Wednesday, June 24, 2026

  

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 137

 

இராமன் சுக்ரீவனிடம் சொல்வதின் தொடர்ச்சி.........

 

“முதலில் நீயும் உனது அமைச்சர் ஹனுமனும் என்ன சொன்னீர்கள் 'जो कछु कहेहु' 'त्वदुक्ते यत्‌ मां' முதலில் சுக்ரீவனை நண்பனாக ஆக்கிக் கொள்ண்டு அவன் மனதில் உள்ள பயத்தைப் போக்குங்கள் तेहि सन नाथ मयत्री कीजै, दीन जानि तेहि अभय करी. பிறகு நெருப்பைச் சாக்ஷியாக வைத்து ஹனுமன்  நம் இருவருக்கும் நட்பு என்ற பந்தத்தை உருவாக்கினான். பிறகு நீ ரிஷ்யமுகம் வந்த கதையைச் சொல்லி வாலி ஒரு எதிரி என்றும் உன்னை அடித்துத் துரத்தி மனைவி உட்பட உனது எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு உன்னைத் துரத்திவிட்டான், रिपु सम मोहि मारेसि अति भारी। हरि लीन्हसि सर्बसु अरु नारी॥ताकें भय रघुबीर कृपाला सकल भुवन मैं फिरेउँ बिहाला॥6 பயத்தால் உலகில் என்னை ஆதரிப்பார் யாருமின்றி எல்லா இடமும் சுற்றிவிட்டு இங்கு வந்துவிட்டேன். தாங்கள் தான் என்னைத் தயவு கூர்ந்து ஆதரித்து வாலியை வதம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாய். உனது துன்பத்தைக் கண்டு வருந்தி  நண்பனே எனது பலத்தின் மீது நம்பிக்கை வைத்து உனது கவலைகளை மறந்துவ்டு வாலியை ஒரே பாணத்தில் கொல்வேன் என்று உனக்கு வாக்குறுதி அளித்தேனே.”

 

 

“ஏழு உலகும் அறியும் நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று.  நீ சொன்னது போல சுகம் சொத்து இவை எல்லாம் பக்திக்கு இடையூறானவை.. இந்த உலகில் யாரும் யாருக்கும் நண்பனோ பகைவனோ இல்லை. இறைவனைப் பூஜிப்பதே முக்கியம். ஆனால் இந்த நேரத்தில் நீ அரசு, சொத்து இவை வேண்டாம் என்றால் மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பர். இராமன் வாக்களித்தபடி சுக்ரீவனுக்கு எதுவும் செய்யவில்லை என்றே நினைப்பர். அதனால் நான் எனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்க மாட்டேன். வாக்களித்தபடி வாலி கொல்லப்படுவான்.. உனக்கு உனது மனைவியும் அரசும் கண்டிப்பாகக் கிடைக்கும்..நீ எனது நண்பன். நானும் நீயும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடப்பது நமது கடமை”. என்றான் இராமன்.

 

தொடரும்..............

 


No comments: