Friday, March 20, 2026

 

இனிமேல் நம்மை யாரும் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என்று சொல்ல முடியாது.



காரணம் சொத்துகளுக்கு வங்கிகள் reverse mortgage தலை கீழ் கடன் அல்லது மீள் கடன் வழங்குகின்றன. அதாவது வயதானவர்கள் தங்களிடம் உள்ள சொத்துகளை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் இறந்தவுடன் வங்கிகள் அந்த சொத்தை விற்று கடனைச் சரி செய்து விடும். இது நம் நாட்டிலும் செயல் முறையில் உள்ளது. இதனால் வயதானவர்கள் யாருடைய தயவையும் எதிர்பாராமல் வாழ்க்கையை அமைதியாக கழிக்க முடியும்.


இதைப் போலவே இந்த மீள் கடன் திட்ட்டத்தின் கீழ் ஒரு புதிய வகையும் சேர்க்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தங்கள் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளின் மதிப்பிடப்பட்ட மதிப்பின் அடிப்படையில் இந்தக் கடனைப் பெற அணுகலாம், கடனைப் பெற்று அவர்களின் வாழ்நாளில் நிம்மதியாக அனுபவிக்கலாம்.கடன் வாங்குபவர் இறந்தவுடன், அடமானம் வைக்கப்பட்ட உடல் உறுப்புகளை சந்தையில் விற்று வங்கிகள் கடனை நேர் செய்யும்.



இந்தத் திட்டம் அமெரிக்காவில் செயல் படுத்தப்பட்டிருப்பதாக .ஒரு செய்தி படித்தேன். இதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் "அதிகரித்து வரும் செலவுகளின் சகாப்தத்தில், இயற்கை எங்களுக்கு வழங்கியதை ஏன் பணமாக்கக்கூடாது?"என்றும் வயதானவர்கள் விவாதிக்கின்றனர். நாம் பெற்ற பிள்ளைகள் நம்மை காப்பாற்றுகிரார்களோ இல்லையோ நமது உடல் உறுப்புகள் நம்மைக் காப்பாற்றும். இந்தியாவில் இந்தக் கடன் அறிமுகப்படுத்தப்பட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.



ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா!!!

 



Banks Unveil Innovative Reverse Loans for Human Organs

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 51

 


நேற்றைய தொடர்ச்சி.................

 

“सुकुमारि सुहाई़' என்று இராமன் சீதையைச் சொல்வதன் பொருளாவது  “அவள் மிகவும் மென்மையானவள்.  கரடுமுரடான இந்த வனத்திற்கு வரத் தகுதி அற்றவள். ஆனாலும் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக உடன் வந்தாள். இப்பொழுது அவளில்லாமல் எனக்கு எந்தச் சுகமும் இல்லை” என்கிறான்.

 

இராமன் காட்டின் கடினமான பாதைகளையும், முட்களையும், கற்களையும் கடந்து வந்துள்ளான். ஆனால் அவருடன் வந்திருக்கும் சீதை, அரண்மனையின் பஞ்சு மெத்தையில் வளர்ந்தவள். அந்த மென்மையான பெண், இவ்வளவு கடுமையான காட்டிற்கு வந்திருக்கிறாளே என்ற இரக்கத்தையும் வியப்பையும் வெளிப்படுத்தவே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

இவ்வளவு மென்மையானவளை நான் காட்டிற்கு அழைத்து வந்திருக்கிறேன்" என்று சொல்லும்போது, அவளைப் பாதுகாக்க வேண்டிய இராமனின் பொறுப்பும், அவளது தியாகமும் அங்கே பெரிதாகத் தெரிகிறது.

 

சுகுமாரி' என்பது ஒரு பலவீனமான நிலையைக் குறிக்கவில்லை; அது 'மென்மை' என்பதைக் குறிக்கிறது. ஜே.கே சொல்வது போல, ஒரு உண்மையான அன்பு அல்லது மலரைப் போன்ற மனம் என்பது எதற்கும் வளைந்து கொடுக்காது, ஆனால் அது மிகவும் மென்மையானது.

 

சீதை அரண்மனைச் சூழலில் வளர்ந்தவள். ஆனால் காட்டிற்கு வரும்போது, அந்த பழைய சூழலைத் துறந்து, புதிய சூழலை) அப்படியே ஏற்றுக் கொள்கிறாள்.

 

  இராமர் சீதையை ஒரு 'சுகுமாரி'யாகப் பார்க்கிறார் ஆனால் அந்த மென்மை தான் காட்டின் அத்தனை துயரங்களையும் தாங்கும் வலிமையை அவளுக்குத் தருகிறது. ஜே.கே-வின் பார்வையில், மென்மை என்பது பலவீனம் அல்ல, அதுவே உச்சகட்ட உணர்திறன்.

 

துளசிதாசர் 'சுகுமாரி' என்று அழைப்பதன் மூலம், சீதையின் உடல் மென்மையையும், உள்ளத்தின் வலிமையையும் ஒரே நேரத்தில் நமக்கு உணர்த்துகிறார். இவ்வளவு மென்மையானவள், தன் கணவனுக்காக இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்கிறாள் என்பதே அந்தச் சொல்லின் பின்னால் இருக்கும் ரகசியம்.

 

சீதை "சுகுமாரி" என்று அழைக்கப்படுவது, அவள் தனிப்பட்ட மென்மை மட்டுமல்ல, உலகின் சக்தி, அழகு, பாசம் அனைத்தையும் தாங்கும் சக்தி என்பதை உணர்த்துகிறது.

 

வனவாசம், துன்பம், அசுரர்களின் அச்சம் — இவற்றின் நடுவில் அவள் மென்மை, பாசம், சக்தி ஆகியவற்றின் சின்னமாக நிற்கிறாள்.

 

இது இராமாயணத்தின் ஒரு அழகான தருணம்: இராமன் தன் வீரத்தைச் சொல்லாமல், தன் மனைவியின் மென்மையைச் சொல்லி, அவளை மீட்கும் பணி எவ்வளவு அவசியம் என்பதை ஹனுமனுக்கு உணர்த்துகிறார்.

 

சுகுமாரி சீதை — வனத்தில் வாடினாள், 

துன்பம் தாங்கிடா — துயரம் கூர்ந்தினாள், 

அவளின் மென்மையை — உலகம் உணரவே, 

அருளோடு இராமன் — ஹனுமனைச் சொன்னான்!

 

-----------


அவள் சுகுமாரி — சுகத்தில்  வளர்ந்தவள், 

அவள் துன்பம் காண — இருதயம் உருகினான், 

அவளைக் காப்பது — தர்மம், புனிதம், 

அவள் வாழ்வை மீட்க — வீரன் ஆணையிட்டான்!



 

தொடரும்..................

 

Thursday, March 19, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு


பதிவு எண் 50


நேற்றைய தொடர்ச்சி...............


..ஹனுமனிடம் இராமன் சொல்வதாவது “இராமன், இலக்ஷ்மணன் என்பது எங்கள் பெயர். நாங்கள் இருவரும் சகோதரர்கள். எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள். இங்கு வனத்தில் ஒரு அரக்கன் எனது மனைவி வைதேஹியைக் கவர்ந்து சென்று விட்டான். ஆஞ்சநேயரே! நாங்கள் அவளைத்தான் தேடிக் கொண்டு அலைகிறோம். நாங்கள் எங்களைப் பற்றிய வரலாற்றைக் கூறிவிட்டோம். அந்தணரே! உங்களைப் பற்றிய கதையைத் தெளிவாகச் சொல்வீராக.” என்றான்.


இதையே ஆத்யாத்ம இராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா?


अहं दाशरथी रामस्त्वयं मे लक्ष्मणोऽनुजः ।

सीतया भार्यया सार्धं पितुर्वचनगौरवात् ॥ १९


॥आगतस्तत्र विपिने स्थितोऽहं दण्डके द्विज ।

तत्र भार्या हृता सीता रक्षसा केनचिन्मम ।

तामन्वेष्टुमिहायातौ त्वं को वा कस्य वा वद ॥“


நான் தசரத புத்திரன் ராம். இவன் எனது தம்பி இலக்ஷ்மணன். தந்தையின் உத்திரவுப்படி நான் எனது மனைவி சீதையுடன் வனம் வந்தேன். தண்டகாரண்யத்தில் என் மனைவி சீதையை ஒரு இராட்சஸன் அபகரித்துச் சென்று விட்டான். அதனால் எனது மனைவி சீதையைத் தேடி இங்கு வந்தோம்” என்று தன்னைப் பற்றிய விவரங்களை எடுத்துச் சொல்கிறான்


இராமன்.இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். ஆத்யாத்மா இராமாயணத்தில் இராமன் தனது மனைவியின் பெயர் சீதை என்று குறிப்பிடுவதோடு சீதையை அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான்; சீதையைத் தேடி நாங்கள் இங்கு வந்தோம் என்று மூன்று முறை குறிப்பிடுகிறான். ஆனால் துளசி இராமாயணத்தில் இராமன் ஹனுமனிடம் ஒரு அரக்கன் கடத்திச் சென்ற தனது மனைவியான வைதேஹியைத் தேடி அலைவதாகக் குறிப்பிடுகிறான். மனைவியின் பெயரை ஜானகி என்றோ சீதை என்றோ குறிப்பிடவில்லை.


விதேஹம் என்றால் தேகமற்ற உடல் என்று பொருள். அப்படியானால் வைதேஹி என்றால் தேகமற்றவள் என்று பொருள். இது எவ்வாறு சாத்தியமாகும்.? ராம சரித மானஸ் ஆரண்ய காண்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இதை முன்னமே நீங்கள் படித்திருக்கலாம். ஒரு நாள் இராமன், இலக்ஷ்மணன் வனத்தில் பழங்கள் பூக்களைச் சேமிக்கச் சென்றபோது சீதையிடம், ‘ஒரு காரணமாக நீ இந்த அக்னி குண்டத்தில் இறங்கி அக்னி பகவானிடம் அடைக்கலமாக இரு” என்று சொன்னதும் எந்த வித மறுப்பும் சொல்லாமலும், காரணம் கேட்காமலும் சீதை நெருப்பில் இறங்கி அக்னி பகவனை அடைந்தாள்.


நெருப்பில் இருந்து மாயா சீதை வெளி வந்தாள் மாயா சீதை என்றால் பார்பவர்கள் கண்களுக்கு சீதையின் உருவம் தெரியும். ஆனால் உண்மையில் உடலற்றவள். இது இலக்ஷ்மணனுக்கும் தெரியாது. அதைத்தான் அரக்கன் தூக்கிச் சென்றது மாயா சீதையைத் தான் உண்மை சீதையை அல்ல என்று உணர்த்தத்தான் தேகமற்ற சீதையை தூக்கிச் சென்றான் (வைதேஹி) என்று இராமன் சொன்னான் என்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


தொடரும்

Wednesday, March 18, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 49

 

நேற்றைய தொடர்ச்சி.................

 

ஆனால் ஹனுமன் கேட்ட எந்த கேள்விகளுக்கும் இராமன் விடை சொல்லவில்லை. காரணம் ஹனுமன் சொன்ன பிரம்மா, விஷ்ணு, சிவன், நர நாராயணன் இவர்கள் யாரையும் விட தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. சிவபெருமான் இராமாயணக் கதையைப் பார்வதியிடம் சொல்லுகின்றார். இராமனின் பிறப்பைப் பற்றி சொல்லும் சமயம்

 

 

हृदयँ बिचारत जात हर केहि बिधि दरसनु होइ।

गुप्त रूप अवतरेउ प्रभु गएँ जान सबु कोइ॥

  

“மனதிற்குள் எனக்கு குழந்தை இராமனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது. இராமனே யாருக்கும் தெரியாமல்  மனிதனாக அவதாரம் எடுத்துள்ளார். இந்த நேரத்தில் நான் அவரைப் பார்க்கச் சென்றால் எல்லோருக்கும் அவதார ரகசியம் தெரிந்து போகுமே. அதனால் நான் செல்லவில்ல” .இதனால் தான்  இராமன் தனது அவதார ரகசியத்தை வெளியே ஹனுமனிடம் சொல்ல விரும்பாமல் தன்னை ஒரு மனிதனாகவே காட்டிக் கொண்டான்.

 


ஹனுமனுக்கு இராமனின் பதில்

   

कोसलेस दसरथ के जाए । हम पितु बचन मानि बन आए॥ १॥

नाम राम लछिमन दोउठ भाई । संग नारि सुकुमारि सुहाई॥ २॥

इहाँ हरी निसिचर बेदेही। बिप्र फिरहिं हम खोजत तेही॥ ३॥

आपन चरित कहा हम गाई । कहहु बिप्र निज कथा बुझाई॥ ४॥



இதனைக் கேட்ட ஸ்ரீ இராம பிரான் கூறினார் “ நாங்கள் கோசல நாட்டு மன்னர் தசரதனின் மைந்தர்கள். தந்தையின் கட்டளையை ஏற்று வனத்திற்கு வந்தோம்”. இங்கு தனது  அவதார ரகசியத்தை வெளிப்படுத்தவில்லை (இராமன் வனவாசத்திற்கு கிளம்பும்போதே தனது தாயான கௌசல்யாவிடம் சந்கேதமாகத் தெரிவித்து விட்டான். துளசிதாசர் அயோத்திய காண்டத்திலேயே நமக்குத் தெரிவித்துவிட்டார்.

 


पिताँ दीन्ह मोहि कानन राजू। जहँ सब भाँति मोर बड़ काजू॥3॥

 

தாயிடம் இராமன் சொல்கிறான் “அன்னையே! தந்தை வனராஜ்ஜியத்தை எனக்கு தந்தருளியுள்ளார்.. அங்குதான் எனக்கு முக்கியமான வேலைகள் உள்ளன” என்று சூசகமாகச் சொல்லிவிட்டான்.)

 

தொடரும்

Tuesday, March 17, 2026

 




துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 48

 

நேற்றைய தொடர்ச்சி.................

 

ஆத்யாத்ம இராமாயணத்திலும் ஹனுமன் இராமனிடம் இதே கேள்வியைக் கேட்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

 

मायया मानुषाकारौ चरन्ताविव लीलया ।

भूभारहरणार्थाय भक्तानां पालनाय च ॥ १

 

“இந்தப் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காகவும் பக்தர்களைக்  காக்கவும் தாங்கள் மாயையினால் மனித அவதாரம் எடுத்துள்ளீர்களா?” என்று ஹனுமன் கேட்கிறான்.

 

மேலும்  ஹனுமன் இராமனிடம் தாங்கள் ஒரே உருவில் இரு அவதாரங்களா? என கேள்வி கேட்கிறார். அதவாது தாங்கள் சிவா விஷ்ணுவா? பிரம்மா விஷ்ணுவா அல்லது நர நாராயணர்களா?  அல்லது அகில உலகைக் காக்க வந்த இரட்சகன் இரு உருவில் வந்துள்ளீர்களா? என்று கேட்கிறார். ஆக முதலில் மூன்று தேவர்களா? என்று கேட்டுவிட்டு பிறகு நர நாராயணர்களா என்ற இருவரா? என்று கேட்டுவிட்டு இறுதியில் அகில உலகைக் காக்க வந்த இரட்சகனா என்று ஒருமையில் கேட்கிறார். முதலில் ஸ்தூலம் என்று அனுமானித்துவிட்டு பிறகு சூக்ஷமம் என்று அனுமானிக்கிறார். இறை வடிவத்தை அறிந்து/புரிந்து கொள்ள இதுவே சரியான முறை.. பாகவதத்தில் கூறி உள்ளபடி

 


श्रुत्वा स्थूलं तथा सूक्ष्मं रूपं भगवतो यति: ।

स्थूले निर्जितमात्मानं शनै: सूक्ष्मं धिया नयेदिति ॥ ३९ ॥

  

முக்தியில் ஆர்வமுள்ளவன், முக்தியின் பாதையை ஏற்பவன், நிபந்தனைக்குட்பட்ட வாழ்வின் பாதையில் ஈர்க்கப்படாதவன், யதி அல்லது பக்தன் என்று அழைக்கப்படுகிறான். அத்தகு மனிதன், பகவானின் பிரம்மாண்டமான விஸ்வரூபமான விராட் ரூபத்தைப் பற்றி சிந்திப்பதன் மூலம் முதலில் தனது மனதைக் கட்டுப்படுத்த வேண்டும், பின்னர் இவ்விரு வடிவங்களையும் கேட்ட பிறகு படிப்படியாக மகாவிஷ்ணுவின் ஆன்மீக ரூபமான கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஒருவனின் மனம் ஸமாதியில் நிலைத்திருக்கிறது. பக்தித் தொண்டின் மூலம், பக்தர்களின் இலக்கான பகவானின் ஆன்மீக வடிவத்தை ஒருவன் உணர முடியும். இதனால் அவரது வாழ்க்கை வெற்றிகரமானதாக மாறுகிறது. 

 

அதாவது महत्-सेवां द्वारम् आहुर् विमुक्ते: என்று கூறப்படுகிறது: முக்தியின் பாதையில் முன்னேற ஒருவன் விரும்பினால், அவன் மகாத்மாக்களுடன், தொடர்பு கொள்ள வேண்டும், மோக்ஷத்தை நாடுபவர்களுக்கு, பெரியவர்களின் சேவை என்பது ஒரு வாயிலாகும்" என்று கூறுகிறார்கள்.

  

பேரருள் பெற்ற பெருமக்கள் சேவை 

பேரொளி வீதி விடுதலைக் கோவில்! 

தீர்வினை தீரும் திருநெறி யாதும் 

தெய்வம் எனக் காண் — சத்புருஷன் பாதம்

 

  ஏனென்றால் அத்தகைய சங்கத்தில் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ள பரம புருஷ பகவானின் பெயர், உருவம், குணங்கள் மற்றும் சாதனங்களைப் பற்றி கேட்பதற்கும், விவரிப்பதற்கும், நாமஜபம் செய்வதற்கும் முழு வாய்ப்பு உள்ளது.


தொடரும்

Monday, March 16, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 47

 

நேற்றைய தொடர்ச்சி

 

भूमिर्भारेण मग्ना दशवदनमुखाशेषरक्षोगणानां

धृत्वा गोरूपमादौ दिविजमुनिजनैः साकमब्जासनस्य ।

गत्वा लोकं रुदन्ती व्यसनमुपगतं ब्रह्मणे प्राह सर्वं

ब्रह्मा ध्यात्वा मुहूर्तं सकलमपि हृदावेदशेषात्मकत्वात् ॥ ६॥

 

சிவன் பார்வதிக்கு இராமனின் வரலாற்றை சொல்லும்போது, முதலில் இராம அவதாரம் எடுத்த கதையைச் சொல்லுகிறார்.  அதில் இராவணன் மற்றும் அரக்கர்களின் கொடுமையையும் அவர்களின் பாரத்தையும் தாங்க முடியாமல் பூமா தேவி ஒரு பசுவின் உருவில் தேவர்களையும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு பிரம லோகம் சென்று பிரம்மாவிடம் அழுது கொண்டே இராவணனைப் பற்றி முறையிட்டு தங்களைக் காக்குமாறு வேண்டுகிறாள். அதைக் கேட்ட ஒரு நொடியில் பிரம்மா என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். உடனே அவர் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்.

 

भगवन् रावणो नाम पौलस्त्यतनयो महान् ।

राक्षसानामधिपतिर्मद्दत्तवरदर्पितः ॥ २३॥

 ---------

त्रिलोकीं लोकपालान्श्च बाधते विश्वबाधकः ।

मानुषेण मृतिस्तस्य मया कल्याण कल्पिता ॥ २४॥

 ------------

अतस्त्वं मानुषो भूत्वा जहि देवरिपुं प्रभो ॥ २५



  “முனிவர் புலஸ்தியரின் பேரன் யாராலும் தன்னைக் கொல்ல முடியாத வரம் ஒன்று என்னிடம் வாங்கி அதன் காரணமாக மூன்று உலகங்களிலும் உள்ள தேவர்கள் முனிவர்கள் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறான். அவன் செய்யும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவனுக்கு ஒரு மனிதன் மூலம் மரணம் கிடைக்கவேண்டும் என்று நான் தீர்மானித்துள்ளேன். தாங்கள் மனித அவதாரம் எடுத்து அவனை வதைத்து எல்லா உலகங்களையும் காத்தருள வேண்டுகிறேன்”  என்று மகாவிஷ்ணுவிடம். வேண்டிக்கொண்டார். “அந்த மனித அவதாரம் தாங்கள்தானா? என்று ஹனுமன் வினவினான்.

 

தொடரும்

 

Sunday, March 15, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 47 



நேற்றைய தொடர்ச்சி

  

இராம இலக்ஷ்மனர்களைப் பார்த்ததும் அவர்களைப் புகழ்ந்த ஹனுமான் தாங்கள் யார் என்று வினவுகிறான்.

  

यतो वा इमानि भूतानि जायन्ते। येन जातानि जीवन्ति। यत् प्रयन्त्यभिसंविशन्ति। तद्विजिज्ञासस्व। तद् ब्रह्मेति॥

 

என்று தைத்ரிய உபநிஷத்தில் சொல்லியுள்ளபடி ‘எவரால் இந்த உலகம் சிருஷ்டிக்கபடுகிறதோ, எவரால் இந்த உலகம் பாதுகாக்கப்படுகிறதோ, எல்லாம் முடிந்தபின் எவருக்குள் எல்லோரும் சென்று ஐக்கியமாகிறார்களோ அந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்”

  

“எவருடைய உத்திரவால் படைக்கப்பட்டு நாங்கள் வானரம், கரடி போன்ற ஜீவ ராசிகளானோமோ தாங்கள் அவரில்லையா (அந்த பிரம்மா இல்லையா?)”

 

துளசிதாசர் “अखिल थुवन पति”  என்ற  பதப் பிரயோகம் தருகிறார்.  இதைச் சொல்லவேண்டிய காரணம் இந்த உலகமே இராவணனால் பாதிக்கப்பட்டுள்ளது. என்பதைத் தெரிவிப்பதற்காக ..உடனே மனித அவதாரம் எடுத்துள்ளீர்\களோ என்பதைக் குறிப்பிட “मनुज अवतार”   என்று குறிப்பிடுகிறார். அதன் காரணம் இராவணனின் மரணம் மனிதனின் கையில் 'राबन मरन मनुज कर जाँचा।' என்று பால காண்டத்திலேயே குறிப்பிட்டுள்ளார். இராவணனின் கொடுமைகளைப் பற்றிச் சொல்லும்போது

 


बरनि न जाइ अनीति घोर निसाचर जो करहिं।

हिंसा पर अति प्रीति तिन्ह के पापहि कवनि मिति॥183॥

 


அரக்கர்களின் கொடுமைகளை வார்த்தையால்  வர்ணிக்க முடியாது என்று எவனொருவன்  அஹிமசையின்பால் நாட்டம் கொள்கிறானோ அவனுடையை பாவங்களுக்கு எல்லையே இல்லை என்று சொல்கிறார். ஆத்யாத்ம இராமாயணத்தில்.


அநீதி அரக்கர் ஆட்சி,

அருளினை மறந்திடு வாழ்ச்சி;

வன்மம் பெருகி பாவம்,

அளவிலா தீமை நிறைந்தது.

======

 

அரக்கர் ஆட்சி — அநீதி பெருக்கு!

அருளை மறந்தோர் — இருள் வழி நடப்பு!

கொலைக் களிப்பில் களிகூரும் மனம்,

பாவம் அளவிலா பெருகிடும் உலகம்!



தொடரும்