Thursday, May 7, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 99

 

நேற்றைய தொடர்ச்சி

 

சுக்ரீவன் இராமனுக்கு ஆறுதல் கூறுவதை முந்தைய பதிவில் பார்த்தோம்:

 

சுக்ரீவன் सब प्रकार कारिहाँ सेवकार्ड என்று சொல்கிறான். அதாவது சீதை இருக்குமிடத்தைக் கண்டறிவது, எதிரிகளுடன் போரிடுவது, சீதையை மீட்டுக் கொண்டுவருவது ஆகிய சேவைகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான்.

 

'जेहि बिधि मिलिहि जानकी आई  இங்கு ‘ஆயி’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். அதாவது இதற்காக தாங்கள் எதுவும்  செய்யவேண்டியதில்லை. நாங்களே சீதையைக் கண்டுபிடித்து, எதிரிகளுடன் போரிட்டுச் சீதையை மீட்டு வரும்வோம் என்ற பொருளாகும்..

 

வால்மீகி இராமாயணத்திலும் இதே கருத்தை சுக்ரீவன் சொல்வதாக எழுதி இருந்தார்

 

भर्या वियोगजम् दुःखम् चिरात् त्वम् विमोक्ष्यसे |

अहम् ताम् आनयिष्यामि नष्टाम् वेदश्रुतीम् इव || --

सातले वा वर्तन्तीम् वर्तन्तीम् वा नभः तले |

अहम् आनीय दास्यामि तव भार्याम् अरिन्दम ||

इदम् तथ्यम् मम वचः त्वम् अवेहि राघव |

शक्या सा जरयितुम् अपि सः इन्द्रैः सुर असुरैः || --

तव भार्या महाबाहो भक्ष्यम् विष कृतम् यथा

त्यज शोकम् महाबाहो ताम् कान्ताम् आनयामि ते | --

अनुमानात् तु जानामि मैथिली सा संशयः

 

“உமது மனைவியைப் பிரிந்த துக்கத்தில் இருந்து விரைவில் விடுபடுவீராக.  {தொலைந்து போன} வேதசுருதியைப் போல, நான் அவளை மீட்டு வருவேன்[ அரிந்தமரே }, ரசாதலத்தில் {பாதாளத்தில்} இருந்தாலும், நபஸ்தலத்தில் {வானத்தில்} இருந்தாலும், நான் உமது மனைவியைக் கொண்டு வந்து உம்மிடம் கொடுப்பேன். இராகவரே, என்னுடைய இந்தச் சொற்கள் உண்மையானவை என்பதை அறிவீராக. மஹாபாஹுவே, உமது   {மனைவியான சீதை  விஷம் கலந்த உணவைப்} போல, இந்திரன் முதலிய ஸுராஸுரர்களாலும் {தேவர்களாலும், அசுரர்களாலும்} செரிக்கப்பட சாத்தியமற்றவள் ஆவாள்.” இவ்வாறு சுக்ரீவன் இராமனிடம் கூறினான். இத்தோடு நில்லாமல் சுக்ரீவன் பிரதிஞ்ஞையும் செய்கிறான்..

 

தொடரும்

 


No comments: