Sunday, December 14, 2025

 


அதாகப்பட்டது

 

 


அரிசியினால் ஒரு நாடு திவாலான கதை ?

 

“என்னங்காணும் வாய் இருக்குங்கிறதுக்காக  நீர் பாட்டு கண்டதையும் சொல்லிடாதேயும் ...செத்த வாய வெச்சுண்டு சும்மா இரும் ஓய் ...................”

 

 இது எங்க பக்க டயலாக்..... எதையும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல்  ஒரு அரசன்  வாயால் வாக்குறுதி கொடுத்து எப்படிச் சீரழிந்தான் என்பதற்கு நான் படித்த கதை உதாரணம். ஒரு வேளை உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

 

ஒரு அரசன்,  ஒரு புலவர் தன்னை பாராட்டிக் கவிதை பாடினார் என்பதற்காக புலவரைப் பார்த்து உங்களுக்கு என்ன பரிசு வேணும் கேளுங்கள் என்றான்.....

 

புலவர்” அரசே எனக்கு அடுத்த 64 நாட்களுக்கு அரிசி கொடுத்தால் போதம்”

 

“நான் தங்கமே தருகிறேன் எனும்போது நீர் விலை மலிவான அரிசி மட்டும் கேட்கிறீர் “

 

“ஆமாம் எனக்கு அது போதும். இன்று ஒரு அரிசி . நாளை இரண்டு. அடுத்த நாள் நாலு நாலாவது நாள் பதினாறு.இப்படி நேற்று எவ்வளவு அரிசி வாங்கினேனோ அதைப்போல இரண்டு பங்கு அரிசி வேண்டும் அடுத்த அறுபத்து நான்கு நாட்களுக்கு”

 

“புலவரே என்ன இது சிறுபிள்ளைத்தனமா இருக்கு இன்று ஒரு அரிசியாம் அறுபத்து நாங்களுக்கு வேணுமாம் ஓகே தந்தோம் என்றான்.

 

அமைச்சர் எச்சரித்தும் மன்னன் கேட்கவில்லை.

 

புலவர் வந்து சொன்னபடி அரிசி வாங்க ஆரம்பித்தார்

 

நாள் 0: ஒரு அரிசி

நாள் 1: இரண்டு அரிசிகள்

நாள் 2: நாலு அரிசிகள்

நாள் 3; எட்டு அரிசிகள்

நாள் 4:  பதினாறு அரிசிகள்

நாள் 10: 1024  அரிசிகள்

நாள் 32:  4,294,967,296 அரிசிகள்

நாள் 64:  18,446,744,073,709,551,616 அரிசிகள்

 

ஒரு அரிசி 0.03 கிராம்னு வைத்துக்கொண்டாலும் மொத்த அரிசியின் எடை சுமாராக 553 402 322 211  டன் வருகிறது. உலகின் மொத்த அரிசி உற்பத்தியே எழுநூறு மில்லியன் டன் தான்.

 

அரசன் புலவரிடம் மன்னிப்புக் கேட்டான். புலவர் சொன்னார் ‘வாக்குறுதிகள் கொடுக்கப்படும்போது எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டு கொடுங்கள். சில சமயம் சிலவிஷயங்கள் எளிதாக தெரியும் .உண்மையில் எளிதல்ல”

 

மன்னன் புரிந்து கொண்டான்.

 

இந்தக் கதையைப் படித்துவிட்டு நீங்கள் வேறு எதாவது கற்பனை செய்தால் கம்பனி பொறுப்பல்ல

 


No comments: