வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஹனுமனின் அறிவுரை
பதிவு எண் 377
தாரன் சொன்னவற்றைக் கேட்டு அங்கதன் மௌனமாக இருந்தான். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதை ஹனுமன் உணர்ந்தான், இனியும் பேசாமல் இருந்தால் வந்த காரியம் கெட்டுவிடும் என்பதால் அங்கதனை நோக்கிப் பேசத்தொடங்கினான்.
===========================================
बुद्ध्या हि अष्ट अंगया युक्तम् चतुर् बल समन्वितम् |
चतुर् दश गुणम् मेने हनुमान् वालिनः सुतम् || ४५४२
===========================================
“அன்புள்ள அரசகுமாரனே! உன்னிடம் புத்தி கூர்மைக்கு வேண்டிய எட்டு தன்மைகள் (குணங்கள்) நிறைந்து இருக்கும் என்று நான் கருதினேன். (“ஒரு சராசரி மனிதனின் நுண்ணறியுந்திறன் எட்டு அங்கங்கள்(அறிவின் எட்டுக் கூறுகள்), நான்கு வகை வலிமைகள், பதினான்கு சிறப்புக் குணங்கள் கூடியது என்று {பின்வருமாறு} சொல்லப்படுகிறது, -शुश्रूषा शवाणां चैव ग्रहाणां धारणं तथा | उहा अपोहा अर्थ विज्ञानं तत्त्व ज्ञानं च धी गुणःஅதாவது,
1. சுஷ்ரூஷம் - கூர்மையாக கவனித்தல்,
2. சிரவணம் - கருத்தில் கொள்ளுதல்,
3. கிரஹணம் - ஈர்த்து வைத்துக் கொள்ளுதல் {நினைவில் நிறுத்தல்},
4. தாரணம் - நினைவில் மீட்டல்,
5. ஊஹம் - ஊகித்தறிதல்,
6. அபோஹம் - நுட்பமாகப் பகுத்தறிதல்,
7. அர்த்தவிஜ்ஞானம் - அர்த்தங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளுதல்,
8. தத்துவஞானம் - {உண்மையைப் புரிந்து கொள்ளுதல்} என்பன அந்த குணங்களாகும்.
----------------------------
நால்வகை பலங்கள் என்பன
1. மனோபலம் - மனவலிமை,
2. பாஹுபலம் - தோள்வலிமை,
3. உபாய பலம் - உத்தி வலிமை,
4. பந்து பலம் - உறவினர் வலிமை என்று சொல்லப்படுகின்றன. मनो बल, बाहु बल, उपाय बल, बंधु बल,
visit my blog seshadrinadhan.blogspot.com
தொடரும்.
No comments:
Post a Comment