துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 67
நேற்றைய தொடர்ச்சி..
துளசிதாசர் தனது வினயபத்திரிகா என்ற நூலில் இவ்வாறு சொல்கிறார்.
जानत प्रीति-रीति रघुराई ।
नाते सब हाते करि राखत, राम सनेह-सगाई ॥
-"जानत प्रीति-रीति
रघुराई" –
ரகுநாதர் (ராமர்) பாசத்தின் நெறி, பக்தியின் வழி,
உண்மையான அன்பின் நடைமுறை ஆகியவற்றை நன்கு
அறிந்தவர்.
"नाते सब हाते करि
राखत" –
அவர் உறவுகள், சம்பந்தங்கள், பந்தங்கள்
ஆகியவற்றை விலக்குகிறார் –
ஏனெனில் அவை மாயை சார்ந்தவை.
"राम सनेह-सगाई" –
அவர் பக்தியின் பாசத்துடன் மட்டுமே
உறவாடுகிறார்.
பக்தி என்பது அவரின் உண்மையான உறவு.
- உறவுகள் எல்லாம் மாயைதான் –
உண்மைதான் பக்தியின் பாசம்!
ராமன் அறிந்த நெறிதான் இது –
இலக்ஷ்மணன் இராமனின் தம்பி. ஆனால் சுமித்திரை சொன்னது போல அவன்
இராமனுக்கு ஒரு வேலைக்காரன் போன்று பணி செய்கிறான். அதில் ஆச்சர்யம் ஒன்றும்
இல்லை. காரணம் அண்ணன் ஒரு தந்தைக்குச் சமம். அண்ணனுக்குப் பணிவிடை செய்யவேண்டியது
அவன் கடமை. ஆனால் இராமனுக்கும் ஹனுமனுக்கும் எந்தவித உறவும் இல்லை.. ஹனுமன் ஒரு
மனிதனும் அல்லன். ஆனாலும் இலக்ஷ்மணனைவிட ஹனுமன் தனக்கு அதிகமாகப் பிரியமானவன்
என்று சொல்கிறான் இராமன். இதைத் தான் உத்தர காண்டத்திலும் இராமன் அனுமனைப்
பார்த்துச் சொல்லுகிறார்
सब मम प्रिय नहिं तुम्हहि समाना। मृषा न कहउँ
मोर यह बाना॥
सब कें प्रिय सेवक यह नीती। मोरें अधिक दास पर
प्रीती॥4॥
“எல்லோரும் எனக்கு அன்பானவர்கள் ஆனால் உனக்குச் சமமாக அல்ல. நான்
பொய் சொல்வதில்லை இது எனது இயல்பு.
சேவகர்களை விட அடியார்கள்தான் எனக்குப் பிரியமானவர்கள்” என்று இராமன் சொல்வதாகத்
துளசி தாசர் சொல்கிறார்.
தொடரும்
No comments:
Post a Comment