Sunday, July 5, 2026

 


காலை வணக்கம்

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 148

 

நேற்றைய தொடர்ச்சி..............

 

வாலி தாரையிடம் சொல்வதன் தொடர்ச்சி.............

  

துளசிதாசர் जौं कदाचि என்ற பதத்தைப் போடுகிறார். இதன் பொருள் இராமன் தர்மம் அறிந்தவர். ரகுநாதர். ரகுவம்சத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் தர்மாத்மாக்கள்  நான் அவருக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. धर्मज्ञः च कृतज्ञः च कथम् पापम् करिष्यति || அதனால் என்னை ஏன் அவர் கொல்வார்? மேலும் அவர் சமபார்வை கொண்டவர். அவருக்கு சுக்ரீவன் எப்படியோ அப்படித்தான் நானும். அதனால் என்னை அவர் ஏன் தண்டிக்கப் போகிறார்? அவர் இலக்ஷ்மணனுடன்    வந்தால் रामो यदि समायातो लक्ष्मणेन सम॑ प्रभु: எனக்கு அவர்மீது அளவிலா அன்புவரும் 'तदा रामेण मे स्नेहों भविष्यति न संशय:। நான் அவரை வணங்கி அழைத்து வருவேன். आनेष्यामि गृहं साध्वि नत्वा तच्चरणाम्बुजम्. அப்படியானால் அவர் ஏன் என்னைக் கொல்லப் போகிறார்? என்று வினவினான். 

 

மீண்டும் तो पुनि होउँ सनाथ என்ற பதங்களை எடுத்துக் கொள்வோம், வாலிக்குத் தெரியும் இராமனின் கையால் தான் கொல்லப்பட்டால் கண்டிப்பாக முக்தி கிடைக்கும் என்று, வால்மீகி இராமாயணத்திலேயே இதைப் பற்றிய செய்தி உள்ளது

 

शक्यम् दिवम् आर्जयितुम् वसुधाम् अपि शासितुम् |

त्वतः अहम् वधम् आकांक्षयन् वार्यमाणो अपि तारया ||

सुग्रीवेण सह भ्राता द्वन्द्व युद्धम् उपागतम्

 

தாரை என்னைத் தடுத்தும் இராமன்  கையால் மரணம் வேண்டியே சுக்ரீவனுடன் யுத்தம் செய்தேன் என்று சொல்கிறான். தாரை சொல்லியும் கேளாமல் அவன் யுத்தம் செய்ய ஓடி வந்தான். காரணம் அவன் கோபத்தின் பிடியில் இருந்தான்.

 

தொடரும்..............

 


Saturday, July 4, 2026

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 147

 

நேற்றைய தொடர்ச்சி..............

 

சுக்ரீவனுடன் யுத்தம் செய்ய கிளம்பிய வாலியிடம் தாரை சுக்ரீவனுக்கு துணையாக இராமன் இருப்பதாக சொன்னவுடன் வாலி இராமன் அவ்வாறு செய்யமாட்டான் என்று சொல்வதின் தொடர்ச்சி ..........

  

ஆத்யாத்ம இராமாயணத்திலும் கிட்டத்தட்ட இதே கருத்து சொல்லப்பட்டுள்ளது.

 

तामालिङ्ग्य तदा वाली सस्नेहमिदमब्रवीत् ॥ ३३॥

 

स्त्रीस्वभावाद्बिभेषि त्वं प्रिये नास्ति भयं मम ।

रामो यदि समायातो लक्ष्मणेन समं प्रभुः ॥ ३४॥

 

तदा रामेण मे स्नेहो भविष्यति न संशयः ।

रामो नारायणः साक्षादवतीर्णोऽखिलप्रभुः ॥ ३५॥

 

भूभारहरणार्थाय श्रुतं पूर्वं मयानघे ।

स्वपक्षः परपक्षो वा नास्ति तस्य परात्मनः ॥ ३६॥

 

तस्माच्छोकं परित्यज्य तिष्ठ सुन्दरि वेश्मनि

 

இங்கு भीरु என்ற பதப் பிரயோகம் போடுகிறார் துளசிதாசர்.   அந்த வார்த்தையின் பொருள் கோழை. வாலி, உனக்கு  பெண்மைக்குரிய இயல்பான பயம் உள்ளது स्त्रीस्वभावाद्‌ बिभेषि 'त्वम्‌ என்றும் தனக்கு  नास्ति भयं मम' எந்தவித பயமும் இல்லை என்பதை பீரு என்ற ஒரு வார்த்தையில் நமக்கு உணர்த்தி விடுகிறார் துளசிதாசர்.

 

இங்கு तौ पुनि होब सनाथ' என்ற பதங்களுக்கு தீன்ஜி என்ற உரையாசிரியர் புதுவித விளக்கம் கொடுக்கிறார். அதாவது நீ மீண்டும் கணவனுடன் சேர்ந்து விடுவாய்? என்று  வாலி சொல்வதாக உரையாசிரியர் தெரிவிக்கிறார் அதாவது அது எப்படி சாத்தியமாகும். வாலி தாரையிடம் “உனக்கு யுத்தம் வந்தால் நான் கொல்லப்படுவேன். நீ விதவை ஆகிவிடுவாய் என்ற பயம்தானே. ஆனால் அப்படி இல்லை. நீ பஞ்சகன்யாக்களில் ஒருவள். ஆகையால் நீ மீண்டும் திருமணம் செய்து கொண்டு சுமங்கலி ஆகிவிடுவாய். இதனால் நீ கவலை கொள்ளவேண்டாம்.” என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த पुनि என்ற வார்த்தைக்கு பொருளே கிடையாது என்று உரையாசிரியார் தெரிவிக்கிறார்.

 

தொடரும்..............

 


Friday, July 3, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 146

  

சர்கம் 5

 

 

कह बाली सुनु भीरु प्रिय समदरसी रघुनाथ।

जौं कदाचि मोहि मारहिं तौ पुनि होउँ सनाथ॥7

  

மீண்டும் துளசிதசரிடம் வருவோம்/ தன்னைத் தடுத்து நிறுத்தும் தாரையிடம்   வாலி கூறினான் “என் ஆசை மனைவியே! கேள்! உன்னிடம் பெண்மைக்குரிய பயம் இருக்கிறது. எனக்கு எந்தப் பயமும் இல்லை. அந்த இரகுநாதன் சமநோக்கு உடையவர். அவர் ஒரு போதும் என்னை மாய்க்க மாட்டார். அப்படி மாய்த்தாலும் எனக்கு முக்திபேறு கிடைத்துவிடும். இராமன் சாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணன் ஆவார்.  அவர் பூமியின் சுமையை குறைக்க இராமனாக அவதாரம் எடுத்துள்ளார். இது எனக்குத் தெரியும். அவர் பரமாத்மா. அவர் பேதம் பார்ப்பதில்லை. நீ கவலைப்படாமல் தைரியமாக இரு”இவ்வாறு கூறிவிட்டு வாலி போருக்குப் புறப்பட்டான்.

 

கம்ப ராமாயணத்திலும் தாரை, “தலைவனே! அந்தச்‌ சுக்கிரீவனுக்கு இனிய உயிர்போன்ற நண்பனாக அமைந்து, இராமன்‌ என்பவன்‌, அவனுடன்‌ சேர்ந்து கொண்டு, உன்‌ உயிரை மாய்ப்பதற்கு வந்திருக்கிறான்‌என்று. நம்மிடம்‌ நெருங்கிய அன்புடையவர்கள்‌ கூறினார்கள்‌என்றாள்‌ அதற்கு

இவ்வாறு பதில் கூறுகிறான் வாலி “

 

 

உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது

அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்

இழைத்தவற்கு, இயல்பு அல இயம்பி என் செய்தாய்?

பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்' என்றான்.

 ===== 

இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது

பெருமையோ? இங்கு இதில் பெறுவது என்கொலோ?

அருமையின் நின்று, உயிர் அளிக்கும் ஆறுடைத்

தருமமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ?

 

  

'பிறப்பு அநாதியாய்‌ வருதலாற்‌ பலபிறப்புகளில்‌ தாம்‌ செய்து சேர்த்த கொடிய கருமங்களை யொழிக்கும்‌ உபாயத்தைக்‌ காணாமல்‌ வருந்திக்‌ கதறுகின்ற உலகத்தவர்கள்‌ உய்யுமாறு அவதரித்துத்‌ தரும மார்க்கங்களையெல்லாம்‌ தான்‌ காட்டும்‌ ஆண்டகையான அந்த இராமபிரான்‌ திறத்தில்‌, “அவன்‌ சுக்கிரீவனுக்குத்‌ துணையாய்‌ இடையே புகுந்து உன்னைக்‌ கொல்ல வந்திருக்கின்றான்‌' என்று சிறிதும்‌ தகுதியில்லாத வார்த்தையைச்‌ சொல்லிப்‌ பெருங்குற்றம்‌ புரிந்தாய்‌:

 

இவ்வுலக மக்களின்‌ இம்மைப்‌ பயனாகிய புகழையும்‌, மறுமைப்‌ பயனாகிய புண்ணியத்தையும்‌ தன்‌ மனத்தால்‌ உணர்ந்து அறிந்து செயல்படும்‌ இயல்புடைய இராமபிரானுக்கு, நீ கூறிய, சுக்கிரீவனோடூ உடன்‌ சேர்ந்து என்னை மாய்ப்பதற்கு வருகிறான்‌ என்பது, பெருமையளிக்கக்‌ கூடிய செயலாகுமோ?

 

ஒரு படி மேலே சென்று

 

ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி, ஈன்றவள்

மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு

ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்

போற்றலை; இன்னன புகறல்பாலையோ?'

 

ஈன்றவளான கோசலையின்‌ மாற்றாளான கைகேயி கட்டளையிட, அவளுடைய புதல்வனான பரதனுக்குச்‌ சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன்‌ அவ்வரசச்‌ செல்வத்தை நல்கிய பெரியோனைப்‌ போற்றிப்‌ பாராட்டாதது அல்லாமல்‌, மாறாக அவனை இத்தகைய வார்த்தைகளால்‌ பழிக்கவும்‌ செய்கிறாயே?” என்று வாலி, தாரையைக்‌ கண்டிக்கிறான்‌.

 

தொடரும்..............


Thursday, July 2, 2026

  

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 145 

 

காலன் எல்லோரையும் வெற்றி கொள்கிறான். ஆனால் இராம இலக்ஷ்மணன் இருவரும் அந்தக் காலனையும் வெற்றி கொள்வர். அவர்களுக்கு முன்னால் நீங்கள் எம்மாத்திரம்? என்று தாரை வாலியை சுக்ரீவனுடன் யுத்தம் செய்ய வேண்டாம். அவனுக்குத் துணையாக இராமன் உள்ளான் என்று சொல்கிறாள்..

 

இங்கு कोसलेस सुत लछिमन रामा என்று கூறுகிறார் துளசிதாசர். அதாவது தாரைக்கு இராமன் மற்றும் இலக்ஷ்மண் இருவரும்  இறைவன் அவதாரம் என்று தெரிய வந்துள்ளது. அதாவது இங்கு இரண்டுவிதமான கதை சொல்லப்படுகிறது.

 

 

முன் ஜன்மத்தில் தசரதன் மனுவாக இருந்துள்ளார். கோசலை அவரது மனைவியான சதரூபா வாக இருந்து தவம் செய்து மகாவிஷ்ணு தங்களுக்கு மகனாகப் பிறக்கவேண்டும் என தவம் செய்து மகாவிஷ்ணு அவர்களின் அடுத்த பிறவியில் அவர்களது மகனாகப் பிறப்பதாக உறுதி அளித்தார். அதன்படி இராமன்  கோசலைக்கு மகனாகப் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

அடுத்து  காஷ்யப முனிவரும் இதுபோலத் தவம் செய்து மகாவிஷ்ணு தனக்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்று வேண்ட அவர்களுக்கும் कश्यप अदिति महातप कीन्हा ।तेहि के मै पूरब वर दीन्हा ।।ते दशरथ कौशल्या रूपा ।कौशलपुरी प्रकट नर भूपा ।। வாக்களித்தார். காஷ்யப முனிவரும் அவது மனைவியும் தசரதன் கோசலையாகப் பிறந்து  அவர்களுக்கு மகனாக இராமன் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது.

 

तिन्‍्ह के गृह अवतारिहाँ जाई। रघुकुलतिलक सो चारिउ भाई

 

இங்கு ஒரு கேள்வி எழலாம். துளசிதாசர் முதலில் இலக்ஷ்மணன் பெயரைக் குறிப்பிட்டு பிறகு இராமன் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.  இதற்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது போரில் முதல் சேவகர்கள் தான் செல்வர் பின்னால் தான் அரசன் வருவான். அதுபோல் இங்கு சேவகனான இலக்ஷ்மணன் பெயர் வந்துள்ளது பிறகு இராமன் பெயர் இடம் பெற்றுள்ளது.

 

 

தொடரும்..............


Wednesday, July 1, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 144   

 

நேற்றைய தொடர்ச்சி..........

 

“காலன் எல்லோரையும் வெற்றி கொள்கிறான். ஆனால் இராம இலக்ஷ்மணன் இருவரும் அந்தக் காலனையும் வெற்றி கொள்வர். அவர்களுக்கு முன்னால் நீங்கள் எம்மாத்திரம்? என்று தாரை வாலியை சுக்ரீவனுடன் யுத்தம் செய்ய வேண்டாம் என சொல்கிறாள்..

 

 

பால காண்டத்தில் சீதையைத் திருமணம் செய்துகொண்டு அயோத்தி திரும்பும் வழியில் இராமன் பரசுராமனை எதிர்கொள்கிறான்.

 

देव दनुज भूपति भट नाना। समबल अधिक होउ बलवाना॥

जौं रन हमहि पचारै कोऊ। लरहिं सुखेन कालु किन होऊ॥

 

யுத்தம் என்று வந்து விட்டால்,, தேவர்களோ, அசுரர்களோ அரசர்களோ எவரையும் எளிதில் வெல்வேன் அந்தக் காலன் உட்பட என்று இராமனே சொல்கிறான்.

 

அதுபோல ரிஷ்ய முக மலையில் இலக்ஷ்மணனுடன் சீதையைப் பற்றிய நினைவுகளுடன் இராமன் அமர்ந்துள்ளான்.

 

 

बरषा गत निर्मल रितु आई। सुधि न तात सीता कै पाई॥

एक बार कैसेहुँ सुधि जानौं। कालुह जीति निमिष महुँ आनौं॥

 

“மழைக்காலம் முடிந்து இலையுதிர் காலம்  தொடங்கப் போகிராது. ஆயினும் சீதையைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. அவளைப் பற்றிய விவரம் தெரிந்து விட்டால் அந்தக் காலனையும் வெற்றி கொண்டு சீதையை இங்கு அழைத்து வருவேன்.” என்று மனம் வருந்திக் கூறுகிறான்.

 

कोसलेस सुत लछिमन रामा என்று கூறுகிறார் துளசிதாசர். அதாவது தாரைக்கு இராமன் மற்றும் இலக்ஷ்மண் இருவரும்  இறைவன் அவதாரம் என்று தெரிய வந்துள்ளது. அதாவது இங்கு இரண்டுவிதமான கதை சொல்லப்படுகிறது. அது என்ன?

 

 

தொடரும்..............