துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 173
மீண்டும் துளசிதாசரிடம் வருவோம்
இராமன் பதிலில் இருந்து ஒரு விஷயம்
தெளிவாகிறது. அதாவது யுத்தம் செய்வது தண்டனை கொடுப்பது இரண்டும் வேறு வேறு
விஷயங்கள் யுத்தம் எதிரியுடன் செய்வது தண்டனை குற்றம் செய்தவனுக்குக் கொடுப்பது..
யுத்தத்தின் முடிவு தண்டனை அல்ல. குற்றவாளி நீதிபதியிடம் “எனக்குத் தூக்கு தண்டனை
கொடுத்து அதர்மம் செய்துவிட்டாய். எனது கையில் வாளைக் கொடு . நீயும் வாளெடுத்து
வா. உன்னால் என்னைக் கொல்ல முடிந்தால் அது தர்மம்.”. பதிலுக்கு நீதிபதி நான்
உன்னுடன் போரிட வரவில்லை. நீ தவறு செய்தாய் . அதற்குத் தண்டனை கொடுத்தேன். மற்றபடி
உனக்கு நான் எதிரி அல்ல” என்பதாகும்.
இராமனும் இதைத்தான் வாலியிடம் சொல்கிறான்.
நான் உனக்கு எதிரி இல்லை..நமக்குள் விரோதம் இருந்து நான் உன்னிடம் போர் புரிய
வந்திருந்தால் நீ சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. நான் உனக்குத் தண்டனை கொடுக்கவே
வந்தேன்.. காரணம் நீ குற்றவாளி.. உறவையே தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவன்
தண்டனைக்குரியவன். நீ அடுத்தவன் மனைவியையே அபஹரித்தவன் ஆதலால் பெரிய
குற்றவாளி..உனது தண்டனையில் கடுமையைக் காட்டுவதற்காகவே வேடுவன் போல உன்னை மறைந்து
நின்று கொல்ல வேண்டியதாயிற்று.. வாலி இராமன் சொன்ன பதிலில் உள்ள நியாயத்தைப்
புரிந்து கொண்டான். அதனால் பதில் ஏதும் பேசவில்லை. बन्धु बधूरत कह कियौ बचन निरुत्तर बालि
मूढ़ तोहि अतिसय
अभिमाना। नारि सिखावन करसि न काना॥
मम भुज बल आश्रित तेहि
जानी। मारा चहसि अधम अभिमानी॥5॥
இராமன் மேலும் பேசினான் “உன் மனைவி உனக்கு உபதேசித்தாளே, அதற்குச்
செவி சாய்த்தாயா? சுக்ரீவனுக்கு எனது
புஜவலிமை துணை நிற்கிறது என்பதை அறிந்த
பிறகும் அவனைக் கொல்ல விரும்பினாய். இது
முறையா”? “.
तुलसी लोहा काठ संग, तरत किरत जल लाह ।
बड़ेन बृहन देव है, जाको पक्षरत बाह ॥
“இரும்பும் மரமும் சேர்ந்து கப்பல்
போலக் கடலைக் கடப்பதுபோல், எளியவன் இறைவன் मम भुज बल பக்கம் சேர்ந்தால், அவனும் வாழ்க்கைச் சிரமக் கடலை பாதுகாப்பாகத் தாண்டி விடுகிறான்”
என்ற நம்பிக்கையை இந்தச் சுருக்கமான வாக்கியம்
எடுத்துக் காட்டுகிறது.
தொடரும்