Thursday, November 27, 2025

 




வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஸ்வயம்ப்ரபை பகுதி 

 

பதிவு எண் 370

 

 

நேற்றைய தொடர்ச்சி...............

 


ஸ்ரீராமன்‌ பத்தினியாம்‌ சீதாதேவி தனைராவணன்‌

ஆருமிலா வேளையிலே அபகரித்துப்‌ போனானம்மா

சீதைதனைத்‌ தேடவந்தோம்‌ சிமையெங்கும்‌

சுத்திப்பார்த்தோம்‌

மாதரசாம்‌ சீதையம்மாள்‌ வசிக்குமிடந்‌ தெரியவில்லை

 

------------------

 

பசிதாகம்‌ பொ றுக்காமலே பறந்‌துவந்தோ மிவ்விடத்து

௮சதிமிக வாகையினால்‌ அருந்தத்தந்து சீதையுள்ள

ஸ்தலமதனைத்‌ தெரிழ்திருந்தால்‌ சற்றுக்கிர்பை

கொண்டுரைப்பீர்

அலைந்துமிக நொந்தோமென்று அனுமார்சொல்லக்‌

கேட்டந்தப்பெண்‌

 

--------------------

 

பரிதாபம்‌ மிகவடைந்து பசிதாகங்‌ களைத்தீர்க்க

அருந்தும்நல்ல பலாதிகளை அளித்தாளம்மா

அன்புடனே.  

ஜானகியைத்‌ திருடிப்போன சங்கதிக்காய்‌ விசனப்பட்டு

நானறியேன்‌ ஜானகியாள்‌ நன்விலத்தி லிருக்குமிடம்‌

செம்மையாக வெங்குந்தேடிச்‌ சீதைதனைப்‌ பாருமையா

அம்மன்சீதை யிருக்குமிடம்‌ அறித்‌துகொள்‌வீ

ரென்றுமிக

 

----------------

 

அனுக்கிரசித்து வானரரை அரைநொடியில்‌ -

வெளியில்தாட்ட

மனதிலெண்ணி யெல்லோருக்கும்‌ மனமுவந்து

சொல்லுகிறாள்‌

திருப்பிப்போக மார்க்கமது தெரியாதையா வுங்களுக்கு

அரைநிமிஷம்‌ கண்கள்‌மூடி அப்படியே இருப்பீராயின்‌ .

இந்தவிடம்‌ விட்டுமுந்தி இருந்தவிடம்‌ சேர்த்‌துவேனான்‌

அந்தப்படி செய்யுமென்று அவளுரைத்த

படிசெய்தார்கள்‌

 

-------------------

 

 

 

மூடிக்கண்ணைத்‌ திறக்குமுன்னே முன்னிருந்த

விடத்தில்வந்து

கூடினார்கள்‌ வானரர்கள்‌ நாடிக்கண்ணைத்‌

திறந்து பார்த்தார்‌

அதிசயித்தார்‌ ஆனந்தித்தார்‌ அதன்பிறகு விதித்தகெடு

மதியிலெண்ணிப்‌ பார்த்தாரம்மா மனதிலட்சங்‌

கொண்டாரம்மா

 

தொடரும்...


No comments: