Saturday, May 9, 2026

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 101

 

நேற்றைய தொடர்ச்சி

 

 இங்கு இராமன் ஒரு சாதாரண மனிதன்  செயல்படுவது போல் செயல்பட வேண்டியிருந்தது, அதாவது இராமரன் எதிர்கொண்ட சூழ்நிலையில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் வலிமையான கூட்டாளியின் உதவியை நாடுவது. முதலில் தனது மனைவி எங்கே இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிப்பது -  பின்னர் அவள் கடலின் நடுவில் உள்ள ஒரு தொலைதூரத் தீவில் ஒரு கொடூரமான அரக்க மன்னன் இராவணனால் சிறைபிடிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்வது., அங்கு சென்று அவளை விடுவிக்க இரத்தத்தை உறைய வைக்கும் போரை நடத்துவது என்பது எளிய விஷயமல்ல , மேலும் எதிரியின் படையுடன் போர் புரிய இராமனுக்கு  ஒரு படை தேவைப்படும். இது பரந்த அளவிலான விஷயங்களின் ஒரு பகுதியாகும், ஏனென்றால் இறைவன் தனது உண்மையான அடையாளத்தை ஒரு ரகசியமாக வைத்திருக்க வேண்டியிருந்தது, அதற்காக  அவர் மற்ற சாதாரண மனித இளவரசர்களைப் போல சாதாரணமாக செயல்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.

 

தேவை ஏற்பட்டால் வேறு யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு பெரிய அரக்கர் படையையும் சமாளிக்கும் சக்தியும் வலிமையையும் கொண்டவன் என்பதற்குச் சான்றாகப் பஞ்சவடியில் கர தூஷணர்களின் படையைத் துவம்சம் செய்த நிகழ்வே போதும். அங்கு இராமன் இலக்ஷ்மணனின் துணையையும் நாடாமல் தனியாக நின்றுப் போர் செய்ததைப் படித்திருப்போம்..

 

அதற்கு முன்னால்  இராமன் மிகச் சிறுவனாக இருந்தபோது விஸ்வாமித்திரரின்  யாகத்தைப் பாதுகாக்க இலக்ஷ்மணனுடன் இணைந்து அரக்கர்கள் மாரீசன் மற்றும் சுபாகு ஆகியோரை சிதற  அடித்ததைப் படித்தோம்.

 

இந்த வானரங்கள் மற்றும் கரடிகளின் துணையை இராமன் ஏன் நாடுகிறான் என்பதற்கு மற்றொரு முக்கியமான கரணம் ஒன்று உண்டு. இந்த வானரங்கள் மற்றும் கரடிகள் தேவர்களின் மற்றொரு வடிவம். பிரம்மாவின் கட்டளைக்கிணங்க தேவர்கள் இராவணனை அழிப்பதில் இராமனுக்கு உதவியாக இருப்பதற்காக இந்த வடிவத்தில் பூமியில் பிறந்துள்ளனர்.

 

பரம்பொருளின் மானிட வடிவமான இராமன் ஒற்றை ஆளாக நின்று அரக்கர்களை எதிர் கொள்ள முடியுமென்றாலும்,  தனக்கு உதவுவதற்காக வந்துள்ள வானர வடிவத்தில் இருக்கும் தேவர்களுக்குப் புகழ் கிடைப்பதற்காக அவர்களுடன் கூட்டணி அமைத்து இராவணனுடன் போரிட்டு வென்றான. ஒரு உன்னதமான பெருந்தன்மையுள்ள பேரரசன் தனது சாதனைக்களுக்கும் வெற்றிகளுக்கும் உள்ள பெருமையையும் மதிப்பையும் தனது அரண்மணை அமைச்சர்கள், இராணுவ தளபதிகள் மற்றும் வீரர்களுக்கும் வழங்குவான்.. காரணம் அரசன் பெற்ற வெற்றி அமைச்சர்கள், ராணுவ  தளபதிகள் மற்றும் வீரர்களில், வலிமை, உழைப்பு மற்றும் திட்டமிடுதலால் கிடைத்த வெற்றி . இராமன் அவர்களுக்குரிய கௌரவத்தை அளித்ததால் அவைகள் பெருமகிழ்ச்சி அடைந்தன என்று உத்தர காண்டத்தில் துளசிதாசர் பாடியுள்ளார்..

 

தொடரும்


No comments: