வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 356
நேற்றைய
தொடர்ச்சி............
இங்கு ஒரு கேள்வி எழலாம்.
இப்போது சுக்ரீவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கிய வேலை சீதையைத் தேடுவதுதான்.
அப்படியிருக்க சுக்ரீவன் வானரர்களைப் பார்த்து ‘உலகத்து மூலை முடுக்கெல்லாம்
சென்று சீதையைக் கண்டுபிடித்து வாருங்கள்’ என்று சுருக்கமாகச் சொல்லி இருக்கலாம்.
அதை விடுத்து உலகின் பூகோள விவரங்களை இப்படி விலாவாரியாகச் சொல்லி இருக்க வேண்டாமே
என்ற கேள்விதான். இந்தக் கேள்வியை பிரபல உரையாசிரியர் தர்மகூடம் அவர்களிடம்
கேட்டபொழுது அவர் சொன்னதாவது
न अन्वत्र जनक तनया देवासनाय प्रस्थितां वानारां
प्रति प्रचयादि दिक्षु गवेसनीय प्रदेश विशेषनाणानं विशेष कथनं न प्रयोजनवत्|
இராவணன் கோட்டைக்குள்
நுழைவது என்பது மிகவும் ஆபத்தான காரியம். அங்கு வசிக்கும் புண்ணிய நிலங்கள், மலைகள், நதிகள், முனிவர்கள் போன்றவற்றைப்
பார்ப்பது, கேட்பது அல்லது கூறுவது
போன்ற சில புண்ணிய செயல்கள் செய்ய வேண்டும்.. சுக்ரீவன் அத்தகைய செயல்களைச்
செய்வதோடு தனது படை வீரர்களை ஒரு தீர்த்த யாத்திரை செல்வது போல ஒரு யாத்திரையாக அனுப்ப முயல்வதாக
உரையாசிரியர் தெரிவிக்கிறார்.
सामान्य उक्त्या प्रेशान संभवात् इति चेत्
उच्यते - प्रबलतर शत्रु वधादि मह कार्यं साधयता प्रथमत: तस्मात् अर्ध दायकं तपः
चरण पुण्य तीर्थ क्षेत्र देव ब्रह्मा राजा ऋषिशय संकीर्तन श्रवण दर्शन स्मरणादिशु
पुण्यमेशु यत् किम्चित कर्त्तव्यम् | सुग्रीवेण अपि किम्चित पुण्यं
कर्म कर्त्तव्यम् - पुण्य देश तीर्थ महर्षिनाम तत् उपेत भू गोलस्य च समकीर्तन
श्रवणादिकं प्रशस्तम्
சுக்ரீவன் வாலியுடன்
இரண்டாம் முறை யுத்தத்திற்குச் செல்லும்பொழுது இராமனும் இலக்ஷ்மணனும் போகும்
பாதையில் உள்ள சப்த ரிஷி ஆஸ்ரமத்திற்குள் சென்று அங்குள்ள ஏழு முக்கிய முனிவர்களை
வணங்கி மரியாதை செய்து விட்டு சென்ற போது வாலியை வெல்ல முடிந்தது. ஆனால் முதன்
முறை வாலியுடன் மோதியபோது அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அதனால் அப்போது
அவர்களுக்கு வாலியை வீழ்த்த முடியவில்லை. அதை நிலைதான் இப்போதும். சீதையை
இராவணனின் கோட்டைக்குள் சென்று தேடும் முயற்சியில் வெற்றி கிடைப்பதற்காக பூமி,
நதிகள், மலைகள், செடி கொடிகள், மிருகங்கள் முனிவர்கள் இவர்கள் எல்லோரையும்
வழிபட்டுச் செல்ல வேண்டும் என்று சுக்ரீவன் விரும்புகிறான். மேலும் வீரர்களுக்கு
எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக முழுவிவரங்களையும் தெரிவிக்கிறான் என்று
உரையாசிரியர் சொல்கிறார்.
தொடரும்
No comments:
Post a Comment