துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 119
நேற்றைய தொடர்ச்சி
நட்பைப் பற்றியும் ஒரு நல்ல நண்பன் யார் என்பது
பற்றியும் இதுவரை விரிவாகப் பார்த்தோம்.
கிஷ்கிந்தா காண்டம் எட்டாவது சர்கத்தில்
சுக்ரீவன் இராமனிடம் சொல்கிறான்.
रजतम् वा सुवर्णम् वा शुभानि आभरणानि च |
अविभक्तानि साधूनाम् अवगच्छन्ति साधवः || ४-८-७
आढ्यो वा अपि दरिद्रो वा दुःखितः सुखितोऽपि वा |
निर्दोषः च सदोषः च वयस्यः परमा गतिः
धन त्यागः सुख त्यागो देश त्यागोऽपि वा अनघः |
वयस्यार्थे प्रवर्तन्ते स्नेहम् दृष्ट्वा तथा
विधम् || ४-८-९
“வெள்ளியோ}, தங்கமோ, சுபமான ஆபரணங்களோ,
அவற்றை நண்பர்கள் தங்களுக்குள் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். செல்வமுள்ளவனோ, ஏழையோ, துக்கமடைந்தவனோ, சுகித்திருப்பவனோ,
தோஷமற்றவனோ {குற்றமற்றவனோ}, தோஷமுள்ளவனோ ஒரு நண்பனே மற்றொரு நண்பனுக்கு உற்ற துணை. இராகவா! அந்தவித நட்பைக் கண்டால், அவன் பொருட்டு, செல்வத்தைக் கைவிடுவதும், சுகத்தைக் கைவிடுவதும்,
தேசத்தை {இடத்தைக்} கைவிடுவதுங்கூட
செய்யத்தக்கதே" இந்தக் கடைசி வாக்கியம் துளசிதாசரின் “बल अनुमान सदा हित कर्ई என்பதற்கான பொருளாகும். கஷ்ட காலத்தில் தான் நண்பனின் உண்மையான குணம்
தெரியும் “बिपति कालकर सत गुन नेहा என்று சொல்கிறார்
துளசிதாசர்.
कुपथ निवारि सुपंथ चलावा। गुन प्रगटै अवगुनन्हि दुरावा
* देत लेत मन संक न धरई। बल अनुमान सदा हित करई॥
बिपति काल कर सतगुन नेहा। श्रुति कह संत मित्र गुन एहा॥3॥
ஆக தீய வழியில் செல்லும் நண்பனைத் திருத்தி
அவனை நல்வழிக்கு அழைத்து வருவது, நண்பனின் குறைகளை மிகப்படுத்தாமால் நிறைகளை
மட்டும் வெளியே சொல்வது நண்பனுக்கு நூறு சதவீத உதவி செய்வது நல்ல நண்பனின்
இலக்கணமாகும்.
தொடரும்
No comments:
Post a Comment