Sunday, November 30, 2025

 







காலை வணக்கம்

 

வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஸ்வயம்ப்ரபை பகுதி

 

பதிவு எண் 373

 



நேற்றைய தொடர்ச்சி



 

ஆத்யாத்ம இராமாயணத்தில் ஸ்வயம்ப்ரபை  இராமரைக் கண்டதும் உணர்ச்சி பொங்க பேசுவதின் தொடர்ச்சி.............

 



 =======================================================================

न तेऽस्ति कश्चिद्दयितो द्वेष्यो वाऽपर एव च ।

त्वन्मायापिहितात्मानस्त्वां पश्यन्ति तथाविधम् ॥ ७१॥

==========================================


 

தங்களுக்கு துவேஷி யென்றாவ.து, இஷ்டர்‌ என்றாவது, உரியர்‌ என்றாவது, பிறர்‌ என்றாவது ஏற்படுகிறவர்கள்‌ யாரும்‌ இல்லை, மாயையில்‌ கட்டுப்பட்ட மனமுடையுவர்கள்‌ தங்களை சிலருக்குத் துவேஷி, சிலருக்கு இஷ்டன் என்று நினைக்கிறார்கள்.




===========================================

अजस्याकर्तुरीशस्य देवतिर्यङ्नरादिषु ।

जन्मकर्मादिकं यद्यत्तदत्यन्तविडम्बनम् ॥ ७२॥

===========================================


 

 

ஜன்மம்‌ இல்லாதவரும்‌, செய்கையில்லாதவரும்‌, ஈசனுமாகிய தங்களுக்கு, தேவர்கள்‌, மானிடர்கள்‌, திரியக்குகள்‌ முதலியவற்‌றால்‌, ஜன்மமும்‌, கருமமும்‌ உண்டென நினைச்கத்தக்கதா யிருக்கிறது, :




=========================================================================

त्वामाहुरक्षरं जातं कथाश्रवणसिद्धये ।

केचित्कोसलराजस्य तपसः फलसिद्धये ॥ ७३॥

 

कौसल्यया प्रार्थ्यमानं जातमाहुः परे जनाः ।

दुष्टराक्षसभूभारहरणायार्थितो विभुः ॥ ७४॥

 

ब्रह्मणा नररूपेण जातोऽयमिति केचन ।

श‍ृण्वन्ति गायन्ति च ये कथास्ते रघुनन्दन ॥ ७५॥

===========================================

 


 

சிலர்‌, இயக்கர்‌ முதலினோர்‌ தங்களுடைய கதைகளைச்‌ சிரவணம்‌ செய்து பலன்‌ அடைவதற்காக உண்டானவர்‌ என்று தங்களைக்‌ கூறுகிறார்கள்‌, மற்றும்‌ பலர், கோசல ராஜனுடைய தவத்தின் பலன் சித்தி பெறுவதற்கு, அவ.தாரமானவர்‌ என்று சொல்லுகிறார்கள்‌. பிண்னும்‌ ௮நேகர்‌, துஷ்டர்களான இராக்ஷசர்களை வதை செய்து, பூமி பாரத்தை யொழிக்கும்படி பிரமதேவர்‌ பிரார்த்‌.திக்க, அதற்காக அவதாரம்‌ செய்தவர்‌ என்று சொல்லுகிறார்கள்.




=========================================================================

पश्यन्ति तव पादाब्जं भवार्णवसुतारणम् ।

त्वन्मायागुणबद्धाहं व्यतिरिक्तं गुणाश्रयम् ॥ ७६॥

================================================================


 

ஓ இரகு நந்தன!  எந்த மானிடா, தங்கள்‌ கதைகளைக்‌ கேட்கிறார்களோ அல்லது கீர்த்தனம்‌ செய்கிறார்களோ ௮வர்கள்‌ ஸம்ஸாரக்‌ கடலைக்‌ கடக்க உதவும்  தங்களுடைய பாதார விந்தங்களைச்‌ தரிசிக்கிறார்கள்.



 

தொடரும்

Saturday, November 29, 2025

 




வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஸ்வயம்ப்ரபை பகுதி

 

பதிவு எண் 372

 

நேற்றைய தொடர்ச்சி.....................

 

ஹனுமான் அங்கதான் மற்ற வானரர்களை உபசரித்து வழியனுப்பிவிட்டு ஸ்வயம்ப்ரபை நேராக இராமனை சந்திக்க வந்துவிடுகிறாள் என்று ஆத்யாத்ம இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை  முந்தைய பதிவில் பார்த்தோம்..... அதன் தொடர்ச்சி............இராமனைப் பார்த்து மகிழ்ச்சியுற்று சொல்கிறாள்:

 

 

 

ममैतदेव रूपं ते सदा भातु हृदालये ।

राम ते पादयुगलं दर्शितं मोक्षदर्शनम् ॥ ६६॥

 

अदर्शनं भवार्णानां सन्मार्गपरिदर्शनम् ।

धनपुत्रकलत्रादिविभूतिपरिदर्पितः ।

अकिञ्चनधनं त्वाद्य नाभिधातुं जनोऽर्हति ॥ ६७॥

 

ஓ இரகு சிரேஷ்ட.! உலகத்தில்‌ தங்களுடைய தத்துவத்தை யாரேனும்‌ ஒருவன்‌ ௮றிவானா? இரகுவீர! என்னுடைய இருதயத்‌தில்‌ தங்களுடைய இந்த ரூபமே எப்போதும்‌ விளங்கவேண்டும்‌. ஓ இரகோத்தம: தங்களுடைய இரண்டு பாத பத்மங்களின்‌ தெரிசனமானது மோக்ஷத்தைக்‌ கொடுக்கக்கூடியது, ஸம்ஸாரமாகிய  சமுத்திரத்தில்   ௮ழுத்தாதது, நன்மார்க்கத்தை நன்று தெரிவிக்கக்‌ கூடியது.  ஏழைகளுக்குப்‌ பொருள்‌ போன்ற பிரபுவே! பொருள்‌, பு.த்‌திரன்‌, களத்திரம்‌, முதலிய ஐஸ்வரியங்களால்‌ மிகவும்‌ மமதை கொண்ட ஜீவர்கள்‌ தங்களுடைய குணங்களைச்‌ சொல்லுவதற்கு யோக்யதை யடையார்கள்‌.

 

 

निवृत्तगुणमार्गाय निष्किञ्चनधनाय ते ॥ ६८॥

 

नमः स्वात्माभिरामाय निर्गुणाय गुणात्मने ।

कालरूपिणमीशानमादिमध्यान्तवर्जितम् ॥ ६९॥

 

समं चरन्तं सर्वत्र मन्ये त्वां पुरुषं परम् ।

देव ते चेष्टितं कश्चिन्न वेद नृविडम्बनम् ॥ ७०॥

 

ஓ இரகுராம! மாயையற்றவரும்‌, தன்‌ : ஸ்வரூபத்திலேயே இரமிப்பவரும்‌, குணங்கள்‌ ௮ற்றவரும்‌, குணசொருபரும்‌,. ஏழைகளுக்குப்‌ பொருளாகியவரும்‌ ஆகிய தங்களுக்கு நமல்காரம்‌, காலரூபியும்‌, பிரபுவும்‌, ஆதி மத்‌தி-அந்தம்‌ இவைகள்‌ இல்லாதவரும்‌, எங்‌கும்‌ சமமாக இருப்பவரும்‌ ஆகிய பரமபுருவன்‌ என்று தங்களை நான் நினைக்கிறேன்..ஓ தேவ! தங்களுடைய சரித்திரத்தை ‌ யாரும்‌ அறியார்கள்‌.

 

தொடரும்

 


Friday, November 28, 2025

 





வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஸ்வயம்ப்ரபை பகுதி

 

பதிவு எண் 371

 

நேற்றைய தொடர்ச்சி.....

 

ஹனுமனையும் வானர வீரர்களையும் குகைக்கு வெளியே அனுப்பிவிட்டு ஸ்வயம்ப்ரபை என்ன செய்தாள்? என்று ஆத்யாத்ம இராமாயணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

அந்த ஸ்வயம்பிரபையும்‌, குகையை விட்டு சீக்கிரமாக  ஸ்ரீராகவருடைய ௮ருகாமையில்‌ வந்து   சேர்ந்தாள்‌.

 

 

कृत्वा प्रदक्षिणं रामं प्रणम्य बहुशः सुधीः ।

आह गद्गदया वाचा रोमाञ्चिततनूरुहा ॥ ६०॥

 

दासी तवाहं राजेन्द्र दर्शनार्थमिहागता ।

बहुवर्षसहस्राणि तप्तं मे दुश्चरं तपः ॥ ६१॥

 

गुहायां दर्शनार्थं ते फलितं मेऽद्य तत्तपः ।

अद्य हि त्वां नमस्यामि मायायाः परतः स्थितम् ॥ ६२॥

 

௮ங்கு ஸ்ரீராமர்‌, இலக்ஷ்மணர்‌, ஸுக்ரிவன், இம்மூவரையும்‌ கண்டு, ஸ்ரீராமரைப்‌ பல தடவை: பிரதக்ஷிணம்‌ செய்து, நமஸ்கரித்து, மயிர்க்‌ கூச்சலடைந்து, தாழ்ந்த குரலுடன்‌ கூறுகிறாள்‌.

 

“ஓ இராஜ சிரேஷ்டராகிய ஸ்ரீராமப்பிரபுவே! நான்‌ தங்களுக்கு ஊழியம்‌ செய்பவள்‌, தங்களைத்‌ தரிசனம்‌ செய்வதற்கு  வந்தேன்‌. தங்களுடைய தெரிசனத்துக்காகக், குகையில்‌ இருந்து ஆயிர வருஷங்களாகத்‌ தவம்‌ செய்தேன்‌, இப்போதுதான்‌ நான்‌ செய்த தவம்‌ பலித்தது,

 

सर्वभूतेषु चालक्ष्यं बहिरन्तरवस्थितम् ।

योगमायाजवनिकाच्छन्नो मानुषविग्रहः ॥ ६३॥

 

न लक्ष्यसेऽज्ञानदृशां शैलूष इव रूपधृक् 

महाभागवतानां त्वं भक्तियोगविधित्सया ॥ ६४॥

 

अवतीर्णोऽसि भगवन् कथं जानामि तामसी ।

लोके जानातु यः  कश्चित्तव तत्त्वं रघूत्तम ॥ ६५॥

 

மாயைக்கு அப்பால்‌ இருப்பவரும்‌, பூதங்கள்‌ யாவற்றுக்கும்‌ உள்ளிலும்‌ புறத்திலும்‌ உள்ள வருமாகிய தங்களை இப்‌போது நமஸ்கரிக்சிறேன்‌, தாங்கள்‌ மாயையாகிய இசையால்‌ மறைக்கப்பட்டு மானிட ரூபம்‌ தரித்‌திருக்கிறீர்கள்‌, ஸ்‌திரீகளைக்‌ கொண்டு ஜீவிப்பவன்‌) போல்‌ அஞ்ஞான கண்கள் உள்ளவர்களுக்குத் ‌ தாங்கள்‌ காணப்படமாட்டீர்கள்‌, சாத்வீக குணமுடைய சிறந்த பாகவதர்களாகிய பக்தி மார்க்கத்தை ௮னுஷ்டிப்பவர்கள்‌, பார்க்க வேண்டுமென்ற விருப்பத்தால்‌ தாங்கள்‌ அவதாரம்‌ செய்‌திருக்கிறீர்கள். தமோ குணமுடைய நான்‌ எவ்விதம்‌ தங்களைத்‌ தெரிந்து கொள்‌வேன்‌.

 

தொடரும்


Thursday, November 27, 2025

 




வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஸ்வயம்ப்ரபை பகுதி 

 

பதிவு எண் 370

 

 

நேற்றைய தொடர்ச்சி...............

 


ஸ்ரீராமன்‌ பத்தினியாம்‌ சீதாதேவி தனைராவணன்‌

ஆருமிலா வேளையிலே அபகரித்துப்‌ போனானம்மா

சீதைதனைத்‌ தேடவந்தோம்‌ சிமையெங்கும்‌

சுத்திப்பார்த்தோம்‌

மாதரசாம்‌ சீதையம்மாள்‌ வசிக்குமிடந்‌ தெரியவில்லை

 

------------------

 

பசிதாகம்‌ பொ றுக்காமலே பறந்‌துவந்தோ மிவ்விடத்து

௮சதிமிக வாகையினால்‌ அருந்தத்தந்து சீதையுள்ள

ஸ்தலமதனைத்‌ தெரிழ்திருந்தால்‌ சற்றுக்கிர்பை

கொண்டுரைப்பீர்

அலைந்துமிக நொந்தோமென்று அனுமார்சொல்லக்‌

கேட்டந்தப்பெண்‌

 

--------------------

 

பரிதாபம்‌ மிகவடைந்து பசிதாகங்‌ களைத்தீர்க்க

அருந்தும்நல்ல பலாதிகளை அளித்தாளம்மா

அன்புடனே.  

ஜானகியைத்‌ திருடிப்போன சங்கதிக்காய்‌ விசனப்பட்டு

நானறியேன்‌ ஜானகியாள்‌ நன்விலத்தி லிருக்குமிடம்‌

செம்மையாக வெங்குந்தேடிச்‌ சீதைதனைப்‌ பாருமையா

அம்மன்சீதை யிருக்குமிடம்‌ அறித்‌துகொள்‌வீ

ரென்றுமிக

 

----------------

 

அனுக்கிரசித்து வானரரை அரைநொடியில்‌ -

வெளியில்தாட்ட

மனதிலெண்ணி யெல்லோருக்கும்‌ மனமுவந்து

சொல்லுகிறாள்‌

திருப்பிப்போக மார்க்கமது தெரியாதையா வுங்களுக்கு

அரைநிமிஷம்‌ கண்கள்‌மூடி அப்படியே இருப்பீராயின்‌ .

இந்தவிடம்‌ விட்டுமுந்தி இருந்தவிடம்‌ சேர்த்‌துவேனான்‌

அந்தப்படி செய்யுமென்று அவளுரைத்த

படிசெய்தார்கள்‌

 

-------------------

 

 

 

மூடிக்கண்ணைத்‌ திறக்குமுன்னே முன்னிருந்த

விடத்தில்வந்து

கூடினார்கள்‌ வானரர்கள்‌ நாடிக்கண்ணைத்‌

திறந்து பார்த்தார்‌

அதிசயித்தார்‌ ஆனந்தித்தார்‌ அதன்பிறகு விதித்தகெடு

மதியிலெண்ணிப்‌ பார்த்தாரம்மா மனதிலட்சங்‌

கொண்டாரம்மா

 

தொடரும்...


 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஸ்வயம்பிரபை பகுதி  


பதிவு எண் 368

 

நேற்றைய தொடர்ச்சி...............

 

 

இராமாயணத்தின் ஸ்வயம்பிரபை பகுதியை முந்தைய  இரண்டு பதிவுகளில் படித்தோம். இது பற்றி நலுங்கு மெட்டு இராமாயணத்தில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்:

 

சீதையெங்கும்‌ காணாமலே சித்தமிக நொந்ததோடு

பாதைமிக வுண்டாயிற்றுப்‌ பசிதாகம்‌ பொறுக்காமல்‌

---

 

மரத்தடியி லிருந்துகொண்டு மயங்கியெல்லோ

ரிருக்கையிலே

பறத்துவரக்‌ சண்டாரப்போ பட்சிவர்க்கம்‌ -

வெகுவாகவே

நீராடி வருமவைகள்‌ நிலத்தில்ரிட்ச பிலத்தினின்‌று

தாராளமாய்‌ வருவதினால்‌ தாமுமந்தப்‌

பிலத்தில்சென்றால்‌

---

 

தாகசாந்தி யாகுமென்று தம்மிலெண்ணி

ஜாக்கிரதையாய்‌

ஊகமுடன்‌ பிலத்துவாரத்தில்‌ ஒன்றுசேர்ந்து

சென்றனர்கள்‌

இருள்மூடி யிருக்குமதில்‌ எல்லோரும்‌ போகையிலே

இருள்நீங்கி யொளிகாண எத்தனையோ நேர்த்தியாக

 

------------------

நசுரொன்று சுண்டதம்மா நான்குபக்கம்‌ காசுகளும்‌

வகைவகையாய்க்‌ கனிகளுள்ள வனங்களுந்தா

னிருந்ததம்மா

தேஜசுள்ள தபசியைப்போல்‌ திவ்யரூப ஸ்திரீயோருவள்‌

வசிக்கக்கண்டு அவள்பாதம்‌ வணங்கிநின்‌ றவளிடத்து

அனுமான்சொல்வான்‌ யாரம்மாநீர்‌ அழகியதாம்‌ நக

ருமேது?

எனக்கதனைச்‌ சொல்லுமென்றான்‌ இஷ்டங்‌

கொண்டே சொல்வானவள்‌

---

 

 

விசுவகர்மா சிருஷ்டிசெய்து வெகுகால மிதிலவனே –

வசித்துக்கொண்டு ஹேமையுடன்‌ வாழ்ந்துவந்தான்‌

இந்திரன்வந்து

அவனைவதை  செய்துவிட்டான்‌ அதன்பிறகு

ஹேமையவள்‌

இவடந்தனி லிருந்துவந்து என்னையிங்‌

கிருக்கச்சொல்லிக்‌

.

---------------

 

சுதியடைந்தா ளதுமுதலாய்க்‌ காலந்தனைக்‌

கழித் துக்கொண்டு

அதிகபச்தி தனைக்கொண்டு அருந்தவத்தைச்‌

செய்துகொண்டு

இருக்கின்றே‌ னெனதுபெயர் என்னவெனில்‌

சுவயம்பிர்பையே

அரிதான இடமிதிலே யாரும்வர லாகாதையா

தடங்கொண்டு வந்ததொரு சங்கதியைச்‌

சொல்லுமென்று

அடுத்துநிற்கும்‌ அநுமாரை அவள் கேட்க

அனுமார் சொல்வார்‌

---------------

தொடரும்