அதாகப்பட்டது . . . . .
பரிச்சைய்
அறிமுகம்
ஹிந்தியில் 1972 ல் வெளிவந்த பரிச்சய் என்ற இந்திப் படத்தில் உள்ள musaafir hoon yaaro என்ற இனிய பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதே ஆண்டு தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு வங்கியில் வேலைக்குச் சேர கிளம்பினேன். அன்று தூத்துக்குடி ஒரு glorified village. Optimism, positive thinking, lateral thinking இவைகள் தூத்துக்குடியின் கதவுகளை அப்போது தட்டவில்லை. என் தந்தை கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர். பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சம்பளம் என்று ஒன்றுமில்லை, நான் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். Rs. 150 மாத சம்பளம். குடும்பத்தில் ஏழு உறுப்பினர்கள், திடீரென்று நான் வேலைக்கு கிளம்பிவிட்டால் குடும்பம் சிரமப் படுமோ என்ற பயம், நம்பிக்கையின்மை இத்துடன் கிளம்பினேன்.
வேலையில் சேர்ந்து நான் முதலில் பார்த்த ஹிந்தி படம் PARICHAY. ஒரு பணக்கார முதியவர் தனது ஐந்து பேரக்குழந்தைகளுடன் ஒரு பங்களாவில் வசித்து வருகிறார். யாருக்கும் கீழ்ப்படியாத அந்த குழந்தைகளை நல்வழிபடுத்திப் பாடம் கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியரைத் தேடுகிறார். அவ்வாறு அவரால் தேர்வு செய்யப்பட்டவர் தனது கிராமத்திலிருந்து கிளம்பி வரும் சமயம் பாடும் பாட்டுதான் musaafir hoon yaaro. குல்சார், ஆர். டி பரமன், கிஷோர் குமார் போன்ற மேதைகள் சேர்ந்து உருவாக்கின பாடல். அந்தக் கால கட்டத்திலேயே மோடிவேஷன் தந்த பாடல்.
=============
मुसाफ़िर हूँ यारों
ना घर है ना ठिकाना
मुझे चलते जाना है
बस चलते जाना
एक राह रुक गई तो और जुड़ गई
मैं मुड़ा तो साथ-साथ राह मुड़ गई
हवा के परों पे मेरा आशियाना
मुसाफ़िर हूँ यारों...
दिन ने हाथ थाम कर इधर बिठा लिया
रात ने इशारे से उधर बुला लिया
सुबह से शाम का मेरा दोस्ताना
मुसाफ़िर हूँ यारों...
=================
அதன் தமிழ் வடிவம்
நான் பயணி நண்பரே —
இல்லம் இல்லை,
இடம் இல்லை,
நெடுந்தெரு தான் என் திசை,
நடைதான் என் வாகனம் .
தடை வந்தால் வழி பிறக்கும்,
திரும்பினால் பாதை திரும்பும்,
காற்றின் சிறகில் வீடு,
காலத்தின் ஓசை தோழன்.
பகல் கையில் பிடித்து நிறுத்தும்,
இரவு கண்ணால் அழைத்து செல்லும்,
அந்தி, விடியல் — என் உறவு,
அலைந்து செல்லும் என் உயிர்.
==========
அந்தப் பாடலைத் திரையில் பார்த்த போது எனக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. என்ன கருத்தாழமுள்ள பாடல்? இந்தப் பாடலை இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் மனதில் தோன்றிய ஒரே கேள்வி. திரைப்படமாக இருந்தாலும் அந்த நாயகனுக்கிருந்த நம்பிக்கை அப்போது என்னிடம் ஏன் இல்லை?
No comments:
Post a Comment