Monday, May 4, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 96

 

நேற்றைய தொடர்ச்சி

 

 

இராமன் சொன்னவுடன் சுக்ரீவன் உடனே

 

वमुक्तस्तु सुग्रीवः शैलस्थ गहनां गुहाम्‌। प्रविवेश ततः शीघ्र राघवप्रियकाम्यया।॥ उत्तरीयं गृहीत्वा तु तान्याभरणानि च। इदं पश्येति  

 

சீதையின் ஆடையையும் அதில் வைக்கபட்டிருந்த நகைகளையும் இராமனிடம் காட்டினான்.

 

துளசிதாசர் தனது கீதாவளி என்ற நூலிலும் இதை அழகாக விளக்கி உள்ளார் 

भूषन बसन बिलोकत सियके।

प््रेाम-बिबस मन,कंप पुलक तनु, नीरजनयन नीर भरे पियके।1

 

स्कुचत कहत, सुमिरि उर उमगत, सील सनेह सुगुनगन तियके।

स्वामि दसा लखि लषन सखा कपि , पिघले हैं आँच माठ मानो घियके। 2

 

सोचत हानि मानि मन गुनि गुनि गये निघटि फल सकल सुकियके।

वरने जामवंत तेहि अवसर बचन बिबेक बीररस बियके।3।।

 

 धीर बीर सुनि समुझि परसपर, बल-उपाय उघटत निज हियके।

तुलसिदास यह समउ कहेतें कबि लागत निपट निठुर जड़ जियके।4

 

சீதையின் அணிகலன்கள், ஆடைகள் பார்த்ததும்,

ராமனின் மனம் பாசத்தில் மூழ்கியது;

உடல் நடுங்கியது,

மெய்சிலிர்த்தது;

தாமரைக் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

:

சீதையின் பண்பு, பாசம், நற்குணங்களை நினைத்து,

ராமன் நாணத்துடன் பேசுகிறார்;

அவரது நிலையை பார்த்த லக்ஷ்மணன், ஆஞ்சநேயர்,

உருகுகிறார்கள் வெதும்பும் நெய்போல்.

 

ராமன், சீதாவின் இழப்பையும், அவமானத்தையும் சிந்திக்கிறார்;

அவளது நற்குணங்களை நினைத்து, மனம் உருகுகிறது.

அந்த தருணத்தில், ஜாம்பவான்  பேசுகிறார்

அறிவும் வீரமும் கலந்த வார்த்தைகள்.

 

தொடரும்


No comments: