Monday, February 23, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 27

 

நேற்றைய தொடர்ச்சி

 



அஷ்டமா சித்திகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த சித்திகளைப் பெற்ற சிலர்”

 

இவற்றை யார் பெற்றார்கள்? (புராண உதாரணங்கள்)

 

ஹனுமான் –


 அணிமா, மஹிமா, கரிமா, லகிமா எல்லாம் (சுந்தர காண்டம்)


 சிவபெருமான் –


 எட்டும் முழுமையாக (திருவிளையாடல் புராணம்)


 திருமூலர், பட்டினத்தார், போகர் போன்ற 18 சித்தர்களும் இவற்றைப் பெற்றவர்கள்


 விஸ்வாமித்ரர் –


  ஈசத்துவம், வசித்துவம் மூலம் உலகை ஆள முயன்றார்

  

இந்த அஷ்டமா சித்திகளும் ஆஞ்சநேயரிடத்தில் சாதாரணமாக இருந்தது. இராம காவியத்தில் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சித்திகள் இவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

 

  ========

அணிமா சித்தி – அணுவாய் மாறிடுவேன்

மஹிமா சித்தி – மலையாய் நிற்பேன்

லகிமா சித்தி – இறகாய் மிதப்பேன்

கரிமா சித்தி – கல்லாய் நிற்பேன்

 --

ப்ராப்தி சித்தி – பறந்து செல்வேன்

பிராகாம்யம் சித்தி – பொருள் தோன்றும்

ஈசத்துவம் சித்தி – எல்லாம் வசப்படும்

வசித்துவம் சித்தி – உலகம் அடங்கும்!

------- 

அணுவாய் ஆனாலும் அகிலம் காண்பேன்

மலையாய் நின்றாலும் மனம் அடங்கும்

இறகாய் மிதந்தாலும் இறைவன் நினைப்பேன்

கல்லாய் நின்றாலும் கருணை கொண்டேன்!

 --------

பறந்து சென்றாலும் பாதம் பணிவேன்

பொருள் தோன்றினாலும் பற்றை விடுவேன்

எல்லாம் வசப்பட்டாலும் என்னை விடுவேன்

உலகம் அடங்கினாலும் உள்ளே அடங்குவேன்!

 ---------

அஷ்டமா சித்தியும் ஆசை கொள்ளேன்

அவை வந்து போகும் அழியும் அழியும்

அழியா ஒரு பொருள் அருள் நாதன் மட்டும்

அவன் பாதம் பற்றி அமர்ந்து நிற்பேன்


தொடரும் 

No comments: