Wednesday, March 25, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 56

 

நேற்றைய தொடர்ச்சி....

 

பகவானை அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன் “இவர் என் பிரபு” என்பதைத் தெரிந்து கொண்டாரன்.. உடனே  அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு  சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினான்.

 

பாகவதத்தில் சொல்லியபடி

  

न वै जनो जातु कथञ्चनाव्रजेत्

मुकुन्दसेव्यन्यवदङ्ग संसृतिम् ।

स्मरन्मुकुन्दाङ्‌घ्र्युरपगूहनं पुनः

विहातुमिच्छेन्न रसग्रहो जनः ॥ १९ ॥


======

 

முகுந்தனை (விஷ்ணுவை) ஒருமுறை சேவித்தவன்,

அவனைத் தவிர்த்து வேறு வழியில் சஞ்சரிக்க விரும்பமாட்டான்.

அவன் திருவடிகளை நினைத்தவுடன்,

அவனிடமிருந்து விலக விரும்பாதான்,

ஏனெனில் அவன் உண்மையான ரஸத்தை (பரம ஆனந்தத்தை) அனுபவித்துவிட்டான்.

 

இந்த ஸ்லோகம் பக்தியின் உச்ச நிலையை சித்தரிக்கிறது:- முகுந்தன் என்பது விஷ்ணுவின் முக்தி தரும் வடிவம்.- ஒருவர் முகுந்தனை உண்மையாக சேவித்துவிட்டால்,அவர் சம்சாரம் (பிறவிப் பந்தம்) போன்ற மாயை வழிகளை மீண்டும் நாடமாட்டார்.- முகுந்தனின் திருவடிகளை நினைத்தவுடன்,அந்த பரம ஆனந்தம் அவரை மீண்டும் வேறு எதற்கும் செல்ல முடியாத நிலைக்கு கொண்டு செல்லும்.- இது ரஸானுபவம் – பக்தியின் அமிர்தம்.

 

முகுந்தனைக் கைவிடும் மனம் எதுவோ?

முகுந்தனின் பாதம் நினைவு மறவேனோ?

அகிலம் தந்தாலும் அமுதினை விட்டிடேன்,

அருளினைச் சுவைத்தவர் விலகார் இனிதே


தொடரும்  

No comments: