பழங்கணக்கு
கணக்கு பழையது: பதிவு புதியது
ஒருவர் படுக்கலாம்,
இருவர் இருக்கலாம்,
மூவர் நிற்கலாம்
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு: பணி
நிமித்தம் எனக்குத் திருச்சியிலிருந்து எர்ணாகுளத்திற்கு அவசரமாகச் செல்ல
வேண்டியதிருந்தது. டிசம்பர் கடைசி வாரம். கிறிஸ்தமஸ் பண்டிகை பள்ளி கல்லூரிகள்
விடுமுறை. ரயில், பேருந்து எதிலும் டிக்கட் கிடைக்கவில்லை.திருச்சியிலிருந்து இரவு
ஒரு ரயில் புறப்படும். அங்கிருந்த ஒருவர் முன்னதாகவே சென்றால் பதிவு செய்யப்படாத
கோச்சில் இடம் பிடித்துவிடலாம் என்று சொல்ல நானும் விரைந்தேன். நடைமேடையில்
இரயிலைக் கண்டவுடன் மகிழ்ச்சி. ஆனால் முன்பதிவில்லாத கோச் அருகில் சென்றவுடன்
அதிர்ச்சி. உள்ளே கூட்டம் அலை மோதியது. நானும் அவர்களுடன் ஐக்கியமானேன். மேலும்
மேலும் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. மூச்சுத் திணறியது. விழி பிதுங்கியது.
நின்று கொண்டே முழுப் பயணமும் கழிந்தது.
சமீபத்தில் ஆழ்வார்கள் பற்றி படித்துக்
கொண்டிருந்தபோது "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம்" என்ற
சொற்றொடரைப் பார்த்ததும் எனக்கு அந்தப் பயணம் நினைவில் வந்தது.
பொய்கையாழ்வார் தொடங்குகின்றார்
அந்தாதியை.
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன்
சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று”
அதைத் தொடர்ந்து பூதத்தாழ்வார்
பாடுகின்றார்
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்”
இவர்கள் ஏற்றிய விளக்கொளியில் பெருமானைக்
கண்டார் பேயாழ்வார்.
“திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழு
மருக்கனணி நிறமுங் கண்டேன் செருக்கி
ளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கங் கைக்
கண்டேன்
என்னாழி வண்ணன் பாலின்று”
என்று பேயாழ்வார் பாடினார்.
மூவரும் திருமாலைக் கண்டனர். மூவரும்
இறைஅருள் பெற்றவர்கள் ,உடனே பாடல் பிறந்தது.
இட நெருக்கடியால் விழிபிதுங்க, மூச்சுத் திணற
நின்ற நான் என்ன பாட்டு பாடியிருப்பேன்?
மற்றொரு பழங்கணக்குடன் மீண்டும்
சந்திக்கிறேன்...............
No comments:
Post a Comment