வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 354
நேற்றைய
தொடர்ச்சி............
இந்த பூமியைப் பற்றிய
முழுவிவரங்களும் சொல்கிறாயே. அது உன்னால் எப்படி முடிந்தது என்று இராமன் கேட்க,
சுக்ரீவன் தன் கதையைச் சொல்லி அந்த வாலியால் விரட்டப்பட்டவனுமான நான், அவ்வாறு விரட்டப்படும்போது, விதவிதமான நதிகளையும், வனங்களையும், நகரங்களையும் கண்டேன். என்று
சொல்லி தொடங்குகிறான்.
அப்போது பூர்வ {கிழக்குத்}
திசைக்குச்
சென்று விதவிதமான மரங்களையும்,
குகைகளுடன்
கூடிய ரம்மியமான பர்வதங்களையும்,
விதவிதமான
சரஸ்களையும் {பொய்கைகளையும்} கண்டேன். அங்கே
தாதுக்களால் சூழப்பட்ட உதய பர்வதத்தையும், நித்யம் அப்சரஸ்களின்
ஆலயமாகத் திகழும் பால் போன்ற நீரைக் கொண்ட கடலையும் கண்டேன். ,
வாலியால்
விரட்டப்பட்டு பயந்தோடிக் கொண்டிருந்த நான், மீண்டும் திரும்பியபோது, வாலி மீண்டும் வேகமாக
என்னை விரட்டி வந்தார். அப்போது நான், அந்தத் திசையில் இருந்து
மரங்கள் அடர்ந்த விந்திய மலைத்தொடருடன் கூடியதும், சந்தன மரங்களால்
நிறைந்திருப்பதுமான தெற்குத் திசையை நோக்கி ஓடினேன். மரங்களையும், சைலங்களையும் தாண்டி
தக்ஷிணத்திலிருந்து மற்றொன்றை {தெற்கில் இருந்து மேற்கைப்} பார்த்துக்
கொண்டிருந்தபோது, மீண்டும் வாலியால்
விரட்டப்பட்டு மற்றொரு {மேற்குத்} திசைக்கு ஓடினேன்அத்தகைய
நான், விதவிதமான தேசங்களையும், சிறந்த அஸ்த கிரியையும்
கண்டேன். சிறப்புவாய்ந்த அஸ்த கிரியையும் அடைந்த பிறகு, வடக்கு நோக்கி ஓடினேன்.
{இமயம் மேரு, அதே போல உத்தர சமுத்ரம்
ஆகியவற்றுக்கும் வாலியால் விரட்டப்பட்ட போது, வேறு புகலிடம் எதையும்
அறியாதிருந்தேன் அப்போது, ஞானம் நிறைந்தவனான ஹனுமன் என்னிடம் {அரசே, சுக்ரீவரே}, இப்போது எனக்கு நினைவு
வருகிறது. எதன்படி வாலியை{ மதங்கர் சபித்தாரோ, அதன்படி அவருடைய {மதங்கரின்} ஆசிரம மண்டலத்திற்குள் வாலி பிரவேசித்தால், அவரது தலை நூறு
துண்டுகளாகச் சிதறும்எனவே, அங்கே நாம் வாசம் செய்தால் கவலையின்றி சுகமாக இருக்கலாம்” {என்றான்
No comments:
Post a Comment