துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 57
நேற்றைய தொடர்ச்சி....
பகவானை அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன் “இவர் என் பிரபு” என்பதைத் தெரிந்து கொண்டாரன்.. உடனே இராமனுடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினான்
- "रसग्रहो जनः" – உண்மையான ரஸம் (ஆனந்தம்) பெற்றவன், மாயை, சம்சாரம், வேறு தேவைகள் அனைத்தையும் விட்டு விடுகிறான்.- இது பக்தி யோகத்தின் உச்ச நிலை –அனுபவம், நினைவு, மற்றும் அழிவில்லா ஈர்ப்பு.
முகுந்தன் திருவடி நினைத்தவுடன்,
மாயையின் வலை கிழிந்ததடி!
சஞ்சாரம் எனும் சுழற்சி நின்றது,
சதாசிவம் போல ஆனந்தமடி!
----
ஒருமுறை முகுந்தனைச் சேவித்தால்,
மீண்டும் பிறவிக்கு இடமில்லை!
திருவடியில் விழும் என் மனம்,
திரும்பிப் போகும் வழியில்லை!
--------
अतिसय प्रबल देव तव माया।
छूटइ राम करहु जौं दाया।।
பகவானை அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன்? என்று சொல்கிறார் துளசிதாசர் எப்படி கண்டு கொண்டான்? இரண்டுவிதமாக ஒன்று அசரீர் குரல்.
कस्यप अदिति महातप कीन्हा। तिन्ह कहुँ मैं पूरब बर दीन्हा॥
ते दसरथ कौसल्या रूपा। कोसलपुरीं प्रगट नर भूपा॥2
இராவணனின் கொடுமையால் தேவர்களும் பூமாதேவியும் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் “கவலையை விடுங்கள். முனிவர் காஷ்யபரும் அவரது மனைவியும் நான் அவர்கட்கு மகனாக பிறக்கவேண்டும் என்று தவம் செய்துள்ளனர். அவர்கள் தசரதராகவும் கோசலையாகவும் பிறந்து மனிதர்களாக கோசல நாட்டில் உள்ளனர். அவர்கள் மகனாக நான் அவதாரம் எடுப்பேன்” என்று சொன்னார். தற்பொழுது ஹனுமனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ‘நான் கோசலை அரசன் தசரதனின் மகன்’ என்று சொன்னார். இரண்டையும் இணைத்து வந்திருப்பவன் பகவான் மகாவிஷ்ணு என்று புரிந்து கொண்டான் ஹனுமன் என்று சொல்கிறார் துளசிதாசர். இது போக நாரதரும் இராமனுக்கு மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று ஒரு சாபம் கொடுக்கிறார் அது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட சாபம் அல்ல. அதனால் பூமிக்கு நன்மையே விளைந்தது..
தொடரும்
No comments:
Post a Comment