துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 27
நேற்றைய தொடர்ச்சி
அஷ்டமா சித்திகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த சித்திகளைப் பெற்ற சிலர்”
இவற்றை யார் பெற்றார்கள்? (புராண உதாரணங்கள்)
ஹனுமான் –
அணிமா, மஹிமா, கரிமா, லகிமா எல்லாம் (சுந்தர காண்டம்)
சிவபெருமான் –
எட்டும் முழுமையாக (திருவிளையாடல் புராணம்)
திருமூலர், பட்டினத்தார், போகர் போன்ற 18 சித்தர்களும் இவற்றைப் பெற்றவர்கள்
விஸ்வாமித்ரர் –
ஈசத்துவம், வசித்துவம் மூலம் உலகை ஆள முயன்றார்
இந்த அஷ்டமா சித்திகளும் ஆஞ்சநேயரிடத்தில் சாதாரணமாக இருந்தது. இராம காவியத்தில் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சித்திகள் இவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
========
அணிமா சித்தி – அணுவாய் மாறிடுவேன்
மஹிமா சித்தி – மலையாய் நிற்பேன்
லகிமா சித்தி – இறகாய் மிதப்பேன்
கரிமா சித்தி – கல்லாய் நிற்பேன்
--
ப்ராப்தி சித்தி – பறந்து செல்வேன்
பிராகாம்யம் சித்தி – பொருள் தோன்றும்
ஈசத்துவம் சித்தி – எல்லாம் வசப்படும்
வசித்துவம் சித்தி – உலகம் அடங்கும்!
-------
அணுவாய் ஆனாலும் அகிலம் காண்பேன்
மலையாய் நின்றாலும் மனம் அடங்கும்
இறகாய் மிதந்தாலும் இறைவன் நினைப்பேன்
கல்லாய் நின்றாலும் கருணை கொண்டேன்!
--------
பறந்து சென்றாலும் பாதம் பணிவேன்
பொருள் தோன்றினாலும் பற்றை விடுவேன்
எல்லாம் வசப்பட்டாலும் என்னை விடுவேன்
உலகம் அடங்கினாலும் உள்ளே அடங்குவேன்!
---------
அஷ்டமா சித்தியும் ஆசை கொள்ளேன்
அவை வந்து போகும் அழியும் அழியும்
அழியா ஒரு பொருள் அருள் நாதன் மட்டும்
அவன் பாதம் பற்றி அமர்ந்து நிற்பேன்
தொடரும்
No comments:
Post a Comment