை செலுத்துவதுடன் அந்த மாணாக்கனிடம் விஷயங்களையும் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம் என்று சுக்ரீவன் எண்ணினான்  என்னவிதமான ஒரு முன் யோசனை?


================= 

வாலியின் வன்மை அச்சமென சுக்ரீவன், 

வீரனைக் காண அனுப்பினான் அனுமனை; 

பிரம்மச்சாரி பிராமண வேடமென வந்தான், 

பக்தியால் ராமனைப் பிணைத்தான் மனமென! 

 --------

அச்சம் கரைந்தது, அன்பு பெருகியது, 

அனுமன் உரையால் நம்பிக்கை மலர்ந்தது; 

ராமனின் சேவகன் ஆனான் உடனே, 

சத்தியம், சக்தி, பக்தி — சங்கமம் ஆனதே!

=============== 

 

தொடரும்

 

No comments: