Wednesday, April 29, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 92

 

நேற்றைய தொடர்ச்சி

 

இலக்ஷ்மணன் சொன்னதைக் கேட்ட சுக்ரீவனின் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஜானகி கிடைத்துவிடுவாள். கவலை வேண்டாம்” என ஆறுதல் கூறினான். சுக்ரீவனின் நட்பு உண்மையான நட்பு. அதனால் இராமனின் துயரத்தைக் கேட்டதும் தான் கண்ணீர் விட்டு அழுதான்.

 

जे मित्र दु: होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥

 

எவன் ஒருவன் தனது நண்பனின் துயரத்தைக் கேட்டு தான் துக்கப்பதுவதில்லையோ, அத்தகையவனைப் பார்ப்பதே பாவம் என்கிறார் துளசிதாசர்.

  

துன்பம் பகிரா துணை எனினும் தோழன் 

அன்பின் இலக்கணம் அல்ல  

துன்பம் பகிர்ந்திடா நெஞ்சினை நோக்கினால் 

பாவம் பெரிதெனப் பார்.

 

இங்கு உரையாசிரியர்கள் வேறு ஒரு கருத்தும் சொல்கிறார்கள். இராமன் சீதையின் பிரிவால் துயரப்படுவதைக் கேட்ட சுக்ரீவனுக்குத் தனது மனைவியின் நினைவு வந்திருக்கக் கூடும். தன்னைப் போலவே இராமனும் மனைவியின் பிரிவால் வருந்துகிறான் என்பதை நினைத்துக் கண்ணீர் வடித்திருப்பான் என சொல்கின்றனர்..

  

निज दुख गिरि सम रज करि जाना।

 मित्रक दुख रज मेरु समाना॥

 

அதாவது உண்மையான நண்பன்  தனது துன்பத்தைத் தூசிபோல நினைத்து நண்பனுக்கு ஏற்பட்ட துன்பத்தை இமய மலையாகக் கருதுவான்..

 

சுக்ரீவன் சீதை கண்டிப்பகக் கிடைப்பாள் मिलिहि'  என்று சொல்கிறான். காரணம் சீதை இராவணன் தன்னைக் கடத்திச் செல்லும்போது கீழே சில குரங்குகளைப் பார்த்ததும் தன்னுடைய நகைகளை அடையாளமாக விட்டுச் செல்கிறாள். அவளுக்கு நம்பிக்கை இருந்தது இராமன் கண்டிப்பாக தன்னைத் தேடி அங்கு வருவான் என்று. அதைத்தான் சுக்ரீவன் உறுதியாக சீதை கிடைத்துவிடுவாள் என்று சொல்கிறான்..

 

தொடரும்


No comments: