Friday, May 22, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 115

 

நேற்றைய தொடர்ச்சி

  

நண்பனின் துன்பத்தைக் கண்டு எவன் ஒருவன் தான் துன்புறுவதில்லையோ அவன் மகாபதகம் செய்தவன் ஆகிறான் என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது

 

ब्रह्महत्या सुरापानं स्तेयं गुर्वङ्गनागमः ।

महान्ति पातकान्याहुः संसर्गश्चापि तैः सह ॥

(मनुस्मृति ११। ५४)

 ब्रह्महत्या सुरापानं स्तेयं गुर्वङ्गनागमः।

महान्ति पातकान्याहुः संसर्गश्चापि तैः सह ॥ मनुः

 

பிராமணனைக் கொல்வது, , மது உண்பது ,  குருவின் மனைவியிடம் தவறாக நடந்து கொளவது, தங்கத்தைத் திருடுவது பெரிய பாவங்களாகும்.  இத்தகைய பாவங்களைப் செய்தவர்களைப் பார்க்கவே கூடாது. நண்பனின் துயரத்தைக் கண்டு தான் துயருண்டு அவனுக்கு உதவ முன் வராதவன் மேற்கண்டப் பாவங்களை செய்தவனுக்கு இணையான பாவத்தைச் செய்தவனாகிறான்.

 குமாரசம்பவத்திலும் இது சொல்லப்பட்டுள்ளது

 

स्वजनस्यापि दुःखमग्रतो विवृतद्वारमिवोपजायते।

 

தனது நெருக்கமானவரின் துயரத்தை நேரில் காணும் போது, அது திறந்த கதவாக நம்முள் நுழையும் போலவே, நம்மை ஆழமாக பாதிக்கிறது.

 

துயரமோ நமக்கில்லை! 

துயரமெனும் சுழலோட்டம் 

துணைவனுக்கே வந்தாலே 

துளியென நம்முள் நுழைகின்றது!

 

அன்பினால் நம்மைச் சுடும் 

அழகான தீயே அது! 

நெருப்பாய் நெஞ்சை நனைக்கும் 

நெகிழ்வின் நாதமிதுவே!

 

தொடரும்


No comments: