துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 65
நேற்றைய தொடர்ச்சி
अस कहि परेउ चरन अकुलाई। निज तनु प्रगटि प्रीति
उर छाई॥
तब रघुपति उठाई उर लावा। निज लोचन जल सींचि
जुड़ावा॥3॥
ஹனுமன் இராமனின் திருவடிகளில் விழுந்தான். உடல்
முழுவதும் அன்பின் அதிர்வால் நடுங்கியது; உள்ளம் முழுவதும் பாசம், ப்ரேமை நிறைந்தது. அப்போது ரகுபதி (இராமர்) அவரைத் தூக்கி, தன் மார்பில் அணைத்தார். கண்களில் தோன்றிய கருணைத் துளிகளைப்
பொழிந்து, அந்த அணைப்பை இன்னும் இனிமையாக்கினார்.
பக்தன் தன் உயிரையே அர்ப்பணித்து,
இராமனின் திருவடிகளில் விழுந்து,
அன்பால் உருகுகிறான்.
இராமன், கருணையின் வடிவமாக, அவரைத் தன்
மார்பில் அணைத்து, கண்ணீர் துளிகளால் அந்த பாசத்தைப்
புனிதமாக்குகிறான்.
இது பக்தனின் பரம அன்பும், இறைவனின் பரம கருணையும் சந்திக்கும் தருணம்..
:
"பக்தன் உருகி விழ, இராமன் கருணையால் அணைத்தான்; அன்பும் அருளும் ஒன்றாய் கலந்த புனிதக் காட்சி."
அன்பினால் உருகி அடியார் விழுந்தார்,
தன்பெரும் கருணைத் தழுவி அணைந்தார்,
கண்ணீர் துளியால் கரிசனம் செய்தார்,
மன்னவன் இராமன் மனமிக நெகிழ்ந்தான்.
அசைபோல் விழுந்தான் அடியன் – அன்பின்
அலைகள் உருகி உடலினுள் பாய்ந்தது!
கருணை கடலாய் இராமன் அணைத்தான் –
கண்ணீர் மலராய் கண்கள் பொழிந்தது!
உன்னை மட்டும் தான் நம்புகிறேன் என்று சொல்லும் ஹனுமனைப் போல
தன்னையும் இதில் சேர்த்துக் கொள்கிறார் துளசிதாசர் இந்த ஸ்லோகத்தின் மூலம்
है तुलसी कें एक गुन, अवगुन निधि कह लोग।
भलो भरोसो रावरो, राम रिसिवे जोग॥
அதாவது “என்னை (துளஸி) மக்கள் குற்றங்களின்
குவியலாகவே சொல்கிறார்கள்,ஆனால் என்னிடம் ஒரு நல்ல
குணம் இருக்கிறது –அது உங்கள் மீது (இராமர் மீது) உள்ள முழு
நம்பிக்கை.அதனால், இராமா ! நீங்கள் என்மீது தயை கொள்ளத்
தகுதியானவர்.”
தொடரும்
No comments:
Post a Comment