Saturday, December 20, 2025

 




 


வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

 சம்பாதியின் வருகை               

 பதிவு எண் 391

 


நேற்றைய தொடர்ச்சி....

 

வால்மீகி இராமாயணத்தின்படி இராவணனால் இறக்கைகள் வெட்டப்பட்டு ஜடாயு இறந்த இடம் தண்டகாரண்யத்தில் ஜனஸ்தானம் என்ற இடத்தில். ஆனால் கேரளத்தில் கொல்லம் மாவட்டத்தில் சடயமங்கலம் என்ற இடத்தில் இராவணனால் இறக்கைகள் துண்டிக்கப்பட்டு jஜடாய   பாறைகளில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. ஜடாயுமங்கலம் என்ற பெயர் மருவி சடையமங்களமாக மாறிவிட்டதாகச்  சொல்லப்படுகிறது இப்பகுதி பூமியிளிர்ருந்து 1160 அடி உயரத்தில் உள்ளது அங்குள்ள Jatayu Earth's Center Nature Park  ல் உள்ள தேசிய பூங்காவில் இருநூறு அடி அகலமுள்ள ஜடாயுவின் சிலை உள்ளது.

  

இது போல ஆந்திர பிரதேசத்தில் உள்ள லெபாக்ஷி என்ற இடத்திலும் இராவணனால் வெட்டப்பட்ட ஜடாயு விழுந்ததாகச் சொல்லபடுகிறது. தமிழ் நாட்டின் திருப்புட்குழி ள் உள்ள விஜயராகவ பெருமாள் கோவிலும் ஜடாயுவுடன் தொடர்பு உடையாதாகச் சொல்லப்படுகிறது, காரணம் இங்குள்ள தெய்வமான விஜயராகாவப் பெருமாள் தான் ஜடாயுவின் இறுதிக் காரியங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது.  ஜடாயு இங்குள்ள நீர்நிலையில் தான் விழுந்ததாகவும் அது இப்போது ஜடாயு தீர்த்தம் என்று அழைக்கபடுகிறது. அதுபோல கும்பகோணம் அருகில் உள்ள திருப்புல்ல பூதங்குடி யில் உள்ள பெருமாள் கோவிலும் ஜடாயுவுடன் தொடர்பு உடையதாகச் சொல்லப்படுகிறது. காரணம் இந்த இடத்திலும் ஜடாயுவிற்கு இறுதிக் காரியம் நடைபெற்றதாகக் கூராப்படுகிறது.

 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. வால்மீகி இராமாயணம் திரேதாயுகத்தில் எழுதப்பட்டது.   கம்ப இராமாயணம் எழுதப்பட்டது பன்னிரண்டாம் நூற்றாண்டில் . ஆனால் ஏழாம் நூற்றாண்டின் சங்க இலக்கியங்கள், திருமுறைகள், மற்றும் புறநானூறு, மணிமேகலை போன்ற இலக்கியங்களிலும் இராமாயணம் பற்றிய நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த இடைப்பட்ட காலத்தில் தமிழில் வேறு இராமாயணங்கள் இருந்தனவா? இல்லை, சங்ககாலப் புலவர்கள் வடமொழியில் தேர்ச்சி பெற்று வால்மீகி இராமாயணத்திலிருந்து எடுத்து கருத்துகளைக் கையாண்டுள்ளனரா? காரணம் திருஞான சம்பந்தர் மயிலாடு துறையை அடுத்துள்ள புள்ளிருக்கு வேளூர் அதாவது இன்றைய வைத்தீஸ்வரன் கோவிலில் சிவபெருமானை ஜடாயு, சம்பாதி இருவரும் வழிபட்டுள்ளதாக நிறைய பதிகங்கள் தேவாரம்) பாடி உள்ளார். அந்தப் பதிகங்களை விரிவாகப் பார்ப்போம்.

 

தொடரும்

No comments: