ஸ்ரீ இராம ஜெயம்
--------
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை,
அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை"
==========
பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கி, வேதங்களுக்கும் எட்டாத பரம்பொருளாக விளங்கும் இராமனை, கரிய மேகத்தின் எழில் காட்டும் சோதியாகக் கோசலை பெற்றெடுத்தாள்.
No comments:
Post a Comment