Tuesday, August 4, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 174

 

ஒரு இராஜ்ஜியத்தில் கொடிய பாவம் செய்த கைதி அந்த அரசனைப் பார்த்து “உனக்கு நான் ஏதாவது குற்றம் செய்தேனா? என்னை நீ எப்படித் தண்டிப்பாய்? என்று கேட்பது நியாயமாகுமா? அப்படிக் கேட்டால் அதுவும் ஒரு குற்றமாகாதா? அதுபோலத் தானே நீயும் என்னைப் பார்த்து உனக்கு நான் ஏதாவது குற்றம் செய்தேனா? எதற்காகக் கொன்றாய்” என்று கேட்டாய். அது மூர்க்கத்தனமான கேள்வி. ஆனால் நான் அரசனா என்று நீ ஐயப்படவும் நியாயமில்லை.”

 

भरतः तु महीपालो वयम् तु आदेश वर्तिनः || ४-१८-२३

त्वम् च धर्मात् अतिक्रान्तः कथम् शक्यम् उपेक्षितुम् |

गुरु धर्म व्यतिक्रान्तम् प्राज्ञो धर्मेण पालयन् || ४-१८-२४

भरतः काम युक्तानाम् निग्रहे पर्यवस्थितः |

वयम् तु भरत आदेशम् विधिम् कृत्वा हरीश्वर |

त्वत् विधान् भिन्न मर्यादान् निग्रहीतुम् व्यवस्थिताः || ४-१८-२५

 

“தார்மீகனாகிய பரதன் இப்போது அரசனாக இருக்கிறான். அவன் எள்ளளவும் தர்மத்தை மீறுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டான். நாங்கள் அவனது உத்திரவுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அரசுப் பிரதிநிதிகள், நாடெங்கிலும் ஒவ்வொரு குற்றவாளியையும் அரசனே வந்து தண்டிக்க முடியுமா?  ஆதலால் அரசரின் பிரதிநிதிகளாகிய எங்களின் மூலம் தண்டிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அப்படி எங்களால் நிறைவேற்றப்படும் தண்டனைகளும் அரசரே நிறைவேற்றுவதாகத்தான் பொருள்படும். நீ உனக்குரிய தர்மத்தை மீறினாய். ஆதலால் நாங்கள் உன்னை வெறுமனே எப்படி விடமுடியும்? குரு தர்மத்தை மீறியவனை, காம வழியில் இது போல அத்து மீறி செல்பவர்களை, பரதன் அடக்குவதில் முனைந்து இருப்பவன். அந்த பரதன் அறிவு மிகுந்தவன், தர்மத்தோடு இராஜ்யத்தை ஆண்டு வருபவன். நாங்களோ பரதன் கட்டளையைச் சிரமேற் கொண்டு அதுவே விதி என்று நடப்பவர்கள். வானர ராஜனே, உன்னைப் போல சட்டத்தை, கட்டுப்பாட்டை மீறுபவர்களைத் தண்டிக்கவே நியமிக்கப் பட்டிருக்கிறோம், ஆகவே நாங்கள் உன்னை எப்படி தண்டனை ஏதும் இல்லாமல் விடமுடியும்?”

 

सुग्रीवेण च मे सख्यम् लक्ष्मणेन यथा तथा |

दार राज्य निमित्तम् च निःश्रेयसकरः स मे || ४-१८-२६

 

“சுக்ரீவனோடு நான் செய்து கொண்டிருக்கும் நட்பு இலக்ஷ்மணனுக்கும் எனக்கும் உள்ள நட்பு போன்றதாகும். அந்த நட்புக்கோ இழந்து போன தாரத்தையும் இராஜ்ஜியத்தையும் மறுபடியும் அடையும்படி ஒருவருக்கொருவர் தன்னால் ஆன உதவிகளைச் செய்வதே பெரிய பலம் ஆகும். (இப்போது நான் உன்னைக் கொன்று சுக்ரீவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்பதில் உதவியதால், இனி அவன் சீதையை மீட்பதில் எனக்கு உதவி நலம்புரிவான்" என்பது பொருள்.)”

 

தொடரும்.................


No comments: