Saturday, March 28, 2026

 





துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 59

 

நேற்றைய தொடர்ச்சி.........

 

முந்தைய பதிவில் நாரதரின் சாபத்தால் இராமாவதாரம் உண்டானது என்று பார்த்தோம்.

 

இராமனை எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன்.

 

இங்கு இன்னொரு கதை சொல்லப்படுகிறது. பத்ம இராமாயணம்  என்ற இராமாயணத்தில் இராமனின் இளமைக் கால விளையாட்டுகளைப் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் இளம்வயதில் இராமன் குரங்குகளுடன் விளையாட ஆசைப்பட்டதாகவும் அதற்காக குரங்குகள் வரவழைக்கப்பட்ட்டதாகவும் ஆனால் இராமனுக்கு அந்த குரங்குகள் பிடிக்காததால் வசிஷ்டர் அஞ்சனையின் மகனான் ஹனுமனைக் கொண்டு வந்ததாகவும். இராமன் ஹனுமனுடன்  விளையாடியதாகவும் சொல்லப்படுகிறது. இராமனுக்கு ஐந்து வயதானவுடன் கல்வி கற்கச் சென்றபோது ஹனுமன் மீண்டும் அஞ்சனையிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகிறது.

 

சில உரையாசிரியர்கள் விஸ்வாமித்திரர் தாடகையின் வதத்திற்காக இராமனையும் இலக்ஷ்மணனையும் கூட்டிச் சென்றபோது ஹனுமன் அவர்களிடமிருந்து பிரிந்ததாகவும் சொல்லப்படுக்றது. இதனால் ஹனுமனுக்கு இராமனின் அடையாளம் புரிந்தது என்றும் சொல்கிறார்கள்.

  

இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது சூரியன் ஹனுமனின் குரு. அவருக்கு வேதங்கள் அனைத்தும் கற்றுத் தந்தவர்,  ஆப்பொழுது அவர் ஹனுமனிடம் “எனது அம்சமாக சுக்ரீவன் பூமியில் வானரனாகத் தோன்றுவான். அவனுக்கு அசம்பாவிதம் உண்டாகும்.. அப்போது நீ அவனுக்குத் துணை நிற்கவேண்டும். இதனால் உனக்கு நல்லது நடக்கக்கூடும். மாகாவிஷ்ணு பூமியில் மனிதனாக அவதாரம் எடுப்பார், அப்போது அவரது மனைவி அபஹரிக்கப்படுவாள்,, அவளைத் தேடிக்கொண்டு அவர் அங்கு வருவார்” என்று சொல்லி இருந்தார். அதனால் இராமனை எளிதில் அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன் என்று சில உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.

  

पुनि धीरजु धरि अस्तुति कीन्ही। हरष हृदयँ निज नाथहि चीन्ही॥

मोर न्याउ मैं पूछा साईं। तुम्ह पूछहु कस नर की नाईं॥4

 

தொடரும்


No comments: