Monday, March 23, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 54

 

நேற்றைய தொடர்ச்சி..............

 

இராமன் ஹனுமனிடம் அவனைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு கேட்கிறான்.


कहहु बिप्र निज कथा बुझाई  இதன் மறைமுகமாகன பொருள் என்னவென்றால் உனது பேச்சிலும் உச்சரிப்பிலும்  வேதங்களின் சாயல் தெரிகிறது.. இதைத்தான் வால்மீகியும் கூறி உள்ளார். 


=========

न अन् ऋग्वेद विनीतस्य न अ\-\-यजुर्वेद धारिणः |

न अ\-\-साम वेद विदुषः शक्यम् एवम् विभाषितुम् || ४-३-२८

नूनम् व्यकरणम् कृत्स्नम् अनेन बहुधा श्रुतम् |

बहु व्याहरता अनेन न किंचित् अप शब्दितम् || ४-३-२९

=========

 

வால்மீகி ராமாயணத்தின்படி இராமன் இலக்ஷ்மணனிடம் ஹனுமன் இதுவரை பேசியதை வைத்து அனைத்து வேதங்கள் மற்றும் இலக்கணங்கள் தெரியாதவனால் இவ்வாறு பேசமுடியாது. என்று கூறுகிறான். அதைத்தான் சுருக்கமாக துளசிதாசர் கூறிவிட்டார்,.

 

வாக்கின் தூய்மை: ஒருவன் என்ன பேசுகிறான் என்பதை விட, எப்படிப் பேசுகிறான் என்பது அவனது கல்வியைக் காட்டும். ஹனுமன் ராகத்தோடு, சரியான மாத்திரை அளவில், தெளிவான உச்சரிப்புடன் பேசியதை இராமன் ரசிக்கிறான்.

 

சொல்லின் செல்வன்: இதனால்தான் ஹனுமனுக்கு "சொல்லின் செல்வன்" என்ற பெயர் வந்தது. கம்பராமாயணத்திலும் கம்பர் இதை "யாரோ இந்த அனுமன்? இவன் பேச்சில் வேதம் ஒலிக்கிறதே!" என்று இராமன் வியப்பதாகப் பாடியிருப்பார்.

 

வேதமும் இலக்கணமும்: வேதங்களைக் கற்றாலும், இலக்கணம் தெரியாவிட்டால் சொற்களைச் சரியாகக் கையாள முடியாது. ஹனுமனிடம் இரண்டும் சம அளவில் இருந்ததை வால்மீகி இங்கே பதிவு செய்கிறார்.

 

இந்த ஸ்லோகத்தை வேறொரு கோணத்தில் பார்க்கலாம்:

 

கவனிப்பு (Observation): இராமன் இங்கே ஒரு சிறந்த 'கவனிப்பாளராக' (Observer) இருக்கிறார். ஹனுமன் பேசும்போது, இராமன் அவரது சொற்களை மட்டும் கேட்கவில்லை; அந்தச் சொற்களுக்குப் பின்னால் இருக்கும் 'ஒழுக்கத்தையும்' (Discipline), 'அமைதியையும்' (Silence) கவனிக்கிறார்.

 

Fragmentation (பிரிவினை): சாதாரணமாக நாம் பேசும்போது நம் மனம் எதையாவது மறைக்க முயலும் அல்லது மிகைப்படுத்த முயலும். ஆனால் ஹனுமனின் பேச்சில் 'பிரிவினை' (Fragmentation) இல்லை. அவர் என்னவாக இருக்கிறாரோ (Observed), அதுவே அவரது சொல்லாகவும் (Observer) வெளிப்படுகிறது.

 

Communication: "உண்மையான தொடர்பு (Communication) என்பது சொற்களுக்கு அப்பாற்பட்டது." ஹனுமனின் வார்த்தைகளில் பிழையில்லை (அபசப்தம் இல்லை) என்பதற்குக் காரணம், அவரது 'மனதில்' குழப்பம் இல்லை என்பதே. தெளிவான மனம் தெளிவான சொற்களைத் தருகிறது.

 

கம்பர் இந்தப் பகுதியை இன்னும் அழகாகத் தமிழில் வடித்திருப்பார்:

 

"இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூறக்

கல்லாத கலையும் இல்லை; கற்றவை முடிவும் இல்லை!"

 

அதாவது, இந்த உலகில் ஹனுமன் கற்காத கலையே இல்லை; அவர் கற்ற கலைகளுக்கு முடிவே இல்லை என்று இராமன் வியக்கிறான்.



தொடரும்..................

No comments: