Tuesday, March 24, 2026

 



 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 55

 

நேற்றைய தொடர்ச்சி..............

 

ஹனுமனிடம் இராமன் அவரைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு கேட்கிறான்.  துளசிதாசர் இங்கு “निज कथा” என்ற பதத்தையும் கொடுத்துள்ளார். இதன் பொருள் உனது தந்தை பெயர், உனது பெயர், என்ன குலம், உனது கல்வி, குருவின் பெயர், இந்த காடுகளில் நீ ஏன் சுற்றுகிறாய், யாரால் அனுப்பப்பட்டு நீ இங்கு வந்தாய் போன்ற முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். இராமன் ஏன் அப்படிக் கேட்கிறான்? இராமனுக்குத் தெரியாததா? ஹனுமன் வானர வடிவத்தை விட்டு இளம் பிராமணனாக வந்துள்ளான். உருவத்தை மறைத்தது போல் விவரங்களையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும் என்ற தொனியில் சொல்கிறான்.

 

இராமன் தனது விவரத்தை ‘சரித’ என்று சொல்லுகிறான் ஆனால் ஹனுமனின் விவரங்களை ‘கதா; என்று சொல்லுகிறான். இதன் உட்பொருள்  “எங்களுக்கு ஒரு பிரச்னை நிகழ்ந்துள்ளது அதனால் நாங்கள்  கோரமான வனத்தில் சுற்றுகிறோம். உனக்கு அப்படி என்ன பிரச்னை வந்துள்ளது? நீ ஏன் இந்த அடர்ந்த வனத்தில் சுற்றுகிறாய்” என்று தெரிந்து கொள்வதற்காக..

 

அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன்

 

प्रभु पहिचानि परेउ गहि चरना। सो सुख उमा जाइ नहिं बरना॥

पुलकित तन मुख आव न बचना। देखत रुचिर बेष कै रचना॥3

  

பகவானை அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன் “இவர் என் பிரபு” என்பதைத் தெரிந்து கொண்டாரன்.. உடனே  அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு  சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினான். பக்தரான ஆஞ்சநேயர் தன்னை ஆளும் தலைவனைக் கண்டு கொண்ட அந்தக் காட்சி பார்வதிக்குக் கதை சொல்லிவந்த சிவபெருமான் புளகாங்கிதம் அடைந்து பார்வதியிடம் சொல்கிறார் “பார்வதி! அந்த சுகத்தை வர்ணிக்க முடியாது.. உடல் புளகாங்கிதம் அடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர இயலாத நிலை. அவன் பகவானின் அழகிய வேடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்”

 

தத்துவப் பார்வை (J. Krishnamurti பாணியில்):

 

அடையாளம் காணுதல் (Recognition): அனுமன் அதுவரை ராமரை ஒரு 'அந்நியராகவோ' அல்லது ஒரு 'ராஜகுமாரனாகவோ' பார்த்துக் கொண்டிருந்தார் (Fragmented observation). ஆனால் 'பிரபு பஹிசாநி' - அதாவது அடையாளம் கண்ட அந்த நொடியில், பிரிவினை மறைந்துவிடுகிறது.

 

மௌனம் (The Silence): ஜே.கே சொல்வது போல, "Truth is a pathless land." சத்தியத்தை உணரும்போது அங்கே வார்த்தைகளுக்கு இடமில்லை (முக ஆவ ந வசநா). மனம் எப்போது முழுமையாகக் கவனிக்கிறதோ, அப்போது மொழி (Language) நின்றுவிடுகிறது. அனுமனின் அந்த மௌனம், ஒரு பக்தனின் மௌனம் மட்டுமல்ல; அது ஒரு ஞானியின் 'சிந்தனையற்ற நிலை' (State of no-thought).

 

உடல் சிலிர்த்தல்: மனம் அடங்கும்போது உடல் எதிர்வினை ஆற்றுகிறது. அங்கே "நான் ராமரைப் பார்க்கிறேன்" என்ற எண்ணம் (Ego) அழிந்து, "பார்த்தல்" மட்டுமே எஞ்சுகிறது. அதுவே அந்த வர்ணிக்க முடியாத 'ஸுகம்'.

 

கம்பராமாயணத்தோடு ஒரு ஒப்பீடு:

 

கம்பரும் இதே காட்சியை மிக அழகாகப் பாடுவார். அனுமன் ராமரைச் சந்தித்த உடனே, தன் கைகளைத் தலைக்கு மேல் கூப்பிக்கொண்டு நின்றாராம்.

 

"அஞ்சன வண்ணன் தன்னை, அஞ்சலி செய்து நின்றான்"

 

ஹனுமன் இராமனைப் பார்த்த அந்தத் தருணத்தை, கம்பர் ஒரு 'தவப்பயன்' என்கிறார். துளசிதாசர் 'வார்த்தைகளால் சொல்ல முடியாத சுகம்' என்று சொல்வதை, கம்பர் அனுமனின் 'அடக்கம்' மற்றும் 'பக்தி' வழியாகக் காட்டுகிறார்.

 

தொடரும்

No comments: