Wednesday, April 8, 2026

 


 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 பதிவு எண் 70

  

நேற்றைய தொடர்ச்சி..

 

பாகவதத்தில் விஷ்ணு  சொல்வதாவது

  

नाहमात्मानमाशासे मद्भक्तै: साधुभिर्विना ।

श्रियं चात्यन्तिकीं ब्रह्मन् येषां गतिरहं परा ॥ ६४ ॥

 

"அந்தணரே எனது அடியார்களாகிய சாதுக்களை விடுத்து, நான் எனது ஆத்மாவையோ அல்லது அழிவற்ற எனது செல்வத்தையோ (வைகுண்டத்தையோ) கூட விரும்புவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு நானே மேலான கதி (புகலிடம்); அவர்களைத் தவிர எனக்கு வேறு ஏதும் இனியது இல்லை."

 

சூழல்

 

அம்பரீஷ-துர்வாசர் சம்பவம் (பாகவதம் ஸ்கந்தம் 9, அதிகாரம் 4)

 

அம்பரீஷ மகாராஜா மிகுந்த விஷ்ணு பக்தர். அவர் ஏகாதசி விரதம் மிகுந்த நியமத்துடன் அனுஷ்டித்தார்.

 

விரதத்தின் முடிவில், துர்வாச முனி அவரிடம் வந்தார். அம்பரீஷர் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றார்.

 

ஆனால், விரதத்தின் பாரணை (முடிவு) செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. துர்வாசர் சாப்பிடாமல் தாமதித்ததால், அம்பரீஷர் துளசி-ஜலத்தை மட்டும் அருந்தி விரதத்தை முடித்தார்.

 

இதனால் துர்வாசர் கோபம் கொண்டு, அம்பரீஷரை அழிக்க ப்ரஹ்மாஸ்திரம் (அக்னி ப்ரேதம்) உருவாக்கினார்.

 

உடனே சுதர்ஶன சக்கரம் தோன்றி, அந்த அஸ்திரத்தை அழித்து, துர்வாசரைத் துரத்தத் தொடங்கியது.

 

துர்வாசர் எல்லா தெய்வங்களிடமும் (பிரம்மா, சிவன்) சென்றார்; யாரும் உதவ முடியவில்லை.

 

இறுதியில் பகவான் விஷ்ணுவிடம் வந்தார். அப்போது விஷ்ணு கூறியதே இந்த சுலோகம்:

 

நான் என் பக்தர்களை விட்டுவிட முடியாது; அவர்களுடன் தான் என் ஆனந்தம். அவர்களைத் துன்புறுத்தினால், நான் கூட உங்களுக்கு உதவ முடியாது.

 

விஷ்ணு துர்வாசரை அம்பரீஷரிடம் திரும்பச் செல்லச் சொல்கிறார்.

 

துர்வாசர் அம்பரீஷரிடம் மன்னிப்பு கேட்டார்.

 

அம்பரீஷர் மிகுந்த கருணையுடன் அவரை மன்னித்தார்.

 

சுதர்ஶன சக்கரம் தணிந்தது.

 

இந்த நிகழ்வு பக்தர்களின் மேன்மையை காட்டுகிறது. பகவான் தாமே சொல்கிறார் — “என் பக்தர்களை விட்டுவிட முடியாது; அவர்களே என் பரம ஆனந்தம்.

 

விஷ்ணு இங்கே, "பக்தன் வேறு, நான் வேறு அல்ல" என்கிறார். "கவனிப்பவன் (இறைவன்) எப்போது கவனிக்கப்படும் பொருளாக (பக்தன்) மாறுகிறானோ," அங்கேதான் முழுமையான அன்பு மலர்கிறது..

 

இறைவன் தன்னை ஒரு 'உயர்ந்த அதிகாரப் பொருளாக' மட்டும் பார்க்காமல், பக்தர்களோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்.

 

இறைவன் "எனக்கு வைகுண்டம் கூட வேண்டாம்" என்று சொல்லும்போது, அவர் எதற்கும் கட்டுப்படாதவர் என்பதை உணர்த்துகிறார். அவரது ஒரே அடையாளம் அவரது அன்பும், அந்த அன்பில் உதிக்கும் பக்தர்களும்தான்..

 

தொடரும்


No comments: