Thursday, August 6, 2026



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 176

 

 

 

வாலி மன்னிப்புக்கோரல்

 

 

सुनहु राम स्वामी सन चल चातुरी मोरि।

प्रभु अजहूँ मैं पापी अंतकाल गति तोरि॥9

 

வாலிக்குத் தனது தவறு தெரிந்தது. “அண்ணலே! நான் எனது புத்தி பலத்தைக் கொண்டு தங்களை எதிர்த்து நிற்க முடியாது.  நீங்கள் பிரபு. நான் பாவி,  இதை உணர்கிறேன்.  இந்தக் கடைசி நேரத்தில் நான் உங்களைச் சரணடைந்தேன். உங்களைச் சரணடைந்ததும் எனது பாவங்கள் முடிந்து போயின ” என்று அழுது புலம்பினான்.இன்னும் நான் பாவியா? என்று கேட்டுச்  அவனது தலை சாய்ந்தது. सन्मुख होई जीव मोहि जबहिं, कोटि जनम अघ नासहिं तबहिं : எவன் ஒருவன் தூய்மையான மனத்துடன் இராமனைச் சரணடைகிறானோ அவனது கோடி பிறப்பின்  பாவங்கள் கரைந்து போய்விடுகின்றன . முண்டகோ உபநிஷத் ல் சொல்லப்பட்டுள்ளது.

 

भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशया:।

चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे॥'

 

உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஆகிய அனைத்திற்கும் காரணமான பரம்பிரம்மத்தை நேரடியாக அனுபவித்தவுடன், இதயத்தில் உள்ள அஞ்ஞான முடிச்சு அறுபடுகிறது; எல்லாச் சந்தேகங்களும் நீங்குகின்றன; அவனுடைய கர்மங்களும் அழிகின்றன.**

 

இந்த மந்திரம் கூறும் மூன்று பலன்கள்

 

உபநிஷத் மூன்று விஷயங்களைச் சொல்கிறது.

 

  இதய முடிச்சு அறுபடுகிறது

 

**भिद्यते हृदयग्रन्थिः**

 

இதுதான் மிகவும் முக்கியமானது. இதய முடிச்சு என்றால் என்ன?

 

ஆதி சங்கரர் கூறுகிறார்:

அவித்யா (அறியாமை) + காமம் (ஆசை) + கர்மம் (செயல்)**

 

இந்த மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த முடிச்சு.

 

உதாரணம்

 

இருட்டில் ஒரு கயிற்றைப் பார்த்து "பாம்பு!"என்று பயப்படுகிறோம்.அந்தப் பயம் பாம்பினால் வரவில்லை.அறியாமையால் வந்தது.விளக்கு ஏற்றியவுடன்பாம்பு மறைவதில்லை.ஏனென்றால்அது இருந்ததே இல்லை. அஞ்ஞானம்தான் மறைகிறது.அதுபோல"நான் உடல்"என்ற தவறான எண்ணம் அறுபடுகிறது. எல்லாச் சந்தேகங்களும் நீங்குகின்றன.

 

 

தொடரும் 

No comments: