Sunday, December 14, 2025

 




அதாகப்பட்டது................

  

ஷோலே  


 

தர்மேந்திரா, அமிதாப் பச்சன் நடித்த ஷோலே திரைப்படம் 1975 வருடம் சுதந்திரத் தினத்தன்று வெளி வந்து ஒரு கலக்கு கலக்கியது மும்பையில் ஒரு திரை அரங்கில் ஐந்து ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது.   ஐம்பது ஆண்டுகள் கழிந்து விட்டன. அந்தப் படத்தில் க்ளைமாக்ஸில் டாக்குர், கப்பர் சிங்கை ஆணிகள் பதித்த பூட்ஸ் காலால் மிதித்து கொல்லப்போகும் சமயம் போலீஸ் வந்து தடுத்து கப்பரை கைது செய்துவிடுவர்.

 

ஐம்பது ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில். அந்தப் படம் புதிய தொழில் நுட்பத்தில்  50 years of Sholay The final uncut என்று மறுபடியும் வெளிவருகிறது என்ற செய்தி படித்தேன். இதில் முந்தைய ஷோலே படத்தின் ஒரிஜினல் கிளைமாக்ஸ்ம் இடம்பெறுமாம். அது என்ன ஒரிஜினல் கிளைமாக்ஸ்?

 

பழைய படத்தின் படி டாக்குர் கப்பரை ஆணிகள் பதித்த பூட்ஸ் காலால் மிதித்தே கொன்றுவிடுவாராம். ஆனால் அன்றைய தணிக்கைக் குழு யாரும் சட்டத்தைத் தனது கையில் எடுத்துக் கொள்வதாகக் காட்டப்பட்டதை அனுமதிக்க தணிக்கை விதிகளில் இடமில்லை  என்று சொல்லிவிட மீண்டும் அக்காட்சி படமாக்கப்பட்டு கிளைமாக்ஸில் போலீஸ் வந்து கொள்ளையனைக் கைது செய்வது போல காட்சி எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதாம்.

 

இப்பொது வெளிவரும் படத்தில் பழைய கிளைமாக்ஸ் காட்டப் போகிறார்களாம். அதற்கு  படத் தரப்பு சொல்லும் காரணம்  இன்றைய படங்களில் காவல் அதிகாரிகளே குற்றவாளிகளைக்  கொல்வது போல நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. அது மட்டும் அல்ல நிறைய த்ரில்லர் படங்களில்  கதையில் கதாநாயகனோ, நாயகியோ சம்பத்தப்பட்ட யாரேனும்  நியாயத்திற்காக வில்லனைக் கொன்றால் காவல் துறை அதைக் கண்டு கொள்ளாதது  போலக் காட்சிகள் வருகின்றன. தனிக்கைக்குழுவும் அதை அனுமதிக்கின்றது.

 

ஆக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள யாருக்கும் அனுமதி இல்லை என்று தணிக்கை விதிகளைக் காட்டித் தணிக்கைக் குழு படங்களிக்கு அனுமதி மறுத்தது.   இன்றோ நியாயத்துக்காக கொலை செய்பவர்களை காவல் துறை கண்டுகொள்ளாமல் இருக்கும் திரைப்படங்களை அனுமதிக்கிறது? கண்டிப்பாக தணிக்கை விதிகளில் இத்தகைய மாறுதல் அனுமதிக்கபட்டிருக்க வாய்ப்பு இல்லை. இங்கு யார் புத்திசாலி?

 

No comments: