துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 136
சுக்ரீவனுக்கு இராமனின் பதில்
सुनि बिराग संजुत कपि बानी। बोले बिहँसि रामु
धनुपानी॥11॥
जो कछु कहेहु सत्य सब सोई। सखा बचन मम मृषा न होई
சுக்ரீவனின் (தற்காலிகமான) வைராக்கியம் நிறைந்த பேச்சைக் கேட்டு கையில் வில்லும் அம்பும் தரித்து நிற்கும்
இராமன் சிரித்துக் கொண்டே கூறினான். “நீ கூறிய அனைத்தும் உண்மை. ஆனால் தோழனே! நான்
கூறிய வார்த்தை பொய்யாகாதே! (அதாவது வாலி கொல்லப்படுவான். நீ அரசனவாய்)
(காக புஜண்ட முனிவர் கூறுவதாவது ) பறவைகளுக்கு அரசனான கருடனிடம் அவர்
கூறுவது போல அமைந்துள்ளது. “குரங்காட்டி குரங்கினை ஆட்டுவிப்பது போலப் பகவன்
இராமன் அனைவரையும் ஆட்டுவிக்கிறான் என்று வேதங்கள் கூறுகின்றன..
மேற் கண்ட ச்லோகத்திற்குச் சமமான ஸ்லோகங்கள் ஆத்யாத்ம இராமாயணத்தில்
உள்ளன.
'राम: सुग्रीवमालोक्य सस्मितं वाक्यमन्रवीत्।
मायां मोहकरीं तस्मिन् वितन्वन् कार्यसिद्धये।
सखे त्वदुक्त यत्तन्मां सत्यमेव न संशय:॥ किन्तु लोका
वदिष्यन्ति मामेवं रघुनन्दन:।
कृतवान् कि कपीन्द्राय सख्यं कृत्वाग्निसाक्षिकम्॥
इति लोकापवादो मे भविष्यति
न संशय:।' (४। २। १--४)
“நண்பனே! நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம் உண்மை. அதில் எந்தவிதமான
சந்தேகமும் இல்லை.. ஆனால் மக்கள் என்ன சொல்வார்கள் .இவன் அக்னியைச் சாக்ஷியாக
வைத்துச் சுக்ரீவனுக்கு எல்லா உதவிகளும் பண்ணுவதாக வாக்களித்தாரே. வாக்களித்தபடி
அப்படி என்ன செய்து விட்டார்” என்று கேட்பார்களே.” என்றான் இராமன்.
தொடரும்..............
No comments:
Post a Comment